Tuesday, July 23, 2013

மரம் வெட்ட வாருங்கள்.

மரம் வெட்ட வாருங்கள்.

கேரளாவை கடவுளின் நிலம் என்று எப்படி வர்ணிக்கின்றார்கள் என்றால், அதன் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், அங்கும் நம்மைப் போலவே, வறட்சியும், நீர் பற்றாக்குறையும் இருந்திருக்கின்றது ஒரு காலத்தில்....

அவர்கள் அதற்கான காரணத்தை ஆய்ந்து பார்த்ததில், அங்கு அதிகமாக முளைத்திருந்து, சீமை கருவேலம், முள்வேலி, தைல மரம் இவைகள்தான், நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி, மழை பொழிவை தடுக்கின்றன என்று கண்டறிந்தனர்...

உடனே ஒரு சமுக இயக்கமாகவே அங்குள்ள மக்கள் அனைவரும் மாறி அவர்கள் நிலம், மற்றும் அவர்களின் ஊரில் இருந்த சீமை கருவேலம், முள் வேலி மரம், தைலமரம் ஆகியவற்றை வேறோடும் ,வேறடி மண்ணோடும் வெட்டி பெயர்தெடுத்தார்கள்

அத்துடன் மண்ணுக்கேற்ற மரத்தை நட்டு பயிரிட்டுடார்கள் இன்று கேரளம் சுற்றுச்சூழல் வளத்துடன், கடவுளின் நிலம் என்ற பெருமையோடு அழைக்கப்படுகின்றது 6000 நதிகள் ஓடுகின்ற மாநிலமாக திகழ்கின்றது...
நான் இதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன்... நான் மட்டும் அல்ல சபரி மலைக்கு போகின்ற அணைவருமே பார்க்கலாம்... கேரள எல்லையில் ஒரு முள்வேலி மரத்தையோ, சீமை கருவேல, கருவேலம் மரத்தையோ பார்க்க முடியாது... ஆனால் தமிழ்நாட்டு எல்லையில் இருந்து இதை நீங்கள் பார்க்க முடியும்...

இதையே நாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முள்வேலி மரம் இல்லாத கிராமம் கிடையாது... சீமை கருவேலம், கருவேலம் மரம் இல்லாத ஏரிகளே கிடையாது... தைலமரம் வளர்காத விவசாயிகளே இல்லை....ஏன் இந்த நிலை... நமக்கு இதன் விளைவுகள் தெரியாதா? எல்லாம் தெரியும், தெரிந்திருந்தும் நான் வளர்பதால் மட்டும் தமிழ்நாட்டுக்கு மழை பொழிவு குறைவுபடுமா என்ன என்னும் இருமாப்பும் , ஆனவம், மற்றும் அக்கரையின்மை, அறியாமை எல்லாமே சேர்ந்து ஆட்டு விக்கின்றது...

உண்மையில் கோடை காலங்களில் வெயில் கொளுத்துவது எப்படி என்பதை நாம் உணர்ந்து பார்த்தால் தெரியும்.. கோடைதோறும் வேலுரில் வெயில் 100 பாகையை தாண்டும், அதே அளவு விருதுநகரிலும் வெயில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் முள்வேலி, மற்றும் சீமை கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகம் அதனால் வெயிலின் தாக்கமும் அதிகம். நிலத்தடி நீர்மட்டமும் குறைய இந்த மரங்களும் ஒரு காரணம்...

நமக்குள் என்று ஒரு இயக்கமாய் மாறி ஒழிக்கப்பட வேண்டிய மரத்தை ஒழிக்கப் போகின்றமோ தெரியவில்லை... 

Monday, July 22, 2013

இங்கு நடப்பதெற்கெல்லாம் யார் காரணம்...

இங்கு நடக்கும்
கொலைகளுக்கெல்லாம்
யார் காரணம்...

சாதி வெறி கொலைகளுக்கும்.
அரசியல் கொலைகளுக்கும்.
சொத்து கொலைகளுக்கும்,

பெண் பித்து கொலைகளுக்கும்
சுதந்திர கொலைகளுக்கும்.
வறுமை கொலைகளுக்கும்

மத கொலைகளுக்கும்
மர்ம கொலைகளுக்கும்
கௌரவ கொலைகளுக்கும்...
யார் காரணம்...

வல்லவன் வகுத்ததே
வாய்கால் என்ற மரபு
இப்போது இயக்கி
கொண்டிருக்கின்றது
அனைவரையும்...

பணம் இருந்தால்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
சட்டத்தை சட்டைப் பைக்குள்
வைத்துக் கொள்ளலாம்
என்னும் மனோபாவம்
வந்து விட்டது எல்லோருக்கும்.

அரசியல் வாதிகளை
அடிமையாக்கி வைத்திருக்கின்றது
பன்னாட்டு நிறுவனங்கள்
தரும் கழிவு பணம்,
சுவிஸ்வங்கியில்
துாங்குது லஞ்சப் பணம்
வெள்ளை அழகிகளோடு உல்லாசம்
இதற்க்குத்தான் அரசியல் வாதிகளின்
அயல் நாட்டுப் பயணம்...

தலைவர்களே தறிகெட்டு
சுயநலத்தை தேடும் போது
தொண்டன் மட்டும்
துாய்மையாய் இருந்து
என்ன செய்ய போகின்றான்...

தலைவருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....

தொண்டருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....

கடவுளையும்
கர்த்தரையும்
நம்பிக்கொண்டிருப்போம்....
இறுதிநாள் வரை
ஏழையாய்...

ஏழைகளை மயக்க
எல்லாவற்றையும்
உருவாக்கி கொண்டிருக்கின்றது
கடவுளிருந்து
கவர்சி கன்னிகள் வரை

உலகமயம்,
தாரள மயம்,
தனியார் மயம்...

Sunday, July 7, 2013

மண்டகொளத்துார் கிராமம்

எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஓர் கிராமம் மண்டகொளத்துார். அங்கு வண்ணியர்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல், தலித்துகளின் எண்ணிக்கை. 150க்கும் குறைவாகவே இருக்கும். அந்த கிராமத்தில் இரட்டை குவலை முறை நடைமுறையில் இருக்கின்றது இன்றும்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் திரு. ஏழுமலை என்னும் அந்த கிராமத்தின் முதல் கல்லுாரி மாணவர் இந்த இரட்டை குவலைக்கு எதிராக எதிர்குரல் எழுப்பினார். அதனால் அந்த ஊரின் நுாலகத்துக்கு முன்பு அவரை அடிக்கவும், சாதி பெயரைச் சொல்லி திட்டவும், செய்தனர் வன்னியர்கள்.

அவர் அந்த பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாமல், காவல் நிலையம் சென்று வழக்கு கொடுத்தார்.பின்னர் ஊர் முழுவதும் ஏழுமலைக்கு எதிராக செலவு செய்வது என்று அவர்களின் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏழுமலையின் குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர்ந்தது.  வழக்கு பத்து ஆண்டுகள் நடந்தது. தாழ்த்தப்பட்டோர் வண்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை திரும்ப பெற ஏழுமலைக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்கும் அளவேயில்லை...

இறுதியில் ஏழுமலைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. வன்னிய சாதி இந்துக்கள் ஏழுமலை மற்றும் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டனர். மற்றும் அபராதம் கட்டினர். மீண்டும் அவரது குடும்பம் சொந்த ஊருக்கு வந்தது.  அதன் பிறகு அவர்கள் தாழ்த்தப்பட்டோரை தாக்குவதில்லை. பொது இடங்களில் சாதி பெயரை சொல்லி திட்டுவதில்லை.

 இந்த நிகழ்விற்க்கு அந்த பகுதியில் இருந்த ” அம்பேத்கர் விடுதலை முன்னனி” உறுதுணையாக இருந்தது. திரு. ஏழுமலை அவர்களுக்கு... இன்று ஏழுமலை ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கின்றார்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர் வண்முறையில் இறங்கினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே பாதுகப்பு ” தாழத்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்புச் சட்டம்” மட்டுமே.

இந்த நிலையில் ”பாட்டாளி மக்கள் கட்சியின் ” தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்பு சட்டத்தை திருத்தம் வேண்டும் என்று மற்ற சாதிகளை அனியப்படுத்திய நிகழ்வின் உள்நோக்கமாக இருப்பது தலித் மக்களின் மீது தொடுக்க இருக்கும் தொடர் தாக்குதலுக்கான திட்டமே.

இதையும் படியுங்கள்