Wednesday, February 13, 2013

பெண் அரசியல்

பெண் அரசியல் 



இந்தியாவில்  பெண்களுக்கான பாதுகாப்பற்ற தன்மை டில்லி மருத்துவ கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை  நிகழ்விலிருந்து துவங்குவதாக ஊடகங்களும் சமுக செயல் பட்டாலர்களும் கருத்து பரப்பி வருகிறார்கள் . ஒரு விசியத்தை வசதியாக மறந்து விட்டு . அது  இந்திய சமுகம் அடிப்படையில் ஆணாதிக்க சமுகம் இங்கு காலந்தோறும் பெண்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றது .

தேசிய மகளிர் ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் 17 நிமிடங்களுக்கு ஒரு பெண் பழமை வாதிகளின் மொழியில்  சொல்வது என்றால் கற்பழிக்கப் படுகிறாள் . அப்போது எல்லாம் கவலை படாத ஊடகங்களும் பொது சமூகங்களும் இப்போது அக்கறை கொள்வது ஏன் ?

சட்டங்கள் கடுமை ஆவதால் குற்றங்கள் குறையுமா ? தண்டனை அதிகமாவதால் சிறைகள் குறையுமா ? சட்டங்களை இயற்றுவது ஆண்கள் . மீறுவது ஆண்கள் . ( கவுண்டமணி சொல்வது போல் அரசியில இது எல்லாம் சகஜமப்பா ) என்று எடுத்துக்கொண்டே சமுகத்தில் உள்ள ஆணாதிக்கம்  பெண்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது .

கற்பழிப்பு மட்டும்தான் இந்திய பெண் சமுகத்தின் ஒட்டு மொத்த சிக்கல் என்பது போலவே ஊடகங்கள் சித்தரிப்பதும். அரசு அதற்க்கு சட்டத்தின் மூலம் தீர்வு  சொல்வதும் திட்டமிட்ட நாடகமாக தெரிகின்றது .

பெண்களுக்கான மற்ற சட்டங்கள் உண்மையாக கடை பிடிக்க படுகிறதா ? அதை  போலத்தான் இ ப்போது வரும் சட்டங்களும் . சட்ட பட்டியல் கிழே 

  • 1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
    • நாட்டில் இளவயது திருமணங்கள் நடப்பதும்  பேருகாலத்தில் ஊட்ட சத்து குறைபாடுகளால் பெண்கள் இறப்பது தொடர்கிறதே இது அரசுக்கு தெரியாதா ?
  • 2. 1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கான சொத்து உரிமை குடும்ப ஆண்களால் சீர் என்னும் குடும்ப பந்தத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தலால் உருவாக்கப்பட்டு சுரண்டபடுவது அரசுக்கு தெரியாத ஊடகங்களுக்கு புரியாத ?
  • 3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
    • வரதட்சணை கொடுமைகளும் கொலைகளும் நாட்டில் நடப்பதே கிடையாதா ?
  • 6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை
    • .
  • 7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது. (நன்றி : http://ta.wikipedia.)
    • இந்த சட்டத்தின் படி எல்லா அச்சு ஊடகத்தின் அட்டைப்படங்களும் பதிக்கப் படுதா ? திரைப்பட சுவரொட்டிகள் கண்ணியமாக பெண்களை சிதரிககுதா ?
 இந்திய ராணுவம் தினமும் இந்திய பழங்குடி பெண்களை கற்பழிக்கின்றதே அவை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா ? சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ராணுவம் எங்களை கற்பழித்து விட்டது என்ற பதாகை தங்கி அஸ்ஸாம் மாநில பெண்கள் நிர்வான போராட்டம் நடதின்னர்களே அவர்களுக்கு நடந்தது கொடுமை இல்லியா?

அப்போது எல்லாம் அமைதியாக இருந்த அரசுகளுக்கும் இப்போது சினிமா காத நாயகன் போல வீரம் கொட்டுவது ஏன் ?
பெண்களை உடலுறவு கருவியாக சித்தரிப்பதன் வெளிப்பாடு தான் இப்போது வந்து இருக்கும் புதிய சட்டம் . உண்மையில் பெண்களுக்கான அக்கறை இருக்கும்  அரசுக்கு பெண்களுக்கான இட ஒதுக்கிடு மசோதா மறந்து பொய் இருக்குமா ? பெண்களுக்கான தனி நிதி அறிக்கை மறந்து பொய் இருக்குமா ? அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கிடு ஞாபகம் வராத ?

பாராளுமன்றத்தில் இருந்து ஊடகம் பொது சமுகத்தின் கவனத்தை திசை திருப்பவே டில்லி பாலியல் சம்பவம் பெரிதாக்க பட்டது அரசு மற்றும் ஊடகத்தால் எதிர் பார்த்த விளைவு  நிகழ்ந்து விட்டது மக்கள் பாராளுமன்றத்தை மறந்து விட்டார்கள் . சட்டம் குறித்து பேசுவோர்களும்  இப்போது அப்சல் குரு தண்டனை குறித்து பேச தொடங்கி விட்டனர்

அடுத்து இன்னும் சில துக்கு தண்டனை தலைப்பு செய்தியாக வரும் அதை பற்றியும் விரிவாக பேசும் . மீண்டும் ஒரு பாலியல் கொடுமை என  கவனம் திருப்பும் ஊக்தி  அரசியல் இப்போது பெண்களை மையமாக வைத்து செயல் படுகிறது  எப்போது புரிய போகிறதோ .

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்