இந்திய பாராளுமன்ற தேர்தல் மேகம் திரண்டு கொண்டிருப்பதால்,
தமிழக அரசியல் கூட்டணி மாற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிப்பேன் நான்.
இப்போது அழுகின்ற ஓநாய்கள் எல்லாம் 1,50,000 தமிழர்கள்
இறந்தபோது, 1,50,000 கோடி ஊழலில் திளைத்துக்
கொண்டு இருந்தவர்கள் தானே.
இலங்கையின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம்
என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்களின் கட்சியினரே, உங்கள் மனச்சாட்சி(அப்படி எதுவும்
இருக்காது) தொட்டு சொல்லுங்கள். உங்கள் தலைவரின் மரணத்துக்கு புலிகள் மட்டும் காரணம்
என்றால். திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
தாலியின் மீது நம்பிக்கையில்லாத மோதிரம் மாற்றிக்
கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்காக ஒரு இனத்தின் ஒட்டு மொத்த தாலியும் அறுபட
காரணமாக இருக்கின்ற உங்களை இந்த தேசமும், வரலாறும் வாழும் தமிழ் மக்களும் ஒரு போதும்
மண்ணிக்க மாட்டார்கள்.
மக்களுக்கு மறதி அதிகம், ஊடகங்களை வைத்து கருத்தை
திசை மாற்றி விடலாம், பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று இருமாந்து இருந்தீர்கள்
என்றால், ஏமாறப் போவது நீங்கள் தான். ஐந்து ஆண்டுகள் வேண்டுமானால் நீங்கள் ஆட்சியாளராக
இருக்கலாம் ஆனால் உங்களை தேர்ந்தெடுக்க நீங்கள் எங்களைத் தேடி எப்போதாவது வர வேண்டும்
தானே. அப்போது என் கோபம் வெளிப்படும். மீன்டும் நீ மீண்டெழ முடியாதவாறு.
ஈழத்தில் எம் தமிழினம் புதைக்ப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் உங்களின் அரசியல் வாழ்க்கை ஈழ மக்களின் கண்ணீரால் புதைக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது
மறக்க வேண்டாம்.
வரும் தேர்தலில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன்
படம் போட்டு, அதற்க்குப் பக்கத்தில் ” காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி
கட்சியும் வாக்கு கேட்டு என் வீட்டுப் படி ஏறாதீர்கள்” என என் வீட்டின் முன் சுவரொட்டி ஒட்டி வைப்பேன். என் போன்ற இன உணர்வாளர்களையும் இதையே செய்யச் சொல்லுவேன். இது
நடக்கும். உங்களுக்கு(ஈழ தமிழர்களை அழித்தவர்களையும், அழிக்க துணை போனவர்களுக்கும்) தமிழ் மக்கள் தீர்ப்பு எழுதும் நாள் நெருங்கி விட்டது.
No comments:
Post a Comment