Sunday, February 24, 2013

பௌத்தர்களின் குடும்ப விழா பதிவு

பௌத்தர்களின் குடும்ப விழா பதிவு

இன்று மாலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா RCM  பள்ளியில் நடந்த நிகழ்வில் 80 கும் அதிகமானோர் பங்கேற்ற்று சிறப்பித்தனர் . மக்கள் பாடகர் கு.சா .முத்து அவர்களும் வந்திருந்து இதை போல பௌத்தர்களின் குடும்ப விழாவை விருதுநகர் மாவட்டத்திலும் அடுத்த மாதத்திலிருந்து நடத்த முயற்சி செய்வேன் என்று சொல்லி " சிங்கத்தை அதன் குகையில் " என்னும் விழிப்புணர்வு பாடலை பாடிச்சென்றார் .
மேலும் தலித் அல்லாதவர்களும் பௌத்தம் , தம்மம் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை குறித்து பேசியதும் இன்னோர் வியப்பு .

வரும் அக்டோபர் மாதம் வேலூர் ,திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து கோட்டை மைதானத்தில் 1000 பேர் பௌத்தம் ஏற்கும் நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளனர் .

தொடர்ந்து இந்த குடும்ப விழா நடக்கும் 

எங்களுக்கு வழிகாட்டிய Sc /ST  சங்கத்துக்கு நன்றி 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்