Friday, June 28, 2013

இலவச அரிசி இட்லி வேண்டாம்... தண்ணீர் வேண்டும்...

ிதமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று முந்தைய ஆட்சியில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அடுத்து வந்த தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி வழங்குவோம் என்று மார்தட்டினர். உண்மையில் தற்போதுள்ள அரசு ஆட்சிக்கு வந்ததும் கையெழுத்திட்ட முதல் கோப்பு ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி திட்டத்திற்க்குத்தான்.
முந்தைய ஆட்சியிலிலும் சரி, தற்போது இந்த ஆட்சியிலும் சரி, இந்த திட்டத்தின் பெரும் பயன் போய் சேர்ந்தது என்னவோ, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டட மக்களுக்குத்தான், ஏனெனில் ஏழைகளாக இருக்கும் தலித் மக்கள் இந்த திட்டத்தில் ரேசன் கடைகளில் போரடித்தான் அரிசி வாங்க வேண்டியுள்ளது.
ஏழைகள் தங்களின் உணவுத் தேவைக்காக அரிசியை பயன்படுத்தும் போது, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் பால் பெருக்கத்திற்க்கு இலவச அரிசியை பயன்படுத்தினர். தங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறுக்ககு வழியில் வாங்கப்பட்ட இலவச அரிசி கொண்டு, தங்களின் பசு மாட்டிற்க்கு பால் பெருக்கத்திற்காக கஞ்சி காய்ச்சி ஊற்றினர்.
உண்மையில் இலவச அரிசிக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பால் பெருக்கம் மிக அதிகமானது. இது கிராமங்களில் நடக்கும் நிகழ்வு....
நகரங்களில் மலிவு விலை உணவகம். இவையெல்லாம் எதை காட்டுகின்றது, இந்த நாட்டில் இந்த அளவுக்கு ஏழ்மை தலைவிரித்தாடுகின்றது. என்பதைத்தானே ஒழிய வேறு ஒன்றும் இ்ல்லை.

இந்த திட்டங்களை எல்லாம் ஏழ்மை நோக்கில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும்... இதிலுள்ள சில ஒட்டைகளையும் நாம் சுட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பு...
இப்படி எல்லாவற்றையும் ஏழைகளின் நிலையில் இருந்து நோக்கும் அரசு... திடிரென்று, மலிவு விலை தண்ணீர் விற்பனை என்று, அறிவித்து ஏழைகளின் வயி்ற்றில் அடித்துள்ளது. இது மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கும் திட்டமாகும்... 
இதன் மூலம், தண்ணீர் விற்பனையை அரசு ஊக்கப்படுத்துகின்றது. தண்ணீரை தனியார்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதை நீயாயப்படுத்துகின்றது... மறைமுகமாக ஊக்குவிக்கின்றது...
சராசரி ஒரு மனிதனின் தேவைக்கு வேண்டியது நாளென்றுக்கு 250 லிட்டர் தண்ணீர் என்றால், தற்போதுள்ள தமிழ்நாட்டின் 4000 தண்ணீர் வியாபாரிகள் அவர்களின் தேவைக்கு என்று உள்ள தண்ணீரைத்தான் பாட்டிலில் அடைத்து விற்கின்றான். அரசும் அதைத்தான் செய்கின்றது. தற்போது தமிழக மக்களின் சராசரி பயன்பாட்டு தண்ணீரின் அளவு 175 லிட்டராக குறைந்து உள்ளது.. இது மிக மோசமான விளைவுகளை உருவாக்குமே.. தண்ணீர் சிக்கல் உயிர் சிக்கல் புரிந்து கொள்ளத்தான் ஆட்சியாளர்கள் இல்லை்....
அரசுக்கு வருமானம்  வேண்டும் என்ற நோக்கத்திற்க்குத்தான் இந்த திட்டம் என்றால், இதை விட மிகுந்த லாபம் கிடைக்கும் வழியும் இருக்கின்றது... 
தற்போது தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளில்இருந்து கிடைக்கும் வருமானம் என்று சொல்லிக் கொள்வது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம்தான். மாறாக டாஸ்மார்க் கடைகளில் விற்க்கப்படும் மது வகைகளை தமிழக அரசே உற்பத்தி செய்து விற்றால் அரசுக்கு தேவைக்கு அதிமாகவே லாபம் கிடைக்கும்... 
தற்போது விற்க்கும் மது வகைகளின் உற்பத்தி செலவு குறைவுதான், விளம்பரம், கமிசன், போக்குவரத்து போன்ற வற்றிற்க்கான செலவும் குடி்பவனின் தலையில்தான் விழுகின்றது... அப்படி இருந்தும் அந்த மது வகைகளை வாங்கி குடிக்கும் குடிமகனானிடம் அரசு தனியார் மது வகைகளை விற்ககும் விற்பனையாளனாகத்தானே இருக்கின்றது. அந்த வருமானத்திற்காக மட்டும்தானே இன்றைக்கு தமிழகத்தில் 97 சதமான மக்களை குடிகாரர்களாக ஆக்கி இருக்கின்றது...விறபனையாளருக்கே ஆயிரத்து ஐநுாறு கோடி லாபம் என்றால் உற்பத்தியாளருக்கு எத்தனை கோடிகள் லாபம் கிடைத்திருக்கும் அந்த லாபம் ஏன் தனியாருக்குப் போக வேண்டும்... நாமே மது வகைகளை உற்பத்தி செய்வோம், நாமே குடிப்போம், மொத்த பணமும் நமக்கே வரட்டும்... வந்த பணத்தை குடி நோயாளிகளின் குடும்பத்திற்க்கு இலவச அரிசி, இலவச காலணி, இலவச மிதி வண்டி, இலவச மடி கணிணி. இலவச நோட்டு புத்தகம், கர்பிணிகளுகக்கு ஊக்கத் தொகை. இலவச தாலி. என இன்னும் இலவசங்களை வாரி வழங்கலாம்... மக்களும் ஓட்டு போடுவார்கள்... ஆனால் மதுபான உற்பத்தியாளரிடம் இருந்து கட்சிக்கு வரும் நிதி போகும். கட்சியை நடத்த பணம் இல்லையென்றால் என்ன கட்சிக்கு வாக்களிக்க மக்கள் இருக்கின்றார்களே... இனி வரும் காலத்தில் இலவச தண்ணீர் என்பது சாத்தியமில்லை என்ற அறிவிப்பை செய்தி தாளில் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை... இலவச தண்ணீர் தருகின்ற கட்சிக்கே எங்கள் ஓட்டு என்ற சுவரொட்டியையும் பார்க்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை...



Friday, June 21, 2013

தமிழர்களின் இசை கருவியா பறை?



பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால்  பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த கேள்வி 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே எனக்குள் உருவானது. விடை தேடியலைகின்றேன்.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் தகவல் சொல்லுவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது. அப்போது அதற்க்கு முரசு என்ற பெயரும் இருந்திருக்கின்றது. போர் குறித்த தகவல் பரிமாற்றத்திற்க்கு முரசு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பொதுவாக நடக்கும் ஊர் திருவிழாக்கள், மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்ச்சியில் பறை இசையின் சத்தம் ஒரு செய்தியின் அடிப்படையில் இருக்கும். பறை இசைக்கப்பட்டால் அங்கு ஓர் நிகழ்வு நடக்கின்றது, நாம் அணைவரும் அங்கு செல்ல வேண்டும் என்ற புரிதலை உருவாக்குவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது.
அண்மை காலத்தில் கூட அரசினர், தங்களின் அறிவிப்பை செய்வதற்க்கு கிராமந்தோறும் தண்டோரா போடுவார்கள். அந்த தண்டோராவை வருவாய்துறையின் கடைநிலை ஊழியராக இருக்கும் சிப்பந்தி போடுவார். பெரும்பாலான சிப்பந்திகள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பர். இந்த தொழில் செய்ய மற்ற சாதியினர் விரும்ப மாட்டார்கள் காரணம் அந்த தொழிலில் தண்டோரா என்னும் பறை இசை கருவியை இசைக்க வேண்டியிருக்கும். அரசு பணியில் ஓளிந்திருக்கும் சாதிய மனோபாவம் இது.
அரசரின் ஆணைகளை பரப்புவதால் கூட பறையன் என்ற சொல்லால் குறிக்கப்ட்டிருக்கலாம். ஆனால் அது பறை என்னும் தொழில் கருவின் நிமித்தமாக வந்த பெயராக கூட இருந்திருக்கலாம். பறை என்பது ஒரு தொழில் கருவி. அந்த தொழில் கருவி பிற்காலத்தில் சாதியத்தை கட்டமைக்கும் இழிவுக்கு பயன்படுத்தப்பட்டு இன்று இழிநிலை கருவியாக கட்டமைக்கப்ட்டிருக்கின்றது.
தமிழ் நாட்டின் புவியியல் அடிப்படையில் 5 வகை நிலமாக பிரித்து அதற்கென ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி சொல்லும் தமிழ்
கூட பறை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவை
குறிஞ்சி நிலத்தில் ,
1.   தொண்டகச் சிறு பறை
2.   சிறை பறை முரகியம்
முல்லை நிலத்தில்,
1.   தடாரிப் பறை
2.   ஆகோள் பறை
மருத நிலம்,
1.   திணைப் பறை
2.   வைகறைப் பறை
நெய்தல் நிலம்,
1.   ஆரிப்பறை
2.   சாப்பறை
பாலை நிலம்,
1.   ஆரெறிப்பறை
2.   சேக்கோள் பறை
போன்ற பறை இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்று இந்த பறை இசை கருவிகளில் பல இல்லாது வழக்கொழந்து போய் இருந்திருக்கலாம்.
தற்ப்போது இசைக்கப்டும் பறை இசை கருவிகள்,
1.   சிறுபறை
2.   கிடுகட்டி
3.   சட்டிப்பறை
4.   ஒரு புறப் பறை
5.   இரு புறப் பறை
6.   தமுக்கு
7.   பெரும்பறை
8.   முரசு. இவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
பறையில் அடிக்கப்படும் அடி நிகழ்வுக்கு நிகழ்வு மாறுபடும் அவை
1.   சாமி புறப்பாட்டு அடி
2.   சப்பாத்து அடி
3.   சாவு அடி
4.   கோடி வாழ்த்து அடி
5.   நக்கல் அடி
6.   நையான்டி அடி
7.   உருட்டு அடி என்ற வகையில் அடி வகைகளும் இருக்கின்றன.
இவற்றில் இருந்து பறையிசைக்கென்று ஒரு தனி வரலாறு உண்டு என்ற செய்தி எல்லோருக்கும் புரிந்தாலும், தோலிசை கருவிகளில் முதல் கருவி , மூத்த கருவி பறை என்று வகைப்படுத்தப்பட்டாலும், பறையன் இசைப்பதாலே இந்த கருவிக்கு பறை என்று பெயர் வந்த்து என கருதி இழிவாகப் பார்க்கும் மனோபாவம்தான் இங்கு அதிகம்.

தவில், மிருதங்கம், உறுமி, பம்பை, போன்ற தோல் இசைக் கருவிகளுக்கு கற்பிக்கப்கப்படும் புணிதம் பறைக்கு கற்பிக்கப்படுவதில்லை. அரசு வழங்கும் சலுகைகள் வழங்குவதில்லை.
சிறந்த மிருதங்க இசை கலைஞனுக்கு கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. சிறந்த தவில் இசை கலைஞருக்கும் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது, உறுமி இசைக்கலைஞனுக்கும் அங்கிகாரம் இருக்கின்றது. பம்பை இசை கலைஞருக்கும் அங்கிகாரம் இருக்கின்றது. ஆனால் ஏன் ஒரு பறை இசை கலைஞனுக்கு கலைமாமணி பட்டமோ, லட்சம்ரூபாய் பொற்கிழியோ சுதந்திரம் அடைந்து 60  ஆண்டுகள் ஆன , அரசியல் சட்டத்தின் மூலம் சாதி ஒழிப்பை நிலைநாட்டிய அரசாங்கம் தரவில்லை என்றேனும் பறை இசை கலைஞர்கள் இதற்காக போராடியிருப்பார்களா?
பறைஇசை கலைஞர்களுக்காக எந்த அரசியல், சமுக இயக்கத்தின் தலைவர்கள் இதை முன்னெடுத்து இருப்பார்களா? ஏன் இதை செய்ய வில்லை.?
பறை இசை தவிர்த்த மற்ற தோல் இசை கலைஞர்களுக்கு அரசாங்கம் நலிந்த கலைஞர்களுக்கான மாத ஊதியம் தருகின்றது. ஆனால் பறைஇசை கலைஞர்களுக்கு ஏன் அது தர மறுக்கின்றது. மற்ற கலைஞர்கள் தங்களின் இசை கருவியோடு பயணம் செய்தால் பயணச் சலுகை வழங்குகின்றது. ஏன் பறை இசை கருவியோடு ஒரு பறை இசை கலைஞன் பயணம் செய்தால் அந்த சலுகை வழங்கப்படுவதில்லை.
பறை இசைக் குறித்தும், பறையர் சாதியைக் குறித்தும் பெருமை பேசுவோர் தமது சாதியின் இசை கருவிக்கு உரிய அங்கிகாரத்தை பெற்றுத் தர போராடுங்கள்.  அதை விடுத்து வீண் பெருமை பேசி, காலத்தை கழிக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்