Thursday, August 22, 2019

சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் – 1


ஒரு போதும் வெட்டக்கூடாத தாவரங்கள்




இந்த நுாற்றாண்டுக்கு மனிதச் சமுகம் இந்த பூவுலகிற்கு தந்துள்ள முதன்மையான அச்சுறுத்தல்கள் இரண்டு, அவை,
புவி வெப்பமாதல் – Global Warming
பருவ கால மாற்றம் – Climate Change


தொழிற்புரட்சி (Industrial Revolution) 1750-1850 காலங்களில் கண்டறியப்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டுத் தேவைக்காவும், போக்குவரத்து கட்டுமானத்துக்காகவும், இயந்திரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கான பேக்கிங் பணிக்காவும், கட்டுமானப் பணிகளுக்காகவும், தளவாடப் பொருட்களுக்காகவும், உலகமெங்கும் காடுகள் அழிக்கப்பட்டு, அதன் மரங்கள் பெருமளவுப் பயன்பட்டன. இந்த புள்ளியிலிருந்தே துவங்குகின்றது புவி வெப்பமாதல் என்னும் செயல்.

தொழிற் புரட்சிக்குப் பிந்தைய நடப்பு மின் மற்றும் மின்னனு யுகத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சின் காரணமாக (கனிப்பொறி, கைபேசி, கால்குலேட்டர்,), பெட்ரோலியப் பொருட்கள், வாகனப் புகை, குளிர்விக்கும் பனிக்காகப் பயன்படுத்தப்படும், கார்பன் புளோரா குளோரைடு, போன்றவற்றின் தொடர்ச்சியான கதிர்வீச்சின் காரணமாக தொடர்ந்து புவி மேலடுக்கில் உள்ள வாயு மண்டலத்தில் வெப்ப வாயுக்களின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டிருப்பதே புவி வெப்பமாதலுக்கு  தொடர் காரணமாக இருந்து வருகின்றது.

புவி வெப்பமாதல் என்பது, புவியின் மேலடுக்கில் உள்ள வளி மண்டலத்தில் உள்ள வாயு அடுக்கில் உள்ள வெப்ப வாயுக்களின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டிருப்பதே, புவி வெப்பமாதலுக்கான அறிஞர்களின் பொதுவான விளக்கமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு என்னும் கரிவளி அதிகரிப்பினால் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்திலிருந்து நாம் வாழும் இப் புவி நுாறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சராசரியாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருவதாக புவி ஆய்வாளர்களும், வான் மண்டல அறிஞர்களும் தெரிவிக்கின்றனர்.[1]

இவ்வாறு புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதன் காரணமாகவே, நாம் வாழும் இந்த புவி கோளத்தில் உள்ள பனிப்பாறைகளும், வட மற்றும் தென் துருவங்களில்  மூன்று லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்துள்ள பனி அடுக்குகளின் உருகும் தன்மை அதிகரித்திருப்பதால், அதன் காரணமாக கடல் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்கின்றது.

கடல் நீர் மட்டம் அதிகரிப்பதன் விளைவாக, கடல் சார் வாழ்விடங்களின் நிலத்தடி நீராதாரத்தில் கடல் நீர்  உட்புகுந்து, நிலத்தடி நீர் குடிப்பதற்கு இயலாமல் உப்புத் தன்மை அதிகரிப்பதாகவும், நீர் ஆவியாதல் அதிகரித்து, அதன் விளைவாக மழை பொழிவு குறைவதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர். ஆய்வாளர்கள்.

பருவகால மாற்றம் – Climate Change

 நாம் வாழும் புவியினைச் சுற்றியுள்ள வளி அல்லது காற்றைக் குறிப்பிட வளி மண்டலம் அல்லது வளிக்கோளத்தை, (Atmosphere) என அழைக்கின்றோம், புவியிலுள்ள கடல் நீராதாரத்தைக் குறிப்பிட நீர்கோளம் அல்லது நீர் மண்டலம் (Hydrosphere) என அழைக்கின்றோம். புவியைச் சூழ்ந்திருக்கும் உறை பனிப்படலத்தைக் குறிக்க (Cryo sphere) என்கின்றோம். பூமியில் வாழும் உயிரினங்களைக் குறிக்க உயிர்க்கோளம் (Biosphere)  என்கின்றோம். புவியின் மையக் கரு மண்டலத்துக்கு மேல் உள்ள பாறைகளையும், பாறைத் தட்டுகளையும் குறிக்க Lithosphere ( பாறைக் கோளம்) என்கின்றோம். இவ்வாறு நாம் வாழும் புவியினைச் சுற்றியுள்ள
வளிக்கோளம், - (Atmosphere)
நீர்கோளம், - Hydrosphere)
பனிப்படலம் - (Cryo sphere)
உயிர்கோளம் - (Biosphere) 
பாறைக்கோளம் - Lithosphere
ஆகிய இந்த 5 கோளங்களின் சமநிலைக் குலையும் போது புவியின் இயற்கை சமநிலை ஒழுங்கு பாதிக்கப்படுவதால் ஏற்படுவதே புவியின் பருவ நிலை மாற்றம் என அழைக்கப்படும் பருவகால மாற்றமாகும்.  

இதன் காரணமாக புவியின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு சீரான மழை பொழிவு குறைந்து, சீரற்ற மழை பொழிவும், சூறாவளியும், புயலும் உருவாகின்றது, இதன் விளைவாக பலத்த சேதமும் பொருளிழப்பும், உயிரிழப்பும் உருவாகின்றது. அன்மைய உதாரணங்களாக ஒக்கி புயலும், தானே புயலும் நம் கண்முன்னே நிற்கின்றது.


உண்மையில் புவி வெப்பமாதல் மற்றும் பருவகால மாற்றம்  ஆகிய இரண்டும் தானாக நிகழ்ந்தவைகள் அல்ல. மனிதர்களின் பேராசையாலும், இந்த புவியின் மீது முழு உரிமை கொண்டாட யாரும் இல்லாத காரணத்தாலும், பெரு முதலாளிகள், மற்றும் மனிதர்களால் புவியின் மீது தொடுக்கப்பட்ட வளச்சுரண்டல் தாக்குதலின் விளைவாக உருவானவைகள்.

நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம் :

 21 ஆம் நுாற்றாண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆண்டு என சிலர் சொல்கின்றனர். அவ்வாறு ஏன் சொல்கின்றனர் என கனிப்பது மிக எளிது. ஏனெனில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், மாசுபாடுகளும் உயிர்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கமும் உச்சபட்ச பாதிப்பை எட்டியது இந்த நுாற்றாண்டில்தான்.  அதன் விளைவாக மனிதனின் உடல்நலத்துக்கான பாதிப்பும் அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டிருப்பதும் இந்த நுாற்றாண்டில்தான்.

                நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்னும் முழக்கமும் ஆதரவும் 1992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நாடைபெற்ற புவி உச்சி மாநாடுக்குப் பின், [2]ஐக்கிய நாடுகள் அவை மற்றும் உலக நாடுகளின் ஆதரவும் சுற்றுச்சூழலை காப்பாற்ற பெருகிக் கொண்டிருக்கின்றன.  புவி உச்சி மாநாட்டில், புவியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல் குறித்தும்,  வரும் தலைமுறையினருக்கு அமைதி மற்றும் மகிழ்வான அனைவரும் விரும்பும் வகையிலான புவியை விட்டுச் செல்வதில் நமது பங்கு குறித்தும், பேசப்பட்டது.


புத்தச் சமயமும் சுற்றுச்சூழலும்:

பௌத்தம் சுற்றுச்சூழலைக் காப்பதில் அக்கறை கொண்டுள்ள மதம். சுற்றுச்சூழலை காப்பதற்கென்றே பல போதனைகள் (சூக்தங்கள்) சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தரின் போதனைகளை புத்த சமயத்தினர்  கடைபிடித்து வருகின்றோம். அதில் நாம் அண்டை அயலாரை நேசிப்பது போலவே சுற்றுச்சூழலையும் நேசிக்க வேண்டும் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.

புத்தரின் சிகாலாவாத சுக்தத்தில்[3] குடும்பஸ்த்தர்கள்  மலரிலிருந்து வண்டு தேன் எடுப்பதைப் போன்று செல்வம் சேகரிக்க வேண்டும் என உதாரணப்படுத்துகின்றார். அதாவது மலரிலிருந்து வண்டு தேன் எடுக்கும் பொழுது, வண்டுக்கும் மலருக்கும் எந்த பாதிப்பும் நிகழ்வதில்லை. சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் நிகழ்வதில்லை அதைப்போலவே இல்லறத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கும். தங்கள் உடல்நலனுக்கும், குடும்ப உறுப்பிணர்களுக்கும் தீங்கு ஏற்படாத வகையிலும், சுற்றுச்சூழலுக்கு எந்த வகையான பாதிப்பும் இல்லாத வகையிலும் செல்வம் சேகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழலை மையப்படுத்தியே செல்வம் சேரிப்பதற்கான உதாரணத்தை விளக்குகின்றார்.

மெத்தபாவனா தியானத்திலும்[4] தன்னைப்போலவே தனது சுற்றம் மற்றும் அண்டை அயலாரையும் நேசிக்கச் சொல்கின்றார். மரங்கள் தாவரங்களையும், நேசிக்கச் சொல்கின்றார், மெத்தகாருண்ய சுக்தத்தில்[5], அதேநேரத்தில் குதண்ட சுக்தத்தில்[6], மரங்களையும் தாவரங்களையும் காப்பது அரசின் கடமை என்கின்றார். அது இன்றைய சூழலில் அரசு இயந்திரத்துக்கும் சாலப்பொருந்தும், ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்றாகவே, நாட்டிலுள்ள மரங்களையும் தாவரங்களையும் காப்பாற்றச் சொல்லியிருக்கின்றார். அதே சுக்தத்தில், மக்களோடு சேர்த்து, நாட்டிலுள்ள 
விலங்குகளைக் காப்பாற்றுவதும் ஒரு அரசரின் தலையாயக் கடமையென்கின்றார்.


குதண்ட சுக்தத்தின் அடிப்படையிலேயே, மாமன்னர் அசோகரும், அவருக்குப் பின் வந்த புத்தச் சமய அரசர்களும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டனர், காடுகளை அழியாமல் பார்த்துக்கொண்டனர், விலங்குகளுக்காக கால்நடை மருத்துவமனைகளை ஆரம்பித்தனர் எனப் படிக்கும் பொழுது அவைகள் புத்தரின் குதண்ட சுக்தம் என்பதை நமது பாடத்திட்டத்தில் விளக்குவதில்லை, வெறுமனே அசோகர் மரங்களை நட்டார் எனப் படிப்பவருக்கு புத்தச் சமயம் சுற்றுசச்சூழலைக் காப்பாற்றும் சமயம் என்பது புரிவதில்லை.

குதண்ட சுக்தத்தில், புத்தச் சமயப் பிக்கு மற்றும் பிக்குணிகளின் கடமையாக புத்தர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார், ஒவ்வொரு பௌத்தர்களும் குறிப்பாக பிக்குகள். மூன்று விதமான தாவரங்களை தொடர்ந்து நட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றார். 1. மலர் தரும் தாவரங்கள் 2. பழம் தரும் தாவரங்கள் 3. நிழல் தரும் தாவரங்கள்தெற்காசியாவில் உள்ள நாடுகளின் பௌத்தர்கள் என்று தம்மை கூறிக் கொள்வோர் தங்கள் வீட்டிலோ பொது இடத்திலோ புத்தர் கூறிய 3 விதமான தாவரங்களை வளர்த்து சுற்றுச் சூழலை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதன் வழி பௌத்தத்தை வளர்த்தும் வருகின்றனர்.

புத்தர் தனது சுஹா சுக்தத்தில்[7] மற்றும் பல சுக்தத்திலும் மூங்கிலின் சிறப்பை கூறியிருக்கிறார் . வேறொரு சுக்தத்தில் ஒருபோதும் வேட்டக்கூடாத தவரங்கள் என சிலத் தாவரங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் அவை
1. மூங்கில்
2. அரசமரம்
3. பழம் தரும் மரங்கள்
4. நிழல் தரும் மரங்கள்
5. மருத்துவ குணம் உடையத்     தாவரங்கள்
6. நறுமணம் தரும் மலர்செடிகள்
7. குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வளரும் தாவரங்கள்
8. தனித்து நிற்கும் தாவரங்கள்
9. உங்கள் முன்னோர்கள் வைத்த தாவரங்கள்
10. மக்களின் பயன்பாட்டில் உள்ள மரம் செடி. கொடி வகைகள்.

இந்த பத்து வகையான தாவரங்களை மக்கள்  ஒருபோதும் வெட்டக்கூடாது என்கிறார். அதில் முதலில் பட்டியலிடுவது மூங்கிலைத்தான். எனவே பௌத்தர்கள் ஒருபோதும் வெட்டக்கூடாத தாவரம் மூங்கில். எனவே பௌத்தர்கள் என சொல்லிக் கொள்வோர் தங்களின் வீட்டிலும். நிலத்திலும் அவசியம் வளர்க்க வேண்டியத் தாவரம் மூங்கில் மட்டுமே.  புத்தரின் போதனையை தமிழில் சொல்லிய சங்க இலக்கியங்கள் கூட உயிர்காக்கும் மருந்துக்கு என்றாலும் மரங்களை வெட்ட வேண்டாம் என்றே நம்மை எச்சரிக்கின்றது.

தீக நிகாயத்திலோ[8] ( தீக நிகாயம் 1 [9] 2007, பக்கம் 112) மரங்களின் வேர்களை ஒருபோதும் வெட்டக்கூடாது என்கின்றார். உதாரணத்துக்காக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி முளைத்து வேர் விட்டிருக்குமேயானாலும் அதைக்கூட வெட்டக்கூடாது என்கின்றார். ( அதை நட்டு வளர்க்க வேண்டும்) வேர்களை பாலி மொழியில் மூல பீஜம் என்கின்றார்நிழல் தரும் மரங்களின் கிளைகளை குறிப்பாக அரசமரத்தின் கிளைகளைக்கூட ஒருபோதும் வெட்டக்கூடாது என்கின்றார். இதை அவர் பாலிமொழியில், ஸ்கந்த பீஜா என்கின்றார், புல்வகைகளில் மூங்கிலை ஒரு போதும் வெட்டக்கூடாது என்கின்றார், இதனை அவர், பலுபுஜா புராக் என்கின்றார், இவ்வாறு வேர்களையும், கிளைகளையும், மூங்கிலையும் ஒரு போதும் வெட்டக்கூடாத தவரங்கள் என வரையறுத்து  சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற சமயமாக புத்தச் சமயம் விளங்குகின்றது.
               
புத்தச் சமய நோக்கில் சுற்றுச்சூழலைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் அனைவரும் மூங்கிலின் சிறப்பையும் உணர்ந்து  கொண்டால் மட்டுமே புத்தச் சமயத்தில் சுற்றுச்சூழல் அறவியலையும் அறிவியலையும் ஒரு சேர உணர்ந்து கொள்ள இயலும்.

மூங்கிலின் சிறப்புகள்:

பொதுவாகவே தாவரங்கள் பகலில் உயிர்வளி என்னும் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து, கரிவளியை வெளியேற்றும் செயலை செய்கின்றன. இரவில் கரிவளி என்னும் கரியமில வாயுவை சுவாசித்து உயிர்வளியை வெளியேற்றும் செயலை செய்கின்றன. சில குறிப்பிட்ட தாவரங்கள் மட்டுமே, இருபத்து நான்கு மணிநேரமும் உயிர்வளியை வெளியிட்டு, மனிதர்களுக்கும், பூமியில் வாழும் விலங்குகளுக்கும் ஆகசிறந்த நன்மை புரிகின்றன.

இவ்வாறு 24 மணிநேரமும் உயிர்வளியை வெளியிடும் தாவரங்களில் முன்னிலை வகிப்பது, அரசமரம், வேப்பமரம், இலுப்பைமரம், புங்கை மரம் மற்றும் மூங்கில் ஆகும். இந்த மரங்கள் உயிர்வளியை புவி முழுவதும் பரப்பும் வளிபரப்பாளர்களாக செயல்படுகின்றன. பட்டியலிட்டுள்ள தாவரங்களை விட மூங்கி்ல் மட்டுமே எப்போதும் தான் இருக்கும் இடத்தில் உள்ள மற்ற தாவரங்களை விட 35 சதவிகிதம் அதிகமான உயிர்வளியை வெளியேற்றி புவியை குளுமைபடுத்துகின்றது என தாவரவியல் ஆய்வாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர். இதனை புத்தர் நன்கு உணர்ந்து நமக்கு கட்டளையாகவே 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவித்துள்ளார்.

உலகெங்கும் மூங்கில் 1500 வகைகள் பயிரிடப்படுகின்றது. 87 பிரிவுகளாக அவை பகுக்கப்பட்டுள்ளன. [10] மூங்கில் காடுகள் ஆக சிறப்புவாய்ந்தவை, உலகெங்குமுள்ள வெப்ப மண்டல காடுகள் மற்றும் துனை வெப்ப மண்டல காடுகளில். தற்போதுள்ள உலக காடுகளில் பரப்பளவில் மூங்கில் காடுகள் 36[11] மில்லியன் எக்டேர் பரப்பளவாக உள்ளது.
உலக நாடுகளில் மற்ற மரங்களை கொண்ட காடுகளின் பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நேரத்தில் மூங்கில் காடுகளின் பரப்பளவு மட்டும் அதிகரித்து கொண்டு வருவது அதியசமான உண்மையாகும். உலகின் மூங்கில் வனப்பரப்பில் அமெரிக்கா கண்டத்தில் 7 சதவிகிதமும், ஆப்பிரிக்கா கண்டத்தில் 28 சதவிகிதமும் ஆசியாக் கண்டத்தில் 65 சதவிகிதமும் மூங்கில் காடுகளாக உள்ளது.[12]

உலகின் மழை பொழிவுக்கு மூங்கில் காடுகளே முக்கிய காரணிகளாக உள்ளன. அமேசான் காடுகளில் உள்ள மூங்கில்களே, அங்கு உலகின் மழை மொழிவில் 15 சதவிகிதத்துக்கும்[13] அதிகமான மழை பொழிவிக்கு காரணமாக உள்ளது. தெற்காசிய நாடுகளில் உள்ள காடுகளில் மூங்கில் காடுகளே பெரும் பரப்பில் உள்ளது. அதனாலே, தெற்காசிய நாடுகள் பெரும் மழை பொருகின்றன. உலகின் அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி ( மேகலாயாஇந்தியா) மூங்கில் காடுகள் நிறைந்த பகுதியாகும்.
               
இந்தியா மற்றும் சீனாவின் காடுகளிலும் மூங்கில் அதிக பரப்பளவில் உள்ளது. அதனாலேயே அங்கு பெரும் மழை பொழிகின்றது, ஜப்பான் நாடும் மூங்கில் பெருமளவில் நாட்டிலும் காட்டிலும் வளர்த்து வருகின்றது இரண்டு காரணங்களுக்காக, முதலாவதாக, ஜப்பான் நாட்டில் உள்ள புத்த விகார்கள் பெரும்பாலும் மூங்கிலைக் கொண்டே அமைக்கப்படுகின்றது, பின்னர் அதனைச் சுற்றிலும் மூங்கில் வனங்கள் உருவாக்கப்படுகின்றது.[14] புத்தரை வழிபடுபவர்களால். இரண்டாவதாக, மூங்கில் மிகச்சிறந்த அனுக்கதிர்வீச்சுத் தடுப்பானாக செயல்படுவதால், ஜப்பான் நாட்டில் வீடுகளைக்கூட முங்கிலைக் கொண்டே அமைக்கின்றனர். எரிமலை வீச்சின் வெப்பக் காற்றைத் தடுப்பதிலும் மூங்கில் முக்கியப் பங்கு வகிப்பதால், ஜப்பானில் பெரும்பாலான வீடுகள் முங்கிலைக் கொண்டேமூங்கில் மண் அரிப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்பதால், வனங்களின் மண் பாதுகாக்கப்பட்டு, பல்லுயிர்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மூங்கில் நல்ல வேர்பிடிப்பானாக செயல்படுவதால், மலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.

சமகாலப் பார்வையில் மூங்கிலும் புத்தச் சமயமும்:

புவி வெப்பமாதல், மற்றும் பருவகால மாற்றத்தால், பருவ மழை தவறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், உலகமெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த நிலையில் இந்த இரண்டு வகையான முக்கியப் பிரச்சனையை தீர்க்க புத்தர் போதித்தவற்றை நினைவில் கொண்டு இந்தியாவில் வாழும், அதிலும் குறிப்பாக தமிழக புத்தச சமயத்தினர் தங்கள் வாழிடம் மற்றும் விலைநிலங்களில் தொடர்ந்து மூங்கிலை நட்டு வளர்க்க வேண்டும். இந்து மதம் மூங்கிலை வளர்த்தால் விருத்தியடையாது என்னும் கருத்து தினிப்பை உழவர்களிடமும் தமிழக மக்களிடமும் தினித்துள்ளதால், நாம் மூங்கிலின் பயன்பாட்டை உணரவில்லை. அதை அதிகம் பயன்படுத்துவதுமில்லை.
இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பீகாரில் வனப்பரப்பு கிடையாது, ஆனால் அங்கு மழை பொழிவு சிறப்பாக உள்ளது. அதற்கான முக்கிய காரணம், மூங்கில் மட்டுமே. எப்படியெனில், பீகாரின் விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியில் தொடர்ந்து மூங்கிலைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் காற்றில் உயிர்வளியின் தன்மை அதிகரித்து மழை பொழிவு கிடைக்கின்றது என்பதை அவர்கள் மூங்கிலின் வழியாக உணர்ந்துள்ளனர்.

மேலும், மூங்கிலில் இருந்து 1500 வகையானப் பொருட்களை உற்பத்தி செய்ய இயலும், அதனால் மூங்கில் வளர்ப்பதன் வாயிலாக தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், வீட்டுக் கூரைகள், என பல தேவைகளுக்கு மூங்கில் அவர்களுக்குப் பயன்படுவதால், அவர்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படுகின்றது.


இறுதியாக புத்தச் சமய நோக்கில், மூங்கிலின் மரத்தின் கீழ்  புத்தரின் சிலையையும் வைத்து வழிபாடு நிகழ்த்த பௌத்தர்கள் முன் வரவேண்டும். ஜப்பானைப் போல மூங்கில் விகாரையும், அதனையொட்டி மூங்கில் காடுகளையும் கூட உருவாக்க முன் வர வேண்டும். பௌத்தம் ஏற்கும் நிகழ்வில் கூட மூங்கில் கன்றுகளை பௌத்தம் ஏற்போர்களுக்கு தானமாக தரலாம்.

சூழலிய நோக்கில் ஆக்சிஜனை 24 மணி நேரமும் வெளியேற்றும் தாவரம். மூங்கில்.  மூங்கில் இருக்கும் இடத்தில் தண்ணீர் பஞ்சம் வராது.மூங்கில் காடுகளே  அதிக மழை பொழிவுக்கு காரணமாகும். மூங்கில் சிறந்த காற்று அரண். இதையெல்லாம் அன்றே உணர்ந்து புத்தர் மூங்கில் வளர்க்க சொல்லியிருக்கிறார். நாம் அனைவரும் மூங்கில் வளர்ப்போம்.

- நன்றி . புதிய கோடங்கி - ஜீலை 2019



[1] . தமிழ் இந்து 26.11.2013
[2]  தென் ஆப்பிரிக்காவின் ரியோடி ஜெனிரோ நகரில் அக்கிய நாடுகள் அவையின் முதல் கருத்தரங்கு சுற்றுச்சூழல்  
  மற்றும் வளர்ச்சிக்கா 1992 ஆம் ஆண்டு ஜீன் 3 லிருந்து 14 ம் தேதி வரை நடை பெற்றது.
[3] . புத்தரின் நீண்ட பேருரைகளின் தொகுப்பான தீக நிகாயத்தில் உள்ள 31 வது  
  போதனையாகும் ( சூக்தம்) இது, சிகாளன் என்னும் குடும்பஸ்தனுக்கு, குடும்பத்தினரின்
  கடமைகள் குறித்து புத்தர் போதித்த போதனையாகும்.
[4] . அன்பும் கருனையும் தங்கள் நெஞ்சில் மலர்வதற்காக, தேரவாத புத்த சமய பிரிவினர்கள்
  கடைபிடிக்கும் தியானம் மற்றும் மந்திரமாகும். இந்த தியானத்தை புத்தர் தினந்தோறும்
  செய்தார் என வரலாறு கூறுகின்றது.
[5]   தேரவாத புத்த சமயத்தினருக்கான தியானம்
[6]  .தீக நிகாயத்தில் உள்ள 5 வது போதனையாகும். குதன்தன் என்னும் பிராமணன் செய்ய
  இருந்த பெரும் யாகத்தில் பலியிட இருந்த காளைகள் மற்றும் பசுக்களைக் காட்டிலும்
  உயர்வான உயிர்பலி மற்றும் தியாகம் ஏதேனும் உண்டா என புத்தரிடம் கேட்ட போது,
  அவர் சொன்ன அறிவுரையே குதன்ட சுக்தம்
[7]  அங்குத்தர நீகாயம்
[8] .  புத்தரின் நீண்ட பேருரைகளின் தொகுப்பு
[9] .  பிரம்மஜலா சுக்தா – பிக்கு, பிக்குனி, மற்றும் குடும்பத்தினர்கள் செய்ய வேண்டியவைகள்,
  மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய தொகுப்பு
[10].  Ecological Functions of Bamboo forest: Research and Application.
[11]  Ecological Functions of Bamboo forest: Research and Application
[12] . Resources of Bamboo forest – world
[13] . டிஸ்கவரி சேனல் நிகழ்சி
[14] . விக்கிபீடியா

Wednesday, August 21, 2019

வனத்திலிருந்து வந்தவள் நுால் விமர்சனம்


வனத்திலிருந்து வந்தவள்  நுால் விமர்சனம்

நண்பர் கனியன் செல்வராஜ் அவர்களின் வனத்திலிருந்து வந்தவள் கவிதைப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு, நண்பர் செல்வராஜ் அவர்களால் சில தினங்களுக்கு முன்பு கிட்டியது. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை அத்தனை சுவாரஸ்யம். புத்தகத்தை வாசித்து முடித்ததே தெரியவில்லை. அத்தனை ஈர்ப்பு அவரது கவிதைகளில். ஆசிரியராகப் பணி செய்வதாலோ என்னவோ, நண்பர் கனியன் செல்வராஜீக்கு இலகுவான மொழி நடையும் வன்மையான சொற்களும், மென் தென்றலாய் உரசிச் செல்கின்றது அவரது கவிதைகளில். 16 தலைப்புகளில் 76 பக்கங்களில் கவிதை புத்தகத்தை தந்துள்ளார். இவற்றில்



1.   துளியளவேயான மரணம்
2.   புத்தன் ஒரு சகபயணி
3.   பரவும் இனம்
4.   புத்தன் -  

ஆகிய கவிதைகளில் சூபியிசத்தின் சாயலில் புத்த மதத்தின் சாரத்தை வாசகர்களின் மனதில் விதைத்துச் செல்கின்றார். கவிதையளவில் இது ஒரு புதிய முயற்சி என்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. இருப்பினும் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் ஆசிரியர்.

5.   காடு – காடு காத்து வாழும்
6.   வனத்திலிருந்து வந்தவள் –

இந்த இரண்டு கவிதைகளில் இயற்கை குறித்து ஆழந்த புரிதலுடன் பேசுகின்றார். அதை எளிதாக படிப்பவர்களுக்கும் கடத்துகின்றார். வாழ்த்துகள் கனியன்.

7.   கீழே இறங்கிவா
8.   நாடகக்காரி
9.   அவனுக்கென்ன ராஜாவுக்கு
1 எங்க ஊர் பொதுக்கிணறு –

இந்தக் கவிதைகளில் விளிம்பு நிலை மக்கள் குறித்துப் பேசுகின்றார். அதிலும் விளிம்பு நிலை சிறுவர்கள், கலைஞி, நடுத்தர வர்கத்து கணவன், என பல்வேறு நபர்களின் வாழ்வியல் கனவையும், சூழலையும் மனம் உருகிச் செல்லும் வகையில் படைத்துள்ளார்.

11.  எல்லோரையும் நோக்கிப் பாயும் தோட்டா
12.  அந்த அது
13.  எல்லாவற்றிலும்  -

இந்த தலைப்புகளில் மனித நேயம் குறித்து பேசுகின்றார், கவலைப்படுகின்றார், எந்த நிலையிலும், எக்காலத்திலும் அழியாதது, மனித நேயம் என்பதை பறைசாற்றுகின்றார்.

14.  புராதன ரகசியங்கள் 
15.  சாணக்கியனின் பூனுால்
16.  பூவரசமரமும் நவீன யுவதியும். –

இந்த கவிதைகளில் வரலாற்றைப் பேசுகின்றார், அதிலும் புராதன ரகசியங்கள் கவிதையில், பெண்ணின் பார்வையில் இருந்து வரலாற்றைச் சொல்கின்றார். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது வரையிலும் பெண்ணின் பார்வையில் இருந்து வரலாறு படைக்கப்படவில்லை. என்பதை இந்தக் கவிதையை படிக்கும் போது உணர முடிகின்றது.

பூவரச மரமும் நவீன யுவதியும் கவிதையில், மரம், தன் பாட்டி, நவீன யுவதி, ஆகியோரின் மனோபாவம், வாழ்வியல், ஆகியவற்றை இயல்பானச் சொற்களால் மாலைகளாக கோர்த்து தந்துள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட சிறப்பானது. எங்க ஊர் தெரு கவிதை. வாசிப்பவனை சில நிமிடமாவது தனது ஊரையும் தெருவையும் நினைக்கத் தோன்றும் சிறப்பான கவிதை அது.

மொத்தத்தின் தமிழ் கவிதையார்வலர்கள் தவற விடக்கூடாதப் புத்தகமாக வனத்திலிருந்து வந்தவள் உள்ளது. இதை பதிப்பதவருக்கும். ஆசிரியர் கனியன் செல்வராஜீக்கும், சிறப்பான வாழ்த்துகள். 

புத்தகம் வேண்டுவோர். ஆசிரியரிடம் பேசினால் (கைபேசி எண் – 98435 72355)இலவசமாகவே மின்னஞ்சல் அனுப்பி வைக்கின்றார். வாழ்த்துகள். கனியன். தமிழ் கவிதை உலகில் தரமான முத்திரை பதிக்கின்றது உங்களின் வனத்திலிருந்து வந்தவள் கவிதைத் தொகுப்பு.




Thursday, August 8, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 4


குங் ஃபூ ஹஸ்டில் ( 2004 - ஆங்கிலம்):

குங் ஃபூ ஹஸ்டில் அதிரடி நகைச்சுவைப் படமாகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஸ்டீபன் சோவ் ஆவார். இது இவருக்கு இயக்கத்தில் 7 வது படமாகும். நடிப்பில்( தொலைக்காட்சி தொடர்கள் உட்பட) 61 வது படமாகும். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது கொலம்பியா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். தயாரித்தது, கொலம்பியா திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆசியா. ஸ்டார் ஓவர்சீஸ், பெய்ஜிங் பிலிம் ஸ்டுடியோ, தாய் பிலிம் இன்வெஸ்ட்மென்ட், சீனா திரைப்பட குழுமம், ஹீய் சகோதாரர்கள், ஆகியோர்கள் இனைந்து தயாரித்துள்ளனர். 



இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்:

ஸ்டீபன் சோவ் – சிங் கதாபாத்திரம், கோடாறிக் குழுவில் சேர்ந்து கெட்டவனாகத் துடிக்கும் நபர்.
யூயோன் வாவ் – தாய் சி சுவான் மாஸ்டர். பன்றி நகர குடியிருப்பின் உரிமையாளர்.  தாய் சி சென் மாஸ்டர்
சூ சியோன் – பன்றி நகர குடியிருப்பின் உரிமையாளர் மனைவி. சிங்க கர்ஜனை குங்பூ மாஸ்டர்.
சான் குவாக் குவென் – சாம் அண்ணன், கோடாறிக் கூட்டத் தலைவன்.
யங் சியாவ் லுங் – உலகின் அதிக கொலைகளைச் செய்த கொலைகாரன்
டங்சிவ் வாவ் – டோனட் – பேக்கரியாளர், ஓய்வு பெற்ற என் கோன கு ங்பூ மாஸ்டர்
சூ சி லிங் – டைலர். இரும்புக் கயிறு குங்பூ மாஸ்டர்.
சிங் யூ – கூலி – டாம் பள்ளியின் 12 குத்து குங்பூ மாஸ்டர்.
லிம் சி சௌங் – போன் - சிங்கின் உதவியாளர் மற்றும் பலரும் நடித்துள்ள வெற்றிப்படம் இது.

குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்:

இந்தத் திரைப்படத்தின் கதை 1940 ஆம் ஆண்டில் ஷங்காய் நகரத்தில் நடப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு ஷங்காய் நகரத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கும் சூழலில், ஷங்காய் நகரத்தில் இரண்டு பெரிய ரவுடிக் கும்பல் ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலைக் கூட்டம் மற்றும் கோடாரிக் கூட்டம். இதில் கோடாரிக் கூட்டத்தின் தலைவன் சாம் அண்ணன், முதலைக் கூட்டத்தின் தலைவன் மற்றும் அவரது அழகான மனைவியையும் கொன்று ஷங்காய் நகரம் முழுவதையும் கோடாரிக் கூட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றான்.

இந்நிலையில் சாம் மற்றும் அவரது உதவியாளர், ஷங்காய் நகரத்தில் உள்ள ஏழைகளின் குடியிருப்புப் பகுதியான பன்றி நகரக் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றனர், தாங்கள் கோடாரிக் கும்பலில் இருந்து வருவதாக கூறி மாமுல் வசூலிக்க முயற்சிக்கும் போது, பன்றி நகரக் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கூலி மாஸ்டர் மற்றும் டைலர் மாஸ்டர், பேக்கரி மாஸ்டர் ஆகியோரால் விரட்டியடிக்கப்படுகின்றனர். அந்தநேரத்தில் தற்செயலாக அங்கு வரும் கோடாரிக் கும்பலிடம் தாங்களும் கோடாரிக் கும்பல்தான், தங்களை இங்குள்ளவர்கள் அடித்துவிட்டதாக கூறுகின்றனர்.

நகரத்தில் உள்ள மொத்த கோடாரிக் கும்பலும் பன்றி நகரக் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றது. அவர்கள் அனைவரையும் அங்குள்ள குங்பூ மாஸ்டர்கள் அனைவரும் இனைந்து அவர்களை விரட்டியடிக்கின்றனர். இது கோடாரிக் கூட்டத்தலைவனுக்கு கௌரவப் பிரச்சனையாகின்றது, பன்றிநகரக் குடியிருப்புப் பகுதியில் உள்ள குங்பூ மாஸ்டர்களைக் கொலை செய்ய வாடகைக் கொலைகாரர்களை இசை வாத்தியக் கருவி இசைப்பாளர்களாக பன்றி நகர குடியிருப்புக்கு அனுப்புகின்றான். அவர்கள் கூலி மாஸடரை மட்டும் கொலை செய்கின்றனர், மற்றவர்களை அவர்களால் கொலை செய்ய முடியாமல் வாடகைக் கொலைகாரர்கள், பன்றி நகர குங்பூ மாஸ்டர்களால் கொல்லப்படுகின்றனர்.

கொதித்துப் போன சாம் அண்ணன், உலகின் அதிக கொலை செய்த கொலைகாரன் அடைபட்டிருக்கும், சிறையை சிங்கின் அபரிதமான திறனான பூட்டைத் திறக்கும் திறனைக் கொண்டு பீஸ்ட் அடைபட்டிருக்கும் மிகு திறன் கொண்டோருக்கான சிறைச்சாலையில் இருந்து தப்பிவிக்கப்படுகின்றான். பின்னர் பீஸ்ட்டுக்கும் பன்றி நகரக் குடியிருப்பு உரிமையாளரையும் அவர் மனைவியையும் கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்களுக்குள் சண்டை நிகழ்கின்றது, அந்த சண்டையில் சிங்க கர்ஜனையை புத்தரின் பெரிய மணியை ஒலிபெருக்கியாகப் பயன்படுத்தி பீஸ்டைத் தோற்கடிக்கின்றனர்.


அதன் பின் அவர்களை ஏமாற்றி பீஸ்ட் கடுமையாகத் தாக்கும் போது சிங் பீஸ்டை கட்டையால் தாக்க, பீஸ்டின் ஒட்டு மொத்த கோபமும் சிங்கின் மீது திரும்பி, சிங்கை படு மோசமாகத் தாக்க பின் பன்றி நகர உரிமையாளர்களான கணவன் மனைவி இருவருமே சிங்கை காப்பாற்றுகின்றனர். அவர்களே மருத்துவமும் செய்கின்றனர். தாய்சியின் மருத்துவத்தால் சிங் விரைவாகக் குணமடைந்து அவருக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து நல்வழிக்கு திரும்பகின்றார்.

இறுதியாக பீஸ்டுக்கும் சிங்குக்கும் பன்றி நகரக் குடியிருப்பில் சண்டை நிகழ்கின்றது, பீஸ்ட் சிங்கை தாக்கி மேலே துாக்கி வீசியெறிய சிங் மேகக் கூட்டத்தையும் தாண்டி புத்தரை மேக வடிவில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்று புத்தரின் உள்ளங்கை குங்பூ கலையைக் கற்றுத் திரும்புகின்றான். அதனைக் கொண்டு பீஸ்டை தோற்கடிக்கின்றான். தோற்றுப் போன பீஸ்ட் இதை எப்படிக் கற்றுக்கொண்டாய் எனக் கேட்க்க சிங் உடனே, சொல்லித்தரட்டுமா எனக் கேட்க பீஸ்ட் சிங்கை மாஸ்டராக ஏற்றுக் கொள்கின்றான்.

குங் ஃபூ ஹஸ்டில் படத்தின் வேறு சில சிறப்புகள்

இந்தத் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளியான The House of 72 Tenants திரைப்படத்தின் தழுவலாகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள குங்பூ மாஸ்டர்கள் அனைவரும் 1970 களில் குங்பூ படங்களில் கதாநாயகனாக நடித்தவர்களாவார்கள். இந்த திரைப்படத்திற்கு முதலில் சண்டைக் காட்சிகளை அமைத்தவர், ஆரம்பகாலங்களில் ஜாக்கிச்சான்வுடன் நடித்த சமோ ங் ஆவார். இடையில் சமோ ங் உடல் நலிவுற்றதும், இந்த படத்தின் சண்டைக்காட்சிகளை அமைக்க Yuen Woo – Ping ஐ நியமிக்கின்றார் ஸ்டீபன் சோவ், இவர் ஏற்கனவே வெற்றித் திரைப்படங்களான, Crouching Tiger, Hidden Dragon, மற்றும் The Matrix ஆகியப் படங்களுக்குச் சண்டைக்காட்சிகளை அமைத்தார்.

அதனால்தான், இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் சண்டைக்காட்சிகள், The Matrix திரைபபடத்தில் உள்ளதைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருபபதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இசை பழமையான சீன இசைக்கருவிகளைக் கொண்டு அமெரிக்க பாணியில் அமைக்கப்பட்டதாகும். இதனால் இதன் இசை சீனா, தாய்லாந்து, மலோசியா போன்ற நாடுகளில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் வரவேற்பை பெற்றது. மேலும் திரையிட்ட எல்லா நாடுகளிலும், வசூலை வாரிகுவித்தது. பல விருதுகளையும் வாரி குவித்தது. அதையெல்லாம் விவரித்து எழுதினால் இந்த கட்டுரையின் போக்கு மாறும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்துகள்:

புத்தர் பரிநிபானம் ( உடலைத் துறத்தல்)அடைந்து 283 ஆண்டுகளுக்கு பிறகு அரியனையேறிய மாமன்னர் அசோகர். புத்தச் சமயத்தைப் பரப்ப பல நாடுகளுக்கும் புத்த பிக்ககளை அனுப்பியதைப் போலவே சீனாவுக்கும் புத்தச் சமயத்தைப் பரப்ப தனது மகள் சங்கமித்ராவை அனுப்பியதாக அசேகரின் பெஷாவர் கல்வெட்டும், அசோகவந்தனா நுாலும் குறிப்பிடுகின்றது. அதைப் போலவே, புத்தர் பரிநிபானம் அடைந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியவர், பல்லவ வம்சத்தைச் சேர்ந்த அரசர். போதி தர்மர். இவருடைய சமய குருவாக இருந்தவர். புத்தச் சமய பிக்குனி. பிரக்யதாரா அவருக்கு வந்த சீன தேசத்து அழைப்பை ஏற்க முடியாமல் அவர் பரிநிப்பானம் அடைந்த போது அவருடைய அனுக்கச் சீடரான, போதிதர்மாவிடம் சீன தேசத்துக்கு புத்தச் சமயத்தை பரப்ப செல்லுமாறு ஆனையிட, அதனையேற்ற புத்த பிக்கவான போதி தர்மா கி.பி.520 ஆம் ஆண்டு சீனா சென்றார். சீன புத்தச் சமய மகாயான மரபில் போதிதர்மர் 28 வது தலைமை பிக்குவாக பட்டியலிடப்படுகின்றார்.
மற்ற குங்பூ திரைப்படங்களுக்கும் குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்துக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே, மற்ற திரைப்படங்களில் போதி தர்மர் சீனத்தைச் சேர்ந்த புத்தச் சமயப் பிக்குகளுக்குக் கற்பித்த 72 வகையான குங்பூ முறைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வகையானவற்றை மட்டுமே பயன்படுத்தியிருப்பர், ஆனால் இந்தத் திரைப்படத்தில் மட்டுமே போதி தர்மர் போதித்த 72 வகையையும் பயன்படுத்தியிருப்பர். அவற்றில் புத்தரின் உள்ளங்கை (Buddha’s Palm) முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பார்.

இந்தத் திரைப்படத்தில் உள்ள அனைவருமே சண்டைக் காட்சிகளின் போது வெவ்வேறு விதமான குங்பூ முறைகளில் சண்டையிடவர். கோடாறிக் கும்பலில் உள்ள நபர்கள் கூட வெவ்வேறு முறைகளில் சண்டையிடுவதாகக் காண்பிக்கப்படுகின்றனர். சிலகாட்சிகளில்.

புத்த உள்ளங்கை: (தியானம்)

புத்தரின் உள்ளங்கை என்பது இரண்டு விதமானப் பொருளையும் பயன்பாட்டையும் குறிக்கும் ஒரு சொல்லாடலாகும்.
முதல் வகையான சொல்லாடல், தியானத்துடன் தொடர்புடையது, புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பும் பின்பும், தியானத்தின் போது பயன்படுத்திய முத்திரைகளைக் குறிக்கும் பொழுது பொதுவாக புத்தரின் உள்ளங்கை எனக் குறிக்கப்படுவதுண்டு. இந்திய வரலாற்றில் பகவான் புத்தர், 1888க்கும் அதிகமான முத்திரைகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் சீனாவில் புத்தர் 2800க்கும் அதிகமான முத்திரைகளைப் கண்டுபிடித்ததாக குறிப்பு உள்ளது. ஜப்பானில் 3800க்கும் அதிகமான முத்திரைகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பு உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் முத்திரைகள் என்பது பகவான் புத்தரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதே இங்கு நான் பதிவிட விரும்பும் தகவல்.

இருப்பினும் புத்தர் குறித்த எழுத்துக்களிலும், சித்திரங்கள், சிற்பங்கள், சிலைகள், என பலவற்றிலும் பெரும்பாலும் புத்தர் கீழ்கண்ட பத்து வகையான முத்திரைகளோடு மட்டுமே காட்சித் தருகின்றார். அவை

1.   அஞ்சலி முத்திரை
2.   உத்ரபோதி முத்திரை
3.   அபய முத்திரை
4.   விட்ராக் முத்திரை
5.   வஜ்ரா முத்திரை
6.   கர்ண முத்திரை
7.   வரத முத்திரை
8.   பிம்பிசார முத்திரை
9.   தியான முத்திரை
10.  தம்ம சக்ர முத்திரை இவைகள் புத்தரின் தியான முத்திரைகள் என அழைக்கப்படுகின்றது. இவற்றிலும் புத்தரின் உள்ளங்கைக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

புத்தரின் உள்ளங்கை( Buddha Palm) (குங்பூ)

புத்தரின் உள்ளங்கை முறைக்கு, ரு லாய் உள்ளங்கை அல்லது செலிஸ்டியல் உள்ளங்கை என வேறுசிலப்  பெயர்களும் உள்ளன. புத்தரின் உள்ளங்கை என்பது குங்பூ சண்டையில் பயன்படுத்தும்  பல சண்டை நுட்பங்களைப் போன்றது, மற்ற சண்டை முறைகளில் எதிராளியின் மீது கைகளால், முஸ்டிகளால், விரல்களால், கை ஓரங்களால் தாக்குதல் நிகழ்த்துவோம். ஆனால், புத்தரின் உள்ளங்கை முறைய எதிராளியை தொடாமலேயே தாக்கும் முறையாகும்.
கராத்தேவில் ஷூட்டோ, டேக்வாண்டோவில் நம்முடைய கை கத்தியைப் போன்று செயல்படும். ஆனால் புத்தரின் உள்ளங்கை முறையில் உள்ளங்கை கத்தியைப் போன்று அல்லது கூர்மையான ஆயுதம் போலச் செயல்படும்.  இந்த முறையில் ஒருவர் நிபுனத்துவம் பெற்றிருப்பாரெனில் அவரது உள்ளங்கை எதிராளியைத் தொடராமலேயே அவரை தாக்கும் வல்லமை பெற்றிருக்கும். மேலும் அது எத்தகைய கடினமானப் பொருளாக இருந்தாலும் அதை துாள் துாளாக்கும் அளவுக்கான வலிமையுடன் செயல்படும்.

இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளும் ஒருவர், ஆரம்ப நிலையில் மென்மையானப் பொருள்களில் துவங்கி, பின் மரக்கட்டைகளில் பயிற்சியெடுத்து, அதன் பின்னர் பாறைகளின் மீது பயிற்சி செய்து, இறுதி நிலையாக அதாவது மிகு நிபுணத்துவம் பெற்றவராக ( மாஸ்டர்) நிலை எய்தும் போது ஒரு பாத்திரத்தில் உள்ள சிறு துகளை அல்லது துரும்பை இரு சம பகுதியாகப் பிளக்க வேண்டும். இந்த நிலையை அடைய ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.

இதைத்தான் சிங் சிறுவயதில்  ஊமை பெண்னை ரவுடிக் கும்பலிடம் இருந்து காப்பாற்றும் பொழுது காட்சிப் படுத்தப்படும். கற்றுக் கொள்ள கடினமானதாகத் தோன்றினாலும் புத்தரின் உள்ளங்கை முறையைப் பயிற்சி எடுக்க உடல் பலமாக இருக்க வேண்டும் என்னும் தேவையில்லை. மாறாக பஞ்சபூத சக்திகளை தன் உடல்வழியாக வெளியேற்றும் அதே வேலையில் பிரபஞ்சத்திலுள்ள பஞ்சபூத ஆற்றலோடு இனைத்து எதிராளியைத் தாக்கும் நுட்பம் தெரிந்திருந்தாலே அவர்தான் புத்தரின் உள்ளங்கை முறையில் மாஸ்டர் எனப் போற்றப்படுகின்றார். குங் ஃபூ ஹஸ்டல் திரைப்படம் இந்த புத்தரின் உள்ளங்கை முறையை பிரமாண்டமான சக்தியாகப் பயன்படுத்தமுடியும் என்னும் நம்பிக்கையை இந்த முறையை பயில்பவர்களுக்குள் ஆழமாகக் கொண்டுச் சென்ற படமாகும்.  

நிறைவாக, புத்தரின் உள்ளங்கை தியான முறைக்கும், குங்பூ முறைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குவது பொருத்தமாக கூடுதல் புரிதலை உண்டாக்கும் என்பதால் விளக்க விரும்புகின்றேன். பொதுவில் தியானம் என்பது, பிரபஞ்ச ஆற்றலை ( Cosmic Rays) ஈர்க்கும் ஊடகமாக உள்ளங்கையை பயன்படுத்தும் முறையாகும். தியானிக்கும் போது நமது  உள்ளங்கை பிரபஞ்ச ஆற்றலை ஈர்பதால் நமது உடலும் உள்ளமும் இயக்கச் சமநிலை அடைகின்றது. ஆனால் குங்பூ முறையான புத்தரின் உள்ளங்கை முறையில், நமது உடலில் உள்ள பிரபஞ்ச ஆற்றலை நமது உள்ளங்கைகளில் இருந்து முதலில் வெளியேற்றி, அதனோடு பிரபஞ்ச ஆற்றலையும் சேர்த்து பேறாற்றலாக மாற்றி எதிராளியை தொடாமல் தாக்குதல் நிகழ்த்துவதாகும். இந்த கலையைப் கற்றுக் கொள்ள தாய்சி அடிப்படைப் பயிற்சியும் அவசியமாகும்.
தாய்சி கலை குறித்தும் போதி தர்மரின் போதனைகள் மற்றும் அவரின் புத்தச் சமயப் பங்களிப்பு குறித்து லங்கவாத சுக்தத்தில் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


Sunday, July 28, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 3



ஆங் பேக் ( Ong – Bak) ஆங்கிலம்

       ஆங் என்னும் தாய்லாந்து நாட்டின் சொல்லுக்கு உடல் உறுப்புகளில் தலை என்று பொருளாகும். பேக் என்னும் தாய்லாந்து சொல்லுக்கு பாதுகாத்தல் என்னும் பொருளாகும். ஆங் பேக் திரைப்படத்தின் முழுக்கதையும் அதன் தலைப்பிலேயே அடங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்.
·         டோனிஜா – டின்
·         பேட்சை ஓம்கம்லோம் – ஜார்ஜ் என்கின்ற அம்ளே
·         பும்முவாய் யோத்கமல் – மோதாய் மற்றும் பலர், நடித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் இந்த திரைப்படம், 21ம் தேதி சனவரி மாதம் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு பெயர்களிலும் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் டோனிஜாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையும் உலகெமெங்கும், வெற்றிகரமாக ஓடிய முதல் திரைப்படமாகும்.

ஆங் பேக் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்:
      
வடக்கிழக்கு தாய்லாந்தில் உள்ள பான் நாங் பிரது (Pan Nong Pradu) என்னும் கிராமத்தில் உள்ள மிகப் பழமையான புத்தர் விகாரில் உள்ள  புத்த வெண்கலச் சிலையின் பெயர் ஆங் பேக். புத்தர் சிலையின் தலையை திருடும் ஒரு கும்பல், ஆங்பேக் புத்தர் சிலையின் தலையை திருடுச் சென்றுவிடுகின்றது.  (அந்த புத்தர் சிலையின் முகத்தில் இருக்கும் தழும்பு, ஏற்கனவே நடந்த ஏதோ ஒரு கலவரத்தினால் வெட்டுக்காயம்பட்டு மீ்ட்க்கப்பட்ட விவரத்தை நமக்கு காட்சியாகவும். பின்னர், பல புத்தர் சிலைகளின் தலைகளில் இருந்து எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கின்றது)
       
திருடப்பட்ட புத்தரின் தலையை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் மீட்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்திலுள்ள டின் என்னும் இளைஞன் அந்த கிராமத்திலுள்ள புத்த பிக்குவிடமிருந்து முவாய் (Muay) தாய்லாந்து நாட்டின் கிராமப்புற தற்காப்புக் கலையை கற்றுத்தேர்ந்தவன். அவனே தன்னார்வத்துடன் அந்தச் சிலையை மீட்க தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங் கிளம்பிவருகின்றான். அவனுடைய பயணத்துக்கு அந்த கிராமத்து மக்கள் தங்கள் கைவசமுள்ள நகை, பணம், பொருட்களை கொடுத்து அனுப்புகின்றனர்.
       
அதே கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்றழைக்கப்படும் அம்ளே என்னும் இளைஞன் பாங்காங்கில் உள்ளதால் அவனை அவனுடையத் தந்தையின் கடிதத்துடன் சென்று சந்திக்கின்றான். அம்ளே ஆரம்பத்தில் டின்னை வைத்து பந்தயச் சண்டையில் போட்டியிட்டு பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கின்றான், பின்னர் மனம் திருந்தி, ஆங்பேக் சிலையின் தலையை மீட்க உதவிச் செய்கின்றான். உடன் அவனுடைய காதலியும் உதவி செய்கின்றாள்.
     
பின்னர் புத்தர் சிலையின் தலையை திருடும் கும்பல் தலைவன் கொம்துவன் ஆங்பேக் சிலையின் தலையுடன் தாய்லாந்து பர்மா எல்லையில் உள்ள குகையில் இருப்பதை அறிந்து அங்குச் செல்கின்றனர். அந்தக் குகையில் உள்ள பிராமாண்டமான புத்தரின் கற்சிலையின் தலையை துண்டிக்கும் வேலை நடைபெற்றுக்கொண்டிருப்பதால்,  அந்தக் குகைக்குச் சென்று டின்னும், ஜார்ஜீம் சண்டையிடுகின்றனர். சண்டையின் போது, குகையில் உள்ள பிராமாண்ட கற்சிலையின் தலை உருண்டு விழுகின்றது, ஜார்ஜ் ஆங் பேக் சிலையைக் காப்பாற்றி டின் வசம் தந்துவிட்டு, தனது அன்பை தன் ஊர்காரர்களுக்கும் அப்பாவிடமும் தெரிவிக்கச் சொல்லி உயிரிழக்கின்றான்.
       
இறுதியாக, ஆங்பேக் புத்தர் சிலையின் தலை பான் நாங் பிரது கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு புத்தர் சிலையுடன் தலை பொருத்தப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. ஜார்ஜின் அஸ்தி புத்த பிக்குவின் கரங்களால் யானையின் மீது கொண்டுவரப்பட்டு மரியாதைச் செலுத்தப்படுகின்றது. ஜார்ஜின் காதலியும் அந்த கிராமத்திலேயே தங்கிவிடுகின்றாள்.

ஆங் பேக் திரைப்படத்தின் சிறப்புகள்:
       
திரைப்படத்தின் துவக்கத்தில் காண்பிக்குப்படும் மரத்தின் மீது கொடியேற்றி அதனை கைப்பற்றுவதற்காக நடக்கும் சண்டை விளையாட்டு ஒவ்வொரு நாட்டிலுள்ள கிராமத்திலும் நடக்கின்ற விளையாட்டாகும். இதனை காட்சிபடுத்தியிருப்பது இந்தப் படத்தின் சிறப்பாகும். இந்தப் படத்திலுள்ள சண்டைக் காட்சிகள் முழுவதும் முவாய் சண்டைக் கலையைப் பயன்படுத்தி எடுக்கப்ட்டதாகும். தாய்லாந்து நாட்டின் பராம்பரியச் சண்டைக் கலையை முதன்முதலாகத் திரையில் பயன்படுத்தி உலகமெங்கும் அதற்கென ரசிகர்களை ஏற்படுத்தியதும் மற்றொரு சிறப்பாகும்.

தாய்லாந்து நாட்டின் புத்தச் சமய வரலாறு:
       
தாய்லாந்து நாடு புத்தச் சமயத்தில் தேரவாதத்தைப் பின்பற்றும் நாடாகும். தாய்லாந்து நாட்டின் புத்தசமய வரலாற்று நுாலின் படி புத்தரே, தாய்லாந்து நாட்டிற்குச் சென்று, புத்தச் சமயத்தைப் பரப்பியதாக தகவல் அளிக்கின்றது. ஸ்ரீலங்கா நாட்டின் மகாவம்சம் நுாலின்படி, பேரரசர் அசோகர், தாய்லாந்து நாட்டிற்கு புத்தச் சமயத்தைப் பரப்புவதற்காக சேனா தேரோ மற்றும் உத்தர தேரோ ஆகிய இரண்டு புத்தப் பிக்குகளிடம் புத்தரின் அஸ்த்தி மற்றும் புனிதமான சிலப் பொருட்களையும் தந்து அனுப்பியதாக சொல்கின்றது. அவ்வாறு புத்தர் தந்த புனிதப் பொருட்கள் இன்றும் தாய்லாந்து நாட்டின் நக்கோன் பத்தோம் (Nakon Pathon) ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும், அசோகரின் துாதர்கள் வந்த  இடத்தில் அசோகரின் நினைவுத் துான் வைக்கப்பட்டுள்ளது.
       
தற்போதைய நிலையில் தாய்லாந்து நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 94 சதவிகிதத்தினர் புத்தச் சமயத்தை பின்பற்றுவதாகவும், 4.6 சதவிகிதத்தினர் முஸ்லீம் சமயத்தையும் பின்பற்றுகின்றனர். இதர பிரிவுகளாக, சீக்கியர்கள், கிருத்துவர்கள், மற்றும் இந்துக்கள் வாழ்கின்றனர்.
       
தாய்லாந்து நாட்டில் உள்ள, புத்தச் சமயக் கோயில்களில், 310 கோயில்களை தாய்லாந்து நாட்டின் அரசர் பரம்பரையினர் வழிபடுவதற்காகவும், 39,883 கோயில்கள் தனியார் வசமிருப்பதாகவும் 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிவரம் சொல்கின்றது. 2,98,580 புத்த பிக்குகள் உள்ளனர். தாய்லாந்து நாட்டில் உள்ள அனைவருமே எப்போது வேண்டுமானாலும் குறுகிய கால பிக்குவாக மாறுவதற்கு வழியுள்ளது. இதனை ஆங் பேங் திரைப்படத்தில் ஜார்ஜின் கதாப்பாத்திரம் வழியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் கதாநாயகன் டோனி ஜாவும் 28 மே மாதம் 2010 ஆம் வருடம் தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் புத்த தேவாலயத்தில் புத்த பிக்குவாக தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படியான புத்த பிக்குவாக மாறினார்.


ஆங்பேக் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்தியல்கள்:
       
ஆங் பேக் திரைப்படத்தில் புத்தச் சமயக் கருத்தியல்கள் எதுவும் இடம்பெறவில்லை, மாறாக, இந்தியாவில் புத்தச் சமயத்தை அழித்த வரலாற்றை  நவீன பானியில் சித்தரிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், மகாபாரதத்தில் உள்ள கர்ணன், மற்றும் துரியோதனன் நட்பை நடப்புக் காலத்துக்கு மாற்றி தளபதி படமாகத் தந்ததைப் போல், இந்திய புத்தச் சமயத்தின் வீழ்ச்சியை நடப்புக் காலத்துக்கு ஏற்ற வகையில் சொல்லியிருப்பார்கள்.

இந்தியாவில் புத்தச் சமயம் வீழ்ந்த வரலாறு:
       
கி.மு. 185 ஆண்டில் மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி பேரரசரான, பிரகதர்த்தா விடம் தளபதியாக இருந்த பிராமணரான புஷ்யமித்ர சுங்கன், ஒரு இரானுவ அணிவகுப்பின்போது, பிரகதர்த்தா மௌரிய அரசரைக் கொன்று, இந்திய வரலாற்றில் சுங்க வம்சத்தின் ஆட்சியை துவக்கினார். புஷ்யமித்ர சுங்கன் சுங்க வம்சத்தின் முதல் பேரரசராக முடிசூடிக் கொண்டார்.
தனது பெயர் வரலாற்றில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என புஷ்யமித்ர சுங்கன் தனது பிராமண குருக்களிடம் கேட்டபோது, அசோகர் புத்த சமயத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய புத்த சமயத்தையும், நிறுவிய 84,000 ஸ்துாபிகளையும் அழித்தால் வரலாற்றில் நீங்கள் நீங்கா இடம் பெறுவீர்கள் என சொன்ன அறிவுரையை ஏற்று, அசோகர் உருவாக்கிய புத்தச் சமய நினைவுத் துாண்களை அழிக்கின்றார்.
       
எல்லாவற்றிற்கும் மேலாக, புத்த பிக்குகளின் தலையை கொண்டுவருவோருக்கு 100 தினார்கள் ( தங்க நாணயங்கள் ) பரிசலிக்கப்படும் என அரசாங்கத்தால் அறிவிப்பும் செய்கின்றார். இதன் காரணமாக மக்களும், பணத்துக்கு ஆசைப்பட்டும், அரசியல் லாபமடையும் பொருட்டும், பாதுகாப்புக்காகவும், புத்த பிக்குகளின் தலையைக் கொன்று தங்க நாணயங்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். மேலும்  அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நமது வீடுகளில் கல்யாணப் பூசனியை பலிகொடுக்கும் நிகழ்வை சுபச் சடங்கு மற்றும் அசுபச் சடங்கின் போது நிகழ்த்துகின்றோம்.
       
இந்த வரலாற்ற நிகழ்வையே டோனிஜா ஆங்பேக் திரைப்படத்தில் கதைக்களனாக்கியிருப்பார். புஷ்யமித்ரன் பேச்சுத்திறன் இல்லாத அரசன் என்பதை உருவகப்படுத்தவே, வில்லனுக்கு குரல் இல்லாமல் செயற்கைக் கருவிகளின் வழியாகப் பேசுவதாக நவீன குறியீட்டை வைத்திருப்பார். மேலும் இறுதிக் காட்சியில் இடம்பெறும் பிரமாண்ட புத்தர் சிலையின் தலை தகர்ப்பு மற்றும், புத்தரின் சிலைகளின் தலையை விற்பனை செய்வது என புஷ்யமித்திரன் வரலாற்றில் செய்த அனைத்தையும் வில்லன் செய்வதாகவே உருவகப்படுத்தியிருப்பார். 

இந்திய புத்தச் சமய வீழ்ச்சியை துணிச்சலாக படம் பிடித்த திரைப்படம் ஆங் பேக் ஆகும்.

ஆங் பேங் திரைப்படத்தின் தமிழ் லிங்க்




இதையும் படியுங்கள்