Friday, February 15, 2013

கொச்சை படுத்தப்படும் குஷ்பூ

கொச்சை படுத்தப்படும் குஷ்பூ 

அண்மையில் இன்னொரு மணியம்மை என்று நடிகை குஷ்பூவை மையபடுத்தி வந்து இருக்கும் செய்தியை இந்த கோணங்களில் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது 



  1. வரிகளுக்குள் ஒளிந்து இருக்கும் செய்தியை போல் செய்திக்குள் ஒளிந்து இருக்கும் செய்தி 
  2. நடிகைகள் குறித்த ஊடக கண்ணோட்டம் 
  3. நடிகைகள் குறித்த சமுக கண்ணோட்டம் 
  4. குஷ்பூவின்  பங்களிப்பு தமிழ் சமுகத்துக்கு 
  5. சிறுபான்மை பெண்ணுக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்வு 
  6. திராவிட இயக்கங்களில் பெண்களுக்கான இருப்பு  
இன்று  உள்ள ஊடகங்கள் (அச்சு , காட்சி , மின் ) யாவுமே பார்பனர்  மற்றும் செட்டியார்களின் கைகளில் உள்ளது . இந்த நாட்டு மக்கள் படிக்க வேண்டிய செய்தியை தீர்மானிப்பவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் படிக்க வேண்டிய அளவையும் அவர்களே தீர்மானிக்கும் சக்தியாகிறார்கள் .நாட்டில் ஊடகங்களை கட்டுபடுத்தும் வலுவான அமைப்பு இல்லை . அதனாலே அவர்கள் யாரை குறித்தும் கொச்சை படுத்தி செய்தி வெளி இடுகிறார்கள் பின்,மறுப்போ எதிர்ப்போ வந்தால் வேறு வழிஇன்றி  பின் அட்டையில் கண்ணுக்கு தெரியாத அளவில் (சிகரெட் அட்டை மற்றும் மது பாட்டிலில் உள்ளது போன்று ) மன்னிப்பு வெளி வரும் .

குஷ்பூ 29.09.1970 இல் மும்பை நகரத்தில் பிறந்தவர் குழந்தை நட்சத்திரமாய் ஹிந்தி யில் அறிமுகமாகி தமிழில் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 மூலம் தமிழுக்கு அறிமுகமானார் . உண்மையான பெயர் நக்கத் கான் . தமிழ், தெலுங்கு, இந்தி,உருது, 
மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும், 2010 ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தம்மை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். 

குமுதத்துக்கும் குஷ்பூ வுக்கும் உள்ள பகை 1993 லில் இருந்து துவங்குகிறது . அப்போது இயக்குனர் சிகரம் திரு கே .பாலசந்தர் அவருடைய ஜாதி மல்லி படத்தில் குஷ்பூ நடித்து கொண்டு இருந்தார் . அந்த ஆண்டின் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வந்த குமுதம் இதழில் குஷ்பூகும், திரு .கே .பாலசந்தர்  அவருக்கும் கள்ள தொடர்பு என கொச்சையான செய்தியை வெளி இட்டது அதே இதழின் கடைசி பக்கத்தில் இது ஏப்ரல் முதல் வாரம் என தகவல் தந்து இருந்தது . பின்னர் பலத்த எதிர்ப்பால் மன்னிப்பு செய்தி வெளிட்டது குமுதம் இந்த எதிர்ப்பில் இறுதி வரை உறுதியாய் நின்றவர் நடிகை குஷ்பூ, மற்றும்  கே .பாலசந்தர் . 

திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு தான் முன்மொழிவேன் என சமீபத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியிருந்தார்.எனினும் இது தொடர்பிலான ஊடக பேட்டி ஒன்றின் போது பதில் அளித்த நடிகையும், திமுக பிரமுகருமான குஷ்பூ, அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் தான் தனது அடுத்த தேர்வு என்றே தலைவர் கூறியிருக்கிறார். இறுதி முடிவை பொதுக்குழு தான் எடுக்கும் என தெரிவித்திருந்தார். இது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததால், சென்னை சாந்தோமில் உள்ள குஷ்புவின் வீடு தாக்கபப்ட்டதுடன், திருச்சியிலும் அவர் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்நிலையில் தான் வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக குஷ்பூ தற்போது விளக்கம் அளித்துள்ளார். 
இதை ஒட்டிதான்  இன்னொரு மணியம்மை என தலைமை உடன் கொச்சை படுத்தப்பட்டு இருக்கிறார் . குஷ்பூ,  தான் சார்ந்து இருக்கும் கட்சிஇன்  வருங்கால தலைவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் விமர்சனத்தை தாங்கும் பண்பு இல்லை என்பதை வெளிபடுத்திய நிகழ்வு இது . கடமை கண்ணியம் கட்டுப்பாடு காற்றில் பறந்து போனதை காட்டிய நிகழ்வு  இது . மற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அண்ணாவின் சகிப்பு தன்மை இல்லாமல் போனதை எடுத்து காட்டும் செயல் இது . இதற்க்கு மேல் போனால் என் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன் .
அரசியலில் நடிகை நடிகர்கள் கூட்டம் சேர்க்கும் கருவியாகவே பயன் பட்டது தான் வரலாறு பத்திரிகை களும் நடிகைகளை சதை பண்டமாக காண்பித்தே தங்கள் விற்பனையை பெருக்கி கொள்கிறார்கள் . அது சம்பந்தமான செய்திகளை வெளி இட்டு பொது சமூகமும் நடிகைகளை உடலுறவு பண்டமாகவே பார்க்கிறது .
2 G  வழக்கில் சிறை இருந்த தோழர் கனிமொழிக்கு இனையான  அறிவாளுமையும் பன்மொழி புலமையும் தி .மு .க . வுக்கு தில்லியில் சமுக வக்காலத்து செய்ய பயன் படுவார் என்னும் தொலை நோக்கு திட்டத்தில் கட்சிக்கு தேவைப்பட்டார் நடிகை குஷ்பூ, தனது கருத்தை துணிச்சலோடு பதிவு செய்பவர் . 2005 இல் கற்பு குறித்து பேச அது கொந்தளிப்பை ஏற்ப்படுத்த  47 வழக்கு அவர் மேல் அத்தனையும் எதிர் கொண்ட நெஞ்சுரம் தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு சராசரி நடிகை இடம் காணாத ஒன்று .
குஷ்பூ பேசினால் குற்றம் , புடவை கட்டினால் எதிர்ப்பு என இத்தனை வன்மம் கொண்டு தாக்க காரணம் பார்பன , பணியா ஊடகங்களால் ஒரு முஸ்லிம் பெண்ணை உயர்த்தி பிடிப்பதா என்பது ஒருகாரணம் . மற்றொன்று ஒரு நடிகை இடம் இருந்து அறிவு சார் செய்திகள் இந்த சமுகத்துக்கு போக கூடாது என்னும் ஆணாதிக்க மனோபாவம் .
எல்லா கட்சிகளும் நடிகர்களை எப்படி கவர்ச்சிக்கு பயன் படுத்துகிறார்களோ. அதை போலவே நடிகைகளும் . குறிப்பாக பெண்களை அவர்களால் அப்படித்தானே பார்க்க முடிகிறது . மணியம்மையும் பெண் .குஷ்பூவும் பெண்   ஆணாதிக்க அரசியல் பார்வை .
எல்லாவற்றுக்கும் மேலாய் அதாரம் இல்லாத குற்ற சாட்டுகளால் ஒரு தனி நபரின் குடும்பமும் எந்த அளவு வேதனை படும் என்பதை  உணராமல் துதி படிகளின் கூட்டம் வேறு என்ன செய்யும் dmk  இதை வழக்கம் போல் எதிர்க்கட்சி சதி என்று சொல்லும் . உளவு துறை வேலை என சொல்லும் . 
முஸ்லிம் அமைப்புகள் சுந்தர் சி .யை திருமணம் செய்ததால் அவரை இந்துவாக பார்த்து அமைதியாய் இருக்கபோகிறதா ?
பெண்ணியிய அமைப்புகள் நடிகை குறித்து பேசினால் நாங்கள் பேசுவது இல்லை என மௌனம் சாதிக்க போகிறதா ?
இவர்கள் யாரும் குஷ்பூக்கு ஆதரவை தர வில்லை என்றாளும் குடும்பத்து பெண்களின் அதரவு உங்களுக்கு உண்டு தோழர் குஷ்பூ, 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்