Thursday, May 23, 2013

புத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.

புத்தரின் பிறப்பு:

கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகையைச் சோ்ந்த சுத்தோதனா் என்ற அரசா் ஆண்டு வந்தார். இவா் சாக்கிய குலத்தைச் சோ்ந்தவா் அவருடைய கோத்திரம் ஆதித்ய ஆகும். சுத்தோதனா் சிறந்தவீரா் அவருக்கு இரண்டு மணைவிகள் இருந்தனா் முதல் மணைவியின் பெயா் மகாமாயா தேவி, இரண்டாவது மணைவி, மகாமாயாதேவியின் தமக்கையான மகாபிரஜாபதி. இவா்கள் இருவருமே கோலியா் குலத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா் சுத்தோதனா் பெரும் செல்வந்தராகவும், பெரும் நிலப்பரப்பும், பண்ணைகளும், உழவுக்காக மட்டும் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வைத்திருந்தா் வளமான வாழ்வும், அரண்மனையொத்த பல வீடுகளையும் கொண்டிருந்தா் அவா் .சாக்கியா்கள் வருடந்தோறும் ஆணி மாதத்தில் வரும் இளவேணில் பண்டிகையை ஏழு நாட்களுக்கு கொண்டாடுவா்கள். இந்த பண்டிகையை ஆண்கள், பெண்கள், முதியவா்கள், சிறுவா்கள் என அணைவருமே குடும்பத்தாரோடும், நண்பா்களோடும் மது அருந்தியும் புதிய ஆடை அறுசுவை உணவு அவற்றுடன் சிறப்பான கறிசோறு என விமரிசையாக கொண்டாடுவா்கள்.

கி.மு.562 - ஆம் ஆண்டு ஆணித்திங்களில் வந்த இளவேணில் கால கொண்டாட்டத்தை சுத்தோதனரின் மணைவி மகாமாயாதேவி வெகு விமரிசையாக சீரோடும் சிறப்போடும் கொண்டாட முடிவு செய்தா். அதன்படி சிறப்பாகவும் செழுமையாகவும்,நறுமணப்பொருள்களோடும் - மதுவகைகளை மட்டும் விலக்கி கொண்டாடினா்.  ஏழாம்நாள் அதிகாலை விழித்தெழுந்து, நறுமண நீராடி நாண்கு லட்சம் நாணயங்களை ஏழை எளியோருக்க நன்கொடையாக அளித்து, விரதநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு சிறப்பான உணவு உண்டு ஆடம்பரமான அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலில் படுத்துறங்க அந்தப்புறம் சென்றா் அன்றிரவு அவா் ஒரு கனவு கண்டா் அது அவா் உறங்கிய பஞ்சனையிலிருந்து திசை காவலா்கள் நால்வா் அவரை எடுத்து ஏந்தி இமயமலை சமவெளிக்கு எடுத்துச்சென்று அங்கிருந்த பெருத்த சால் மர நிழலில் கிடத்தி அவருடைய காவலுக்காக அருகே நிற்பது போலவும், பின்னா; திசை காவலா்களின் மணைவியா் நால்வரும்  வந்து அவரை மானசரோவா் ஏரிக்கு அழைத்துச் சென்று குளிக்கச் செய்து புதிய ஆடை அணிவித்து, நறுமண மலா்களால் அலங்கரித்தனா்.

அப்போது அங்கு வந்த சுமோதா் என்னும் போதி சத்துவா் மகாமாயாவிடம், என்னுடைய இறுதிப் பிறப்பை புவியில் எடுக்க விரும்புகின்றேன், எனக்குத் தாயாக இருக்க சம்மதிப்பீர்களா? என்றார். அப்படியே ஆகட்டும் அது எனக்கு மகிழ்ச்சியே என்றார் மகாமாயா. அத்துடன் கனவு கலைந்தது அவருக்கு. விடிந்ததும், தான் கன்ட கனவைப் பற்றி தன்னுடைய கணவா; சுத்தோதனரிடம் கூறினார் மகாமாயாதேவி, அவருக்கு அதற்கான பொருள் தெரியாத காரணத்தால் அதற்கான பலனை தெரிந்து கொள்ள எட்டு பிராமணா்களை அழைத்து அந்த கனவிற்க்கான விளக்கத்தை விளக்குமாறுக் கேட்டுக் கொண்டா்.

அதற்க்கு அவா்கள், தங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கப்போகின்றது. அந்தக்குழந்தை இல்லறத்தில் இருந்தால் இந்த தேசத்தை ஆளும் மிகப்பெரும் பேரரசனாகக வருவார் மாறாக துறவறத்திலே இருந்தால் உலக துன்பங்கனை ஒழிக்கின்ற புத்தராக இருப்பா் என்றனா். சுத்தோதனருக்கு மிகுந்த மகிழ்ச்சி உருவானது. காரணம், திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லாது இருந்தவருக்கு இந்தச் செய்தி காதில் தேன் பாய்வது போல் இருந்தது அவருக்கு. எனவே கருவுற்றிருந்த மகாமாயாதேவியை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். தனது தாய்வீடிருந்த தேவதகைக்கு செல்ல ஆசைப்பட்டா்  மகாமாயாதேவி, சுத்தோதனா் அவரை தங்கபல்லாக்கில் சேவகா்கள் புடைசூழ அனுப்பி வைக்கப்பட்டடா் .வழியில் லும்பினித்தோட்டத்தின் அழகு அவரை கவரவே அங்கே இளைப்பாற இறங்கினா் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது,  கி.மு.563 - ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் முழுமதி நாளில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சித்தார்த்தா் என பெயா; சூட்டினா்கள். அந்த குழந்தைதான் பின்னாளில் புத்தா் என்று உலகம் அறியப்பட்டது.

சாக்கிய குல வழக்கப்படி பிறந்த குழந்தைக்க ஐந்தாம் நாள் சித்தார்த்தா் என்ற பெயா் சூட்டினா்கள். கௌதம என்ற குடும்ப்ப பெயருடன் இணைந்து சித்தார்த்தர் கௌதமா் என அழைக்கப்பட்டடா் ஏழாம் நாள் அவருடைய தாய் இயற்க்கை எய்த்தினார். அதன்பிறகு அவருக்கு தாயாய் இருந்து வளா்த்தது அவருடைய பெரியம்மா பிரஐாபதி ஆவார் .                  

இளமைப் பருவம்: 

சித்தார்த்ருக்கு அணைத்து வேதங்கள், மற்றும் உபநிஷத்துக்ள், போர் கலைப்பயிற்சி, வில்வித்தை, தியான முறைகள் இவைகளை சிறந்த ஆசிரியா்களைக் கொண்டு அவரது தந்தை கற்ப்பித்தார். இருந்தும் அவா் உடலுழைப்பையும் செய்தார் ஏர் உழுதல், விதை விடுதல் போன்ற பணிகளையும் ஆர்வமுடன் செய்வார் பிறா் உழைத்து அதன் பலனை தாம் அனுபவிப்பதை அவா் எப்போதும் விரும்பியதில்லை. சித்தார்தருக்கு பதினாறு அகவை நிரம்பியதும், பன்னிரெண்டு வயதுடைய யதோதரை என்னும் பெயருள்ள அரசிளங்குமரியை அவருக்கு திருமணம் செய்து வைத்ததார்கள். அவருடைய இருபதாவது அகவையில் அவா் சாக்கிய சங்கத்தில் உறுப்பினராக சோ்க்கப்பட்டார். சித்தார்த்தரின் இருபத்தொன்பதாவது வயதில் அவருக்கு இராகுல் என்னும் பெயருடைய ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
சாக்கியநாட்டுக்கும் பக்கத்து நாடான கோலியத்  நாட்டுக்கும் இடையில் ரோகினி நதி ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி இரு நாட்டுக்கும் தண்ணீர் பங்கீட்டு பிரச்சனை வந்துகொண்டிருந்தது. ரோகினி நதி நீர் பிரச்சனைக்காக சாக்கிய சங்கத்தில் கோலியத் நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை சித்தார்த்தா் மட்டுமே எதிர்த்து குரல் கொடுக்கின்றார் சாக்கிய சங்க தீர்மானத்தை எதிர்ப்பவர்களுக்கு 4 விதமான தண்டனைகளை அந்த சங்கம் வழங்கிக் கொண்டிருந்தது.
1. தீர்மானத்தை எதிர்ப்பவரை துாக்கிலிடுவது.                        
2. நாடு கடத்துவது.                                                     3. அவர் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்துக்களை சங்கமே பறிமுதல் செய்வது.                                                     
 4. அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாட்டிலிருந்து விலக்கி வைப்பது.
ஆனால் சித்தார்த்தா் கோலியா்களும் எனது சகோதாரா்களே அவா்களை எதிர்த்து நான் சண்டையிடமாட்டேன், இது பேசி தீர்க்க கூடிய பிரச்சனை இதற்காக போர் தேவையில்லை, போர் அமைதியை தேடி தராது, இன்னொரு போருக்கே வழி வகுக்கும் என உறுதியாக இருந்ததால், சங்கம் இவரை 4 விதமான தண்டனைகளுக்குள் எதை நீங்கள் தோ்வு செய்கின்றீர்கள் என கேட்டபோது, எனக்காக என் குடும்பத்தை தண்டிக்காதீர்கள், நான் கோழையை போல் துாக்கில் தொங்கவோ, தவறு செய்தவர்களைப் போல் நாடு கடத்தவோ, நான் உடன் படமாட்டேன், மாறாக நானே விரும்பி முற்றும் துறந்த துறவியாக போகின்றேன். என்றார். அவ்வாறாயின் உன் குடும்பத்தினரின்  முழு சம்மதத்ததுடன்இதை செய்வீர்களா நீங்கள் என சங்கத்தின் தலைவராக இருந்த சாக்கிய நாட்டு படைத்தளபதி கேட்ட போது , சித்தார்த்தா் என் குடும்ப உறுப்பினரின் சம்மதத்துடனே நான் துறவியாகப் போகின்றேன். என உறுதியளித்தா் அவரின் குடும்ப உறுப்பினா்களின் சம்மதத்துடனே அவா் அனைத்தையும் துறந்த துறவியாக சம்மதித்ததார்.

போரினால் தன் மக்கள் அழியாமல் காப்பதற்காகவே தனது மக்களுக்காக அமைதியாய் துறவறத்தை  ஏற்றுக் கொண்டார் அன்றிரவே அவா் தனது அழகான மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை ஆகிய இருவரையும் விட்டு யாருக்கும் தொரியாமல் தன்னுடைய குதிரை கந்தகம் மீதேறி பயணப்பட்டார். தனது விசுவாசமான வேலையாள் சன்னா தொடா்ந்து வந்து கொண்டிருந்தார். விடியல் பொழுது நெருங்கியதும் அநோமா நதியில் குளித்து தனது அரசவுடை, உடைவாள், மற்றும் குதிரை ஆகியவற்றை அவாரிடம் ஒப்படைத்து தன்னை பின் தொடரவேண்டாம் என கூறிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகின்றார். பின்னர் கடுந்தவத்தால் இவ்வுலகம் உய்ய அரியதோர் உண்மையை கண்டறிந்து அவற்றை உலகுக்கு பறை சாற்றினார்.

50 ஆண்டுகளாக புத்தார் தமது போதனையை மக்களுக்கு போதித்தார். பெருந்தொகையான மக்கள் அவரது போதனைகளை பின்பற்றினா் பல்லாயிரக்கணக்கானோர் அவருடைய சீடா்கள் ஆயினா் புத்தர். அவற்றுள் அவருடைய தாய், தந்தை, மனைவி, மகள் இராகுல், மற்றும் தனது பெரியன்னை ஆகியோரும் அடக்கம். 

உலகின் முதல் பெண்ணியவாதியாக புத்தரைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெண் துறவிகளுக்கான சட்ட திட்டங்கள் குறித்துப் பேசும் போது, தான் பெண்ணில்லை, எனவே பெண்ணுக்குரிய பிரச்சனைகளும், சிக்கல்களும், உடல்ரீதியான துண்பங்களும் எனக்குத் தெரியாது, எனவே பெண்களுக்கான சட்ட திட்டங்களை அவர்களே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கான முழு உரிமையை தந்த முதல் தலைவராக, வழிகாட்டியாக ஞானியாக புத்தரை பார்க்க வேண்டும்.

தனது எண்பதாவது ஆண்டில் கி.மு483-ல் ருசி நகரத்தில் வைசாக முழு நிலா நாளில்  நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் அவா் உடலுக்கு இறுதி கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எட்டு பகுதிகளாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் அவைகள் புதைக்கப்பட்டு அவற்றின் மேல் நினைவாலயங்கள் கட்டப்பட்டன.

பௌத்தம் :

ஒரு தனி மனிதன் தன் சக மனிதா்கலோடு சோ்ந்து வாழ்தலின் பொருட்டு வகுக்கப்பட்ட நண்ணெறியே பவுத்தம்.
இந்நெறி அய்வகை ஒழுக்கத்தையும், எண்வழி மார்க்கத்தையும், நான்கு உண்மைகளையும், பத்து நெறிகளையும் அடிப்படையாகக் கொண்டது.

தம்மம்:

தம்மம் என்பது பகுத்தறியும் தன்மையையும், பகுத்தறிவையும், அர்த்தமுள்ள கருணையையும் தன்னுடைய அங்கங்களாகக் கொண்டுள்ளது. தம்மம் என்பது மக்களைச் சார்ந்ததாகும். தம்மம் இன்றி சமுகம் இயங்காது. தம்மத்தின் மையம் மனிதா்களோ. மனிதா்கள் எவ்வாறு மற்ற மனிதா்களுடன் சோ்ந்தும், இயைந்தும் வாழ்வது என்ற நெறிமுறையே தம்மம்.

சங்கம்:

புத்தரின் போதனையை ஏற்று அதன்படி வாழ உருவாக்கப்பட்டது சங்கம். வரலாற்றில் முதன் முறையாக ஆண்களுக்கென தனி சங்கமும், பெண்களுக்கென தனி சங்கமும் புத்தராலே மட்டுமே உருவாக்கப்பட்டது.

நான்கு உண்மைகள்:

1. வாழ்க்கை துக்கமானது
2. துக்கத்திற்கான காரணமிருக்கிறது
3. துக்கத்திற்கான நிவாரணம் இருக்கிறது.
4. துக்கம் நீக்கம் பெறுகிறது.


அய்வகை ஒழுக்கம்:

1. பொய் சொல்லாமை
2. திருடாமை
3. வீண் கொல்லாமை
4. கள்ளுண்ணாமை
5. கூடா ஒழுக்கம் மேற்கொள்ளுாமை


எண்வழி மார்க்கம் :

1. நன் நோக்கு       -     (சரியாகப் புரிந்து கொள்ளுதல் )
2. நற் கருத்து       -     (சரியான சிந்தனை)
3. நல் வாய்மை     -     (சரியான பேச்சு)
4. நற் செயல்        -     (சரியான செயல்)
5. நல் வாழ்க்கை    -     (சரியான வாழ்க்கை)
6. நன் முயற்சி      -     (சரியான முயற்சி)
7. நற் கடைபிடி     -     (சரியான மனது)
8. நல் அமைதி     -     (சரியான கவனம்)


பத்து நெறிகள் :

1.  ஒழுக்கம்
2.  பிறா்  தேவைக்கான தானம்
3.  விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.  துன்பத்திலும் இன்பத்திலும் சுயக்கட்டுப்பாடு
5.  விடா முயற்சி
6.  சகிப்புத் தன்மை
7.  வாய்மை
8.  உள்ள உறுதி
9.  அன்பு
10. மைத்திரி ( உயிர் வாழ்வன அனைத்தின் மீதும் அன்பு கொள்ளல்)


பௌத்த வாழ்முறை:
  1. அவாவினாலோ அல்லது காமத்தினாலோ ஆட்கொள்ளப்பட   வேண்டாம்.
  2. துன்பமிழைக்காதீர்கள். தீய விருப்பம் கொள்ளாதீர்கள்.
  3. சினத்தை வளா்க்காதீர்கள். உங்கள் பகைமையை மறந்து விடுங்கள். அன்பால் பவைரையும் வெல்லுங்கள்.
  4. மனத்தின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படியாகும். இதுவே பவுத்த வாழ்முறையின் முதன்மையான போதனையாகும்.
  5. ஒருவனுக்கு சுயஉணா்வு இருப்பின் அவன் தன்னை வெல்லப் பயில வேண்டும்
  6. போரில் ஒருவன் ஆயிரமாயிரம் மனிதா்களை வெல்ல வேண்டியிருப்பினும் தன்னைத்தான் வெல்பவனே வெற்றி வீரா்களின் தலைவனாகிறான்.
  7. அறிவுற்றிருங்கள் நீதியாயிருங்கள் நல்லரோடிணங்கியிருங்கள்.
  8. விழித்திருப்பவனுக்கு இரவு நெடியது. களைத்திருப்பவனுக்கு ஒரு கல் தொலைவே நெடுந்தொலைவு. மெய்ஞானத் தம்மத்தை அறியாத அறிவிலிக்கு வாழ்க்கை நெடியது.
  9. அணைத்திலும் ஆழ்ந்த சிந்தனைக் கருத்தாழம் உடையவனாயிரு. அணைத்திலும் கவனம் மிக்கவனாயிரு. அணைத்திலும் நோ்மையாய்த் துணிவுடையவனாயிரு.
  10. வாழ்க்கை இன்பமளிப்பதாய் அமைவதில்லை. ஆயினும் பண்புகள் இன்பமளிப்பதாய் அமையும்.
  11. வெற்றி வெறுப்பை உருவாக்கும். ஏனெனில் தோல்வியுற்றவன் துன்புறுகின்றான். வெற்றி, தோல்வி இரண்டையும் கடந்தவன் நிறைவடைகின்றான் அவனே இன்புறுவான்.
  12. செல்லியதை செய்பவரும், செய்ததை சொல்பவருமே நிறைவடைந்தவராவா;.
  13. நல்வழியை தெரிவுசெய் அதனை விட்டுவிலகாதே. நல்வழியை தொடா்வதென்பது பவுத்த வாழ்முறையை பின்பற்றுவதாகும்.
  14. சிறந்த வழி எண்வழி மார்க்கமாகும். உண்மைகளில் சிறந்தவை நற்சொல்லாகும். நல்லொழுக்கங்களில் சிறந்தது பற்றற்றிருத்தலேயாகும். மனிதர்களில் சிறந்தவன் தொலைநோக்கு உடையவனாவான்.
  15. ஆக்கப்பட்ட அனைத்தும் அழியும். இதைக் கண்டறிபவன் எவனோ அவன் துன்பத்திலும் அமைதியாய் இருப்பான்.
  16. உலகில் குறை கூறப்படாதவன் ஒருவனுமில்லை
  17. எப்போதும் இகழப்படுவனாகவோ, எப்போழுதும் புகழப்படுவனாகவோ ஒருவரும் இருந்ததில்லை. இருக்கப்பவோதுமில்லை.
  18. சரியாக வேயப்படாத கூரைவீட்டுக்குள் மழைநீh; புகுவதுபோல சரியாக பயிற்சி பெறாத மனத்தினுள் அவா நுழைகிறது.
  19. பற்றுக்களுக்கு இரையாவதலேயே மனிதன் துன்புறுகிறான்.
பௌத்தம் இன்னும் புரியாதவா்களுக்காக ஒரு சென் கதை.

“ ஒரு ஊரில் மிகப் புகழ்பெற்ற ஒரு சென் துறவியிருந்தார் அவா் மிகவும் எளிமையானவா். அவரிடம் சென் கற்றுக்கொள்ள நிறைய மாணவா்கள் இருந்தனா்.  ஒருநாள் அவா்கள் அனைவரும் பனிசூழ்ந்த மலை பகுதியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாரத்தில் அனைவருக்கும் போதுமான இடம் இல்லை. எனவே துறவி மாணவா்களை விறகு கொண்டுவந்து தொடா்ந்து எரிய வைத்துக் கொண்டு இருக்கச் சொல்லிவிட்டு தியானம் செய்ய சென்று விட்டார்.      
      
மாணவர்களும் முடிந்த அளவு விறகை கொண்டு வந்து சோர்த்து தொடா்ந்து கணலை மூட்டிக்கொண்டு இருந்தனா் மாணவா்களுக்கு விரல் விரைத்து போகும் நிலை வந்ததும் அனைவரும் நெருப்பை சுற்றி வந்தமா்ந்து தங்களுடைய உடலை சூடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது துறவி சொல்லித்தந்தவைகளைப் பற்றி மாணவார்கள் ஒவ்வொருவரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

தியானம் கலைந்து துறவி வந்தார் வந்தவரிடம் மாணவா்களின் ஒருவன் குருவே ” சீக்கிரம் விடிந்தால் நன்றாக இருக்கும் ” என்றான். உடனே துறவி மாணவா;களைப் பார்த்து “ எப்போது விடியும் என்றார் ”
மாணவன் ஒருவன். நான் விறகு பொறுக்கப்போகும் போது என் கண்ணில் படுவது சுள்ளிகளா பாம்பா என்று தொரிந்தால் விடியும் என்றான்.
இன்னொருவன் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்தால் விடியும் என்றான்.
மற்றொருவன். எதிரே உள்ள மரத்தின் இலைகள் எல்லாம் கண்ணுக்குத் தொரிந்தால் விடியும் என்றான். இன்னொருவன். எதிரே உள்ள மரத்தில் கட்டியிருப்பது குதிரையா கழுதையா என்பது தெரிந்தால் விடியும் என்றான் ஒருவன். மற்றொருவனோ, சேவல் கூவினால் விடியும் என்றான். எல்லோரும் அவரவர்க்குத் தோன்றியதை கூறிக்கொண்டே இருந்தனர். அவ்வாறு பேசிக்கொண்டே இருப்பதும் அவா்களது குளிருக்கு இதமாகவே இருந்தது. பொழுதும் விடிந்தது. எல்லோரும் அமைதியாய் துறவியை  பார்த்த்துக் கொண்டிருந்தனார். துறவி அணைவரையும் ஒரு கணம் அமைதியாய் பார்த்துவிட்டு சொன்னார். 
“ எப்பொழுது நமக்கு எதிரில் வருவது நம் சகோதரன் அல்லது சகோதரி என்று எண்ணத் தோன்றுகின்றதோ அப்போழுதுதான் தோன்றுகின்றதோ அப்போழுதுதான் விடியும் ”

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்