நற் பேச்சு என்ற உடன் நினைவுக்கு வந்ததது " நினப்பதேல்லாம் வெலியில் சொல்ல முடிமா கண்ணா " என்று நாம் நினைப்பதை எல்லாவற்றையும் வெலியில் சொல்ல முடியாது என்பதை கவியரசு கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லுவார் . அவரே மற்றொரு பாட்டில் " சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி " என்பார் . ஆக நாம் நினைப்பதை எல்லாம் வெலியில் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை .
உளவியல் அறிஞர்களும் நினைக்கின்ற வேகத்தில் பேச முடியாது , பேசுகின்ற வேகத்தில் எழுத முடியாது என்பதை ஒப்புகொள்கின்றனர் .
அவ்வாறு என்றால் நற் பேச்சு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது " புத்தரின் போதனையான தம்மத்தை தமிழிற்கு தந்த அய்யன் திருவள்ளுவரும் "வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் சொலல் வல்லான் " என நன்றாக பேசும் திறன் கொண்டோரையே முதலில் குறிப்பிடுவார் . அதே நேரத்தில் அவரும் "சொல்லுதல் யாருக்கும் எளிய " என்று பேசுவது மிக எளிய செயல் என்பதையும் " தம் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லா வகையில் பேச வேண்டும் என்பதை "சொல்லுக பிரிதோர் சொல்லை " என்றும் சொல்லுவார் . இது எப்படி பேசவேண்டும் அல்லது ஒருவருடைய பேச்சு எவ்வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு வேண்டுமானால் எடுத்துகட்டாக கொள்ளலாம் .
ஆனால் நற் பேச்சு என்று எதை சொல்வது என யோசித்தபோது புத்தரின் போதனைகள் நினைவிற்கு வந்தது . அவருடைய 4 உன்னத வாய்மைகள்
- துன்பம் (துக்கம்) வாழ்வில் உள்ளது
- துன்பத்திற்கு (துக்கத்திற்கு ) காரணம் உள்ளது
- துன்பம் (துக்கம்) ஒழிக்க படக்கூடியது
- துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க வழி உள்ளது என்று போதித்து இருப்பதும் நினைவிற்கு வந்தது . அவரின் போதனைகளில் எண் வழி பாதை என்பது
- நற்காட்சி - Right View
- நல்லெண்ணம் - Right Thought
- நன்மொழி (நற் பேச்சு) - Right Speech
- நற்செய்கை - Right Conduct
- நல்வாழ்க்கை - Right Livelihood
- நன்முயற்சி - Right Effort
- நற்கடைப்பிடி - Right Mindfulness
- நற்தியானம் - Right Meditation
- மெய்யறிவு
- நற்காட்சி
- நல்லெண்ணம்
- நல்லொழுக்கம்
- நன்மொழி
- நற்செய்கை
- நல்வாழ்க்கை
- நற்சமாதி
- நன்முயற்சி
- நற்கடைப்பிடி
- நற்தியானம்
- பொய் பேசுவது
- புறன்கூருவது
- அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது
- பயனில்லாமல் பேசுவது - ஆகிய வற்றை தவிர்த்த செயல்களே ஆகும். (நற் பேச்சு) என்பது முழுமையான அளவில் பொருள் தரக்கூடிய இனிய சொற்களை
- அவசியம் கருதியும்
- உண்மை கருதியும்
- இனிமை கருதியும்
- பயன் கருதியும்
- கனிவுடன் பேச வேண்டியவை ஆகும் .
- உடையது விளம்பேல் - உன்னிடம் இருக்கும் பணத்தை பற்றி சொல்லாதே
- ஒவ்வியம் பேசேல் - ஒருவர் மீது பொறமை கொண்டு பேசாதே
- கண்டொன்று சொல்லேல் - பார்த்ததை விட்டு பார்க்காத ஒன்றை பற்றி பேசாதே
- ஞாயம் பட உரை - ஞாயமாக பேசு (மற்றவர் மனம் புண்படும் படி பேசாதே )
- வஞ்சகம் பேசேல் - பழி வாங்கும் நோக்கோடு பேசாதே
- சித்திரம் பேசேல் - கற்பனை கலந்து பேசாதே
- சுளிக்க சொல்லேல் - கேட்பவர் மனம் புண்படும்படி பேசாதே
- சொற் சோர்வு படேல் - உற்சாகம் (நம்பிக்கை) இல்லாமல் பேசாதே
- நொய்ய உரையேல் - பிறர் மனம் வருந்தும் வகையில் பேசாதே
- பழிப்பன பகரேல் - மற்றவர்களின் மேல் பழி சுமத்தி பேசாதே
- பிழை பட சொல்லேல் - பிறர் மேல் குற்றம் சொல்லாதே
- மிகை பட சொல்லேல் - நடந்ததை நடந்தவாறு சொல்லாமல் மிகை படுத்தி பேசாதே
- மொழிவது அற மொழி - தர்மத்தை (தம்மத்தை ) பேசு
- வல்லமை பேசேல் - கற்றவர் முன் உன் பலத்தை பற்றி பெருமை கொண்டு பேசாதே
- வாது முற் கூறேல் - அறிஞ்சர்கள் இருக்கும் சபையில் முந்திக்கொண்டு யாரையும் கூற்றம் சொல்லி பேசாதே
- வேட்டேன பேசேல் - பொறுப்பில்லாமல் பேசாதே
- ஓரம் சொல்லேல் - ஒரு சார்பாக பேசாதே . நடு நிலையில் நின்று பேசு என்பதாகும் .
- 24.02.2013 அன்று பள்ளிகொண்டாவில் நடந்த பௌத்தர்களின் குடும்ப விழாவில் நற் பேச்சு குறித்து நான் பேசியது