Thursday, September 15, 2016

பௌத்த கூட்டியக்கம்

தம்ம உறவுகளுக்கு வணக்கம், 
12.09.2016 அன்று காலை 11. மணி அளவில் புத்த கயாவில் உள்ள அனைத்து இந்திய பிக்குகள் சங்க செயலாளர். பாந்தே. திரு. பிரகதீப் கயா அவர்களை சந்தித்து பேசினேன். சென்னையில் வரும் நவம்பர் 13ம் தேதியன்று போதிசத்வா. அம்பேக்கர் மணிமண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வு குறித்து பேசினேன். 
பௌத்தம் ஏற்ப்பதில் ஓர் உலக சாதனையை திட்டமிட்டு இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றதென்றும். அதனுடைய நுன் அரசியலையும் விளக்கினேன். அவர் அதை கேட்டதும் மிகவும் மகிழ்ந்து சென்னை நிகழ்வைப் போல் இந்தியா முழுவதும், பௌத்தம் ஏற்பதில் மாநிலத்துக்கு மாநிலம் உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அதைப் போல் செய்வதில் உனது வழிகாட்டுதல் வேண்டும் என்றும் சொன்னார்.
இந்நிலையில் நவம்பர் 13ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வுக்கு பௌத்த அன்பர்கள், தாங்களும், தங்களுடைய குடும்பத்தில் ஒரு சிலரும் வந்தால் போதும் என்னும் மனோபாவத்தில் இருந்து மாற்றம் பெற்று குறைந்ததது, தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள அனைத்து பட்டி யல் இன மக்களையும் பௌத்தம் ஏற்க செய்ய பணி செய்து வெற்றி பெற முயற்சிக்க கேட்டுக் கொள்கின்றேன்.
பௌத்த அமைப்பு மற்றும் இயக்கம் வைத்திருக்கும் தலைமைகள் தங்கள் அமைப்பின் சார்பாக முழு முயற்சி எடுத்து மாவட்டம் அல்லது மாநில அளவில் இந்த கருத்தை கொண்டு சென்று உலக சாதனை நிகழ்வில், அவர்களையும், அவர்களுடைய அமைப்பின் பெயரையும் அழுத்தமாக பதிவு செய்ய பணியாற்ற மிகப் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்.
புத்தகாயாவிலிருந்து.
மா. அமரேசன்.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்