Sunday, May 8, 2016

காத்திருக்கும் கடமை

சென்ற ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில்  மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அதைப் போலவே பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடைசி இடம்.இந்த புள்ளி விவரத்தை இங்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கம் என்ன வென்றால். இன்று அரசு பள்ளிகளை பெருமளவு நம்பி இருப்பதும். அரசு பள்ளிகளில் படிப்பதும் விளிம்பு நிலை சமுகம் மக்கள்தான். வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே இன்று அரசு பள்ளிகளில் பெருமளவுக்கு தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப் புறத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

அதிலும் திருவண்ணாமலை போன்ற இடம்பெயர்வு மக்கள் அதிகம் இருக்கும் மாவட்டத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு அரசு பள்ளிகளும், அதன் மதிய உணவும் தான் முதன்மை புகலிடம். இன்று தனியார் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் இயல்பான ஒரு செய்திதான் படித்த நடுத்தர மக்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகினறனர்.

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து போனதற்க்கு முழு காரணம் ஏற்க வேண்டியது அந்த பள்ளி ஆசிரியர்களும், அந்த கிராம மக்களுமே,                                           

இதையும் படியுங்கள்