Saturday, August 31, 2019

இளையராஜாவின் இசைப் பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் - 9

சதா சதா உன்னை நினைந்து

பாடல் பிறந்தகதை :

      இளையராஜாவுடன் சேர்ந்து தன்ராஜ் ஆசிரியரிடம் வயலின் கற்க சென்றவரும். பழம்பெரும் இசையமைப்பாளர் திரு. சுதர்ஸன் அவர்களின் மகனான திரு.சதானந்தம் அவர்கள்  இளையராஜாவின் குழுவில் நீண்டகாலமாக இருப்பவர் பெங்களுரில் நடைபெற்ற இசை ஒலிப்பதிவின் போது, சதானந்தம் அவர்கள் ஏதோ ஒன்றை சரியாக வாசிக்காத போது அவரது தவறை சுட்டிக்காட்ட அழைத்த போது அவர் அதனை கேட்காதவராய் மெய்மறந்து வாசித்திருந்த நிலையில் உருவானதுதான் இந்த பாடல் என இளையராஜா அவர்கள் சென்னையில் ஒரு பெண்கள் கல்லுாரியில் மாணவிகளின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவராகவே தெரிவித்தக் கருத்து. 












இத்தகைய இனிமையான பாடல் உருவாக காரணமாக இருந்த சதானந்தம் அய்யாவுக்கு நன்றி சொல்லுவோம். இனி பாடலைக் குறித்து பேசுவோம். 

இந்தப் பாடலில் பலச் சிறப்புத் தன்மைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, ஒரு பாடலைப் எப்படிப் பாட வேண்டும், என பாடக் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இளையராஜா கற்றுக் கொடுத்தது போல இருப்பது இந்தப் பாடலின் முதல் சிறப்பு. எந்த இடத்தில் முச்சுவிடாமல் பாடவேண்டும், எங்கே முச்சு விடவேண்டும், எந்த இடத்தில் ஏற்றம் இறக்கத்தோடு பாட வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் இளையராஜா பாடியப் பாடல்களிலேயே மிகச் சிறந்தப் பாடலாக இசை விமர்சகர்களால் போற்றப்படுகின்றது. 

இந்தோளம் ராகம் 

இந்த பாடல் இந்தோளம் ராகத்தில் அமைந்தப் பாடலாகும். இந்த ராகம் பொதுவில் நள்ளிரவில் பாடவேண்டியராகம் என்றும், வாயுக்கோளாறுகள் நீங்கப் பாடவேண்டிய ராகமென்றும், இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் ( தகவல் உதவி: இந்தோளம் - விக்கிப்பீடியா)

ஒரு வகையில் இந்த ராகம் இளையராஜாவிற்கு மிகப் பிடித்தமான ராகம் என்றும் சொல்லாம். எந்த வகையில் என்றால், மெல்லிசை மன்னர் இசையமைத்து  


இராஜாவின் ரமணமாலை 

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்ட ராஜாவின் ரமணமாலையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனிமையானப் பாடல்தான் 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய்
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா

சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய்

சதா சலித்து சளைத்த மனதினிலே
சதா சளித்து சளைத்த மனதினிலே 
சதாசிவா என்றுனை ஓர் நொடி பொழுதும் இடைவிடாது ( சதா சதா)

காம குரோத மத மாச்சர்யமும் எனை விட்டு விலகிடவும்
காம குரோத மத மாச்சர்யமும் என்னை விட்டு விலகிடவும்
சாம காண நிகர் வாசகம் என் நாவில் துலங்கிடவும்
காம குரோத மத மாச்சர்யமும் எனை விட்டு விலகிடவும்
சாம காண நிகர் வாசகம் என் நாவில் துலங்கிடவும்
நின் சிறுமலர் பதம் என் சிரமதில் திகழ்ந்திட
குருவருள் துனை வர திருவருள் தனை பெற ( சதா சதா)


அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
அலைந்து அலைந்து மனம் கலைந்து குலைந்து
நிலை கலங்கி தினம் தவிக்குதே
தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே
அருகினில் ஒளி வீசு நீ இருக்கும் கரை சேர ( சதா சதா)


சதா சதா என விளிப்பது, திருவாசகத்தின் உள்ள இமைப்பொழுதும் என் நெஞ்சத்தில் நீங்காதான் தாள் வாழ்க என்னும் அடியில் உள்ள இமைப்பொழுது என்பதன் தாக்கத்திலிருந்து வந்தவைதான் சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா என்னும் பாடல் வரிகளின் துவக்கம்.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்