Friday, March 15, 2013

உண்மை


உண்மை
என்னும் ஒரே
ஆயுதம் தாங்கி
ஏழு ஆண்டுகள்
இடைவிடாது
போராடுகிறேன்…

எதிர்படும்
எல்லோரும்
எதிரிகளாகவே
இருக்கிறார்கள்…

நட்பு
அன்பு
தோழமை
கருணை
எல்லாமே
காற்றில்
கரைந்து போய்
போட்டியாளராகவே
புலப்படுகின்றனர்
கண்ணுக்கும்
கருத்துக்கும்…

என்னை
குறை சொல்லியே
கறைபட்டது
என் சட்டை
கைகளும் தான்
என்கின்றனர்
எதிரிகள்…

சாதிக்காரனில்
துவங்கி
சகோதரனும்.
புன்னகை முகத்தானும்,
புடவை கட்டியவர்களும்,
அதிகாரிகளோடும்
சதியாளர்களும்
எத்தனையோ
ஆயுதங்களோடு
எதிர்கொள்கின்றனர்
என்னை…

போராடுகிறேன்
வாழ்வு
என்னும் போர்களத்தில்
எதிரிகளோடும்
சதிகளோடும்.,,

என் எதிரிகளை
வீழ்த்துவது
என் இலட்சியம் அல்ல..,
வெற்றி பெறுவதும்
என் விருப்பம் அல்ல..,
தற்காத்துக் கொள்ளவே
என் போராட்டம்…

என் எதிரிகளுக்கோ
என்னை அழிப்பது
ஒன்றே குறி…
சில நேரம் முகம்
தெரிகிறது.
பல நேரம்
மறைந்து போய்
வெறுங்காற்றில்
சுழற்றுகிறேன் வாளை..,

அதிகாரத்தின்
சதுரங்க ஆட்டத்தில்
துவங்கியதும்
துண்டாடும்
சிப்பாயல்ல நான்
எளிதில் வெட்டமுடியாத
குதிரையாகவே
இருக்க வேண்டும் நான்..,

இங்கே
பொய்யர்கள்
மத்தியிலிருந்து
மெய்யர்கள்
வெளியேற்றப்படுகிறார்கள்
எனக்கு என்றோ???

போதியின் நிழலில்
இருந்த போது
உனக்கு நீயே ஒளி
என்றது நினைவுக்கு
வந்து…
மாற்றியோசித்தேன்…
உன்னாலே உனக்கு அழிவு…
உண்மையை
கை கொண்டதாலா?

அவர்களின்
சாதுர்யமும் புரியவில்லை
சந்தர்ப வாதமும்
தெரியவில்லை
எனக்கு..,

என்
நியாயமும்
புரியவில்லை
ஞானமும்
தெரியவில்லை
அவர்களுக்கு…

முடிவெடுத்த
போராட்டம்
முற்று பெறாமல்
நீள்கிறது..,

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்