Friday, May 5, 2017

இசை ஞானியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்
இசை ஞானியாரே...
காற்றுக்கு உருவம் இல்லை
என கற்பித்தது கல்வி
ஆயினும் 
உங்களின் புல்லாங்குழலில்
இருந்து வரும்
காற்றுக்கு மட்டும்
உயிர் உண்டு
உணர்வு உண்டு
ஐம்புலன் உண்டு
என மெய்பித்ததால் 
இசை ஞானி நீங்கள்...
பட்டி தொட்டியெங்கும்
பாட்டாளியின் ஓசை ஒலிக்கும்,
உங்களின் கைபட்டதால்
அது பாட்டாளியின் இசையானது...
தோலிசை கருவிகளும்
உங்களால் சுரம் பாடியது...

நரம்பிசை கருவிகளும்
குத்துப்பாட்டிற்கு
பயன்பட்டது 
உங்களுக்கு மட்டும்...

இசையை 
புனிதமாக பாவித்தவர்களுக்கு
உன் இசை மொழி
கலக மொழி....

பசியால் வாடிடும் 
மக்களுக்கு
இசை யென்னும்
அமுத சுரபியால்
பசியாற்றிய
எங்கள் பன்னை புரத்து
ஆபுத்திரன் நீங்கள்...


வாழ்க 
வளமுடனும்
நலமுடனும் 
பல்லாண்டுகள்....



No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்