Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Monday, September 2, 2019

கிராமங்களில் புத்த விகார்.



கிராமங்களில் புத்த விகார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இந்திய நாட்டு மக்களுக்கு இன்னும் சமத்துவம் வந்து சேரவில்லை. இரண்டாயிரத்து ஐறுாறு ஆண்டுகளுக்கு முன் மனு மையப்படுத்திய பிறப்பின் அடிப்படையிலான சாதிய மற்றும் குல பாகுபாடுகள் அப்படியே நீடித்து இந்திய சுதந்திரம் என்னும் வார்த்தையின் பொருள், சாதிய அடுக்கில் கடை நிலையில் உள்ளவர்களை போய்ச் சேராமல் இன்னும் அன்னியப்பட்டுத்தான் நின்று கொண்டிருக்கின்றது இன்று வரையிலும். 

இந்திய சுதந்திரம் என்பது இன்று வரையிலும், பார்பணர்களுக்கும், அவர்களின் ஆளுமையை ஏற்றுக் கொண்ட இடைநிலைச் சாதிகளின்  அதிகார குவிப்பாகவே இருக்கின்றது.  அவ்வாறு அரசியல் அதிகார குவிப்பை கொண்டவர்கள் தங்களின் அதிகார குவிப்பைத் சோதித்து கொள்வதற்காகவும், பாதுகாத்து கொள்ளவும், பட்டியல் இன மக்களின் மீது தாக்குதல் தொடுப்பதும், பெண்களை வன்புனர்வு செய்வதும், சேரிகளில் உள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்துவதும், கைகளால் மலம் அள்ளச் செய்வதும், செத்த பிணத்தை துாக்கச் செய்வதும், தோட்டி வேலை செய்வதும், என இந்த இருபதாம் நுாற்றாண்டிலும், மனித மாண்புகளுக்கு ஒவ்வாத வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.


அவ்வாறு அந்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் மீதும், பழக்கப்படுத்தாமல் பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை எதிர்த்து எழும் பட்டியல் இனத்தவர்கள் என இருவரின் மீதும் இந்து மத அரசியல் அதிகாரம் பாகுபாடில்லாமல் வன் கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இன்னும் இந்தியாவில்.
 பொதுவாகவே, எந்த ஒரு செயலுக்கும் பின்புலமாக
·         சமூக ஆதரவு
·         அரசியல் ஆதரவு
·         சமய ஆதரவு -  ஆகிய மூன்று சக்திகளின் ஆதரவின் அடிப்படையில் அமையும்.

அந்த வகையில் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இந்த மூன்று வகையான பின்புலத்தின் ஆதரவும் மிக எளிதாகவே கை கோர்த்துக் கொள்கின்றன. குறிப்பாக, இந்து சமயத்தின் ஆதரவு மிக எளிதாக இடைநிலை சாதிகளுக்கும் பார்ப்பணர்களுக்கும் கிடைத்து விடுகின்றது, இதன் அடிப்படையிலேதான் அம்பேத்கரும், “ சாதி இந்துக்களும் பார்ப்பணர்களும், நாவிலே இராமனையும், கையிலே கூர் வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப் போன்று பேசுவார்கள், ஆனால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள் என்றார். 

       உலகம் முழுமைக்கும் உள்ள பொதுவான அரசியல் மற்றும் மத ஆதரவு என்பது, ஒரு வரையறையைக் கொண்டிருக்கின்றது, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமயமும், அரசியலும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இனைந்து செயல்பட்டு  தாக்கத்தை உருவாக்க வல்லவை, அதே நேரத்தில் ஒன்றின் வளர்ச்சிக்கு ஒன்று எப்பொழுதும் துனையாய் நிற்கும்.

 மதத்தை ஆதரிக்காத அரசியல் வெற்றியடையாது, அரசியலை ஆதரிக்காத சமயத்திற்கு அதிகாரம் கிடைக்காது என்பதுதான் அனைத்து மதம் மற்றும் அரசியலுக்கான அடிப்படை சட்டமாக இருக்கின்றது. எவ்வாறெனில் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் அது ஏதாவது ஒரு பெருவாரியான மக்கள் திரளைக் கொண்ட சமயத்தை ஆதரிக்க வேண்டும், அப்பொழுதுதான் அது வெற்றி பெற இயலும், அல்லது எந்த சமயமாக இருந்தாலும் அது ஒரு பெரும்பான்மை கூட்டத்தைக் கொண்ட அரசியலை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல ஒன்றையொன்று தழுவியும் ஆதரித்துமே வளர்ந்து வந்திருக்கின்றன வரலாற்றில் இன்று வரையிலும்.

இன்னும் சற்று விரிவாகச் சொல்வதென்றால், தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, மதம், மடம், மற்றும் கோயில் இவைகளைச் சார்ந்து இருக்கும் எப்பொழுதும், மாநிலக் கட்சிகளின் அரசியல் என்பது, வழிபாட்டு முறைகள் ( கோயில்களில் ஆடு, சேவல், மற்றும் உயிர்பலி தருதல்) மற்றும் வழிபாட்டு உரிமைகளைச் ( அனைத்து சாதியினரும் அர்சகர் ஆவது, கோயில் உள்ள தெருவில் அக்கிரகாரத்தில் நடப்பது) சார்ந்து இருக்கும்,

மதத்தின் அடிப்படையில் அரசியலைப் பிரிப்பதாயின், திராவிடக் கட்சிகளின் அரசியல் என்பது, கோயில் நுழைவு உரிமையைக் கோருகின்ற அரசியலாகவே இருக்கின்றது, அவர்களின் நோக்கம் எப்பொழுதும் பார்ப்பணர்களின் இடத்தை பிற்படுத்தப்பட்ட சாதிகள் பங்கிட்டுக் கொள்வது, அதே நேரத்தில் பார்ப்பணர்களின் அதிகாரத்தையும் பங்கிட்டுக் கொள்வது, இதை அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையில்லாமல் சமாதானமாகவே செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் போராடி பெறுகின்ற உரிமையை தங்களுக்குள் மட்டுமே பங்கிட்டுக் கொள்கின்றனரே ஒழிய, தங்களை விட கீழ்நிலையில் இருக்கும் பட்டியலின சமூகத்தோடு பங்கிட்டுக் கொள்வதும், அல்லது அவர்களையும் இணைத்துக் கொள்வதும் இல்லை, ஏனெனில், பார்பபணர்களுக்கு கீழ் தாங்கள் இருப்பதை எப்படி பெருமையாக கருதுகின்றனரோ, அதைப் போலவே, தங்களுக்கு கீழ் பட்டியலின சாதிகளும் இருப்பதைப் அம்மக்கள் பெருமையாக கருதவேண்டும் என நினைக்கின்றனர், அல்லது அவ்வாறு நினைக்க கட்டாயப்படுத்துகின்றனர். இத்தகைய கட்டாய சாதிய ஆதிக்கத்தை பட்டியலினத்தவர்கள் எதிர்க்கும் பொழுதுதான், சாதியக் கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

இன்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சேரிகளிலும், குடிதண்ணீர் பிரச்சனை இருக்கின்றது. சுடுகாட்டு பதை ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, பல கிராமங்களில் சுடுகாடே ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, சேரிகளுக்கான பாதைகள் இல்லாமல் இருக்கின்றது, தெருவிளக்கு இல்லாமல் இருக்கின்றது, பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது, ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினத்தவர் இருந்தால் அவர் உட்காருவதற்கு கூட இருக்கை தராத ஊராட்சிகள் இருக்கின்றது, ஊர்பகுதியில் வாழ இயலாத மற்றும் வேலை செய்ய இயலாத சூழ்நிலைதான் இருக்கின்றது. இதைப் போல எத்தனையே வன்கொடுமைகளைச் சொல்லிக் கொண்டு போகலாம், ஆனால் கட்டுரையின் பொருள் மாறிவிடும் என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். இத்தகைய வன்கொடுமைகளை உரிமையின்மையை எதிர்த்து பட்டியலினத்தவர் எவராவது குரல் கொடுத்தால் அதை சாதிய கலவரத்தை உருவாக்கி அழிக்கின்றனர்.

அவ்வாறு உருவாக்கப்படும் சாதிய  கலவரங்களில் பட்டியலின மக்களின்  வாழ்வாதரத்தை அழித்து, உயிர்பலி நிகழ்த்தி, குடிசைகளையும், வீடுகளையும் கொளுத்தி அம்மக்களை அனாதைகளாக்கும் பொழுது,  அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு யாரும் இல்லை, தங்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் வாழ இயலும் என்னும் மனோபாவத்தை பட்டியலின மக்களிடம் உருவாக்குவதற்காகவே சாதிய கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

மேலும், அரசாங்கம் என்பதே, இடைநிலை சாதிகளின் கையில்தான் எப்பொழுதும் இருக்கின்றது, இத்தகைய சாதிய கலவரங்கள் நடக்கும் பொழுது, எல்லா அரசாங்கமும், சாதிய கலவரங்களுக்கு துனை போகின்ற ஒரு அமைப்பாகத்தான் இருக்கும் செயல்படும். அதற்கான அன்மைய உதாரணம், ஆணவக் கொலைகள்,

பொதுவாகவே, இடைநிலைச் சாதிகள் தாங்கள் அனுபவித்து வரும் பொதுச் சொத்துகள், மற்றும் அரசு, அரசியல் அதிகாரத்தில் பட்டியலின மக்களுக்கான பங்கேற்ப்பை விரும்பாதவர்களாக இருக்கும் பொழுது, காதல் திருமணத்தின் வழியாக, தங்களுடைய குடும்பத்திலும், குடும்பச் சொத்திலும் பங்கேற்பதை எப்படி விரும்புவார்கள் அல்லது ஏற்றுக் கொள்வார்கள், அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தை தனது கைகளில் வைத்திருப்பவர்களால் இந்த ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தற்பொழுது முன்னின்று நடத்தப்படுகின்றது.

சாதியம், மதம் மற்றும் அரசியல் இந்த மூன்று கூட்டணியின்  அனுகுமுறைகளின் வழியாகவே நாம் எதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் பட்டியல் சாதியினரின் அரசியல் மற்றும் சமய அனுகுமுறையை அலச வேண்டியுள்ளது. பட்டியல் இனத்தவர்களின் அரசியல் மற்றும் சமயம் என்பது மதம் மற்றும் அரசியல் பினைப்பை உணராத நிலையிலேயே உள்ளதாகவேத் தெரிகின்றது. மேலும் அது தான் சார்ந்த மக்களுக்கான தொலை நோக்கு கொண்ட இயக்கமாகவும் இயங்கவில்லை. உணர்வு அரசியலாகவும், ஒப்பாரி அரசியலாகவுமே தம்மை இது வரையிலும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன, அனைத்து பட்டியலின சாதி கட்சியினரும்.

எப்படி பார்ப்பணர்கள் கோயிலை அதிகார மையமாகக் கொண்டு அரசியல் செய்கின்றார்களோ, எப்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், கோயில் நுழைவு, வழிபடும் உரிமை என்ற பின்புலத்தில் அரசியல் தளத்தில் பங்கெடுக்கின்றார்களோ, அதைப் போலவே பட்டியலின மக்களுக்கும் குலசாமி, மற்றும் சோலைக் காடுகள் என உண்டு இதன் அடிப்படையில் இந்த பின்புலத்தில் பட்டியலின சாதியினரின் அரசியல் கட்டமைக்கப்படாமல், இந்து மதத்தின் உதிரிகளாகவே தமது கட்டமைப்பை தொடர்ந்து கொண்டிருப்பது, வடிவேலுவின் வசனமாகச் சொல்வதென்றால், பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மென்ட் வீக்காகவே இருக்கின்றது.

குலசாமி, சோலைக் கோயில்கள் என்பனவற்றிற்கு மூலதாரமாக பௌத்தம் வந்து நிற்க்கும், இந்த பின்புலத்துடன், பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடே, சகோதரத்துவம் மற்றும் சமத்துவம். ஆகிய இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் பொதுச் சமூகத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே தன்னை கட்டமைத்துக் கொண்டது பௌத்த சமயம்.

அதே போல், போதிசத்வா. அம்பேத்கர் அவர்களும் சமத்துவத்தை கற்பிக்காத இந்து மதத்தில் இனியும் இருந்து பயனில்லை என்ற முடிவின்படி,  இந்தியாவில் தோன்றிய மதங்களில் வயது முதிர்ந்ததும் முழுமையானதுமான பௌத்தம் ஏற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், பட்டியல் இன மக்கள் இன்னும் அம்பேத்கரை பின்பற்றி, பௌத்தம் தழுவி பிறப்பின் அடிப்படையிலான இந்து மத சாதியக் கட்டமைப்பான தீண்டத்தகாத சாதியினர் என்னும் நிலையினையும் மாற்றாமல், இந்து மதம் கட்டமைத்த இழி சாதியினன் அல்லது தீண்டத்தகாதவன் என்னும் நிலையோடு இன்றும் தங்களின் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் தோல்வி மற்றும் அம்பேத்கரின் பௌத்த சமய மாற்றம் ஆகிய இரண்டையும் நாம் இணைத்துப் பார்க்கத் தவறிவிட்டோம்.  இன்றைக்கு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குத் தோன்றுகின்ற உணர்வான, நாட்டு மக்களை சமப்படுத்தி, ஒற்றுமை உணர்வுடன் வாழ பழக்கப்படுத்ததாத இந்திய சுதந்திரம் என்பது, அதிகார மாற்றமே தவிர. சமூக மாற்றம் இல்லை என்தை  போதிசத்வா அம்பேத்கர் அப்பொழுதே தெளிவாக சொன்னார்.
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் அரசியல் பின்னடைவுக்கான காரணங்களாக இருப்பவை.
·         சமூக ஆதரவின்மை
·         சமய ஆதரவின்மை
·         அரசியல் ஆதரவின்மை ஆகிய முப்பெரும் சக்திகளின் ஆதரவை இழந்து அரசியல் களத்தில் எதை சாதிக்க இயலும் என நம்பிக் கொண்டிருக்கின்றனரோ தெரியவில்லை.
1.   தேசிய மற்றும், மாநில கட்சிகளில் இருக்கும் பட்டியலினத்தவரையும், பட்டியலின மக்களின் தலைமை கொண்ட கட்சிக்கு கொண்டு வருவதிலும் அது இன்னும் வெற்றியடையவில்லை. இது அந்த கட்சிகளுக்கு தான் சார்ந்த சமூகத்தின் ஆதரிவில்லை என்பதை காட்டுகின்றது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்சிகளில் பிரிந்திருந்தாலும் அவர்களுக்கு சமய ஆதரவு மற்றும் சமூக ஆதரவு இருப்பதால், இந்த பிரிவினையும் தங்களுக்கான வளர்ச்சியாகவே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாகவே அது அமைகின்றது.
2.   தமிழகத்தில் பட்டியல் இன அரசியல் குழுக்கள், தங்களின் சமய நெறியாக பௌத்தத்தை ஏற்காமல், தாங்கள் தனித்து நின்று வெற்றிபெற இயலாது என்ற உண்மையை  இதுவரையிலும் உணரவில்லை. மேலும் தனது மக்களை இந்து மதத்தில் இருந்து முழு அளவில் வெளியேற்றி பௌத்தம் ஏற்கச் செய்யும் செயல்திட்டம் எதுவும் இல்லை.

3.   இந்து மதத்தில் இருந்து கொண்டே தனது செயல்திட்டமான அதிகாரப் பங்கீடு, என்பதில் வெற்றியடைய இயலாது என்பதையும் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் இந்து மதம் என்பது வருணாச்சரமத்தை அடிப்படையாகக் கொண்டதால், பார்பணிய, சத்திரிய, வைசிய மற்றும் சூத்திரர்களின் அங்கிகரிக்கப்பட்ட மதமாக இருக்கின்றது, இந்த பட்டியலில் இனையாத பஞ்சமர்களின் மதமாக இந்து மதம் எப்பொழுதும் இருந்ததில்லை.

4.   தங்களுக்கான சமயமாக அம்பேத்கர் காட்டிய பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்த சமயத்தின் பின் புலத்தில் அரசியல் நிகழ்த்த வேண்டும் என்னும் சமய அரசியல் கூட்டணியை இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

5.   பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு சிதறலும், பட்டியலின மக்களின் வாக்கு குவியமும் வெற்றிக்கான முக்கிய காரணிகள் என்பதையும் இன்னும் உணரவில்லை, இதை உணர்ந்து இருந்தால், சேரிகள் தோறும் வாக்கு குவியத்தை உருவாக்கி, பெருமளவில் ஊராட்சி மன்ற தேர்தலில், சட்டமன்ற, பாராளுமன்ற தேல்தலில்  வெற்றி பெற்றிருக்க இயலும்.

இறுதியாக, இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில், பட்டியலின சாதியினரும், பட்டியலின சாதிக்கட்சியினரும், தங்களின்
·         சமூக ஆதரவு
·         சமய ஆதரவு
·         அரசியல் ஆதரவு என்னும்  மூன்று நிலைப்பாடுகளையும் வலுவாக்கி கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதன் அடிப்படையில் தங்களின் முதன்மை பணியாக, இந்துக்களாக இருக்கின்ற பட்டியலினத்தவரையும், சேரி மக்களையும், போதிசத்வா. அம்பேத்கர். முன் மொழிந்த பௌத்தத்தை ஏற்கச் செய்து, பட்டியலின மக்களுக்கான சமய ஆதரவை உருவாக்கும் தளமாக பௌத்தத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு சேரிகளிலும் ஒரு பௌத்த விகாரை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கான சமய அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியமான பணியாகும்.

சமயம் என்பதே சமூகங்களின் ஒருங்கினைப்பு என்பதால், சமயத்தின் வழி, சமூக ஆதரவு எளிதாக கிடைக்க செய்ய இயலும், அதன் அடிப்படையில் அரசியல் ஆதரவு என்பது மிக எளிதாக கிடைக்கும். இத்தகைய பின்புலத்தை உணராத பட்டியலின சாதியினரின் அரசியல் என்பது பகல் கனவாகத்தான் முடியும்.

இதை முழுமையாக உணர்ந்த பின்னரே அம்பேத்கரும், இம்மக்களின் சமயமாக பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அவருக்கு முன்னரே, பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை, பண்டிதர். அயோத்திதாசர், பேராசிரியர். லட்சுமி நரசு, பன்மொழிப் புலவர். கா. அப்பாதுரையார், தந்தை சிவராசு,  போன்றோரும் அவர்காலத்தில் வாழ்ந்த பல பட்டியலின தலைவர்களும், பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை முன் நிறுத்தினர், மேலும் பௌத்த சமயத்தின் ஆதரவு என்னும் பின்புலத்தில் தங்களின் அரசியலையும் வடிவமைத்துக் கொண்டனர்.

இன்று சேரிகளில் உள்ள பெருந்தெய்வ கோயில்கள் பார்பணிய, இடைச்சாதிகளின் ஆதிக்கத்தின் அடையாளங்கள் என்பதை சேரி மக்களுக்கு உணர்த்தி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான புத்தரின் விகாரை சேரிகளில் கட்டமைக்க வேண்டும். அல்லது, புத்தர் ஞானம் பெற்றதற்க்கு அடையாளமாக உள்ள அரச மரத்தின் கீழ் இருக்கும் பிள்ளையார் சிலைகளைப் போல, சேரிகள் தோறும் அரச மரத்தின் கீழ் புத்தரின் சிலைகளை வைத்து வழிபாடும், தியானமும் நடைபெற வேண்டும்,

சேரியிலுள்ளவர்கள் வழிபட ஒரு கடவுள் அல்லது சமயத்தை காண்பிக்காதவரை, அம்மக்கள் இந்து மதத்தின் பெருந்தெய்வங்களையும், சிறு தெய்வங்களையும் தனக்கான கடவுளாக பாவித்து வழிபடத்தான் செய்வார். அவ்வாறு வழி படச் செய்யும் போது அவர் இயல்பாகவே பட்டியலின மக்களின் அரசியல் ஆதரவு என்னும் நிலையில் இருந்து இந்து மதம் வழியாக கட்டமைக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஆதரவாளராகத்தான் தம்மை அடையாளப்படுத்துவார். அவ்வாறுதான் அடையாளப்படுத்த இயலும்.

எனவே இந்த நிலை மாற பட்டியலினத்தவர்கள் தனக்கான சமயமாக பௌதத்தையும், கடவுளாக புத்தரையும் ஏற்க செய்ய வேண்டியது பட்டியலின சாதியினரின் அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாக மாற வேண்டிய காலத்தேவையும் தற்போது உள்ளது.
  

Friday, August 30, 2019

மணிமேகலையில் மனம்

மணிமேகலையில் மனம்


உலகின் பழம் பெருமை வாய்ந்த மொழிகள் 5 அவை, தமிழ், கிரேக்கம், இலத்தின் , பிரஞ்ச், மற்றும் வடமொழி என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதம், இவற்றுடன் உலகின் தொடர்பு மொழியாக விளங்குகின்ற ஆங்கிலம். இவற்றில் உலகின் வணிக மொழி என்ற சிறப்புப் பெயர் ஆங்கிலத்துக்கும், உலகின் வேத மொழி என்று சமஸ்கிருதத்துக்கும், அறிவியல் மொழி என்று பிரஞ்ச்கும், உலகின் காதல் மொழி என்ற சிறப்புப் பெயர் இலத்தினுக்கும், உலகின் சமய மொழி என்ற சிறப்புப் பெயர் தமிழுக்கும் உண்டு. இவற்றில் உலகம் வியக்கும் காவியங்களான
·         இலியட்
·         ஒடிசி 
·         ஒர்க்ஸ் அண்ட் டேஸ்
·        தியோகானி 

போன்ற இலக்கிய காப்பியங்களை முதலில் உலகிற்க்கு தந்ததனால் கிரேக்கம், உலகின் காப்பிய மொழி என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. 
       
உலகம் வியக்கும் வகையில் அதிகமான காதல் கவிதைகளையும், ஆழமான காதல் கதைகளையும் தந்துள்ள காரணத்தினால் உலகின் காதல் மொழி என்றே இலத்தின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது.
       
தொழிற் புரட்சிக்குப் பிறகு, பெரும் இயந்திரங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்து தமது மொழிப் பெயரிட்ட காரணத்தினால், பிரஞ்ச் மொழி உலகின் அறிவியல் மொழி என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. வேதங்களை, கொண்டிருப்பதால் சமஸ்கிருதத்துக்கு வேதமொழி என்ற சிறப்பு பெயர் உள்ளது. தமிழுக்கு எதன் அடிப்படையில் சமய மொழி என்ற பெயர் வந்தது என்பதை இங்கு விளக்க இயலாது. காரணம், தமிழில் மட்டுமே அனைத்து இலக்கியங்களும், சைவம் அல்லது வைணவம் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு அதைத்தவிர வேறு சமயங்கள் தமிழில் இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன இதுவரையிலும். 
       
தமிழிலக்கியம் இன்று வரையிலும் அறிவியல் வழி நின்று கற்பிக்கப்படுவதில்லை, எல்லா செய்திகளும், விவரங்களும், வர்ணணைகளாகவும் சமய நோக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அல்லது வெறும் தகவலாக விளங்கி கொள்ள வைப்பது இவை இரண்டும் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உதாரணமாக ஒரு சில..

அவ்வையாரின் “ ஆழ அழுக்கினும் ” என்னும் மூதுரை பாடலில் இருப்பது அறிவியல் அடிப்படையில் பாஸ்கல் விதி என்னும் கோட்பாடு, ஆனால் இன்று வரையிலும் தமிழறிஞர்கள் எவரும், தமிழிலக்கியத்தில் அவ்வையார் இந்த கருத்தை எங்கிருந்து எடுத்து கையாண்டார், அந்த கருத்து எப்படி வந்தது என்ற ஆய்வு நோக்கில் விளக்கம் அளிக்க வில்லை,

அதைப்போலவே, கம்பர், “ அனுவிலும் உளனே, அனுவை சத கூறக்கினும் உளனே, என்று தனது கம்பராமாயனத்தில் கூறியுள்ளார், அனு என்னும் கோட்பாடும், அனுவை பிளக்க இயலும் என்ற கருத்தும் இருபதாம் நுாற்றாண்டில் மட்டுமே உலகிற்க்கு தெரியவந்த கருத்துக்கள், ஆனால் அதற்க்கு முன்பே கம்பர், தனது நுாலில் அனு மற்றும் அனுவை நுாறாக பிளப்பது போன்ற அறிவியல் கருத்துக்களை முன் மொழிந்திருக்கின்றார் என்றால், கம்பரால் அந்த கருத்து எங்கிருந்து எப்பொருளில் எடுத்துக் கையாளப்பட்டது, கம்பர் கையாளுவதற்க்கு முன்பு அந்த வாக்கியம் எங்கிருந்தது வேறு எவரெல்லாம் அந்த பொருள் குறித்து விளக்கியுள்ளனர்  என்ற நோக்கில் இன்றும் யாரும் விவரிக்கவில்லை, மாறாக பக்தி நோக்கில் அதை கொண்டுபோய் தட்டையானப் பார்வையை முன் வைக்கின்றனர், வாசகர்களுக்கும், கேட்பவர்களுக்கும், அவர்களும் இதை ஒரு தகவலாகக் கேட்டுக் கொண்டு எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமனைவரும் மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தையும் இது நாள் வரை வாசித்து வந்திருக்கின்றோம், அல்லது கடந்து வந்திருக்கின்றோம். உண்மையில் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரு கற்பனை காப்பியமாகும். எவ்வகையில் சொல்வதென்றால், தமிழர்களின் மரபு பாடல்கள் அல்லது கவிதைகளாகத்தான் இருந்திருக்கின்றது. அவர்கள் எந்த செய்தியையும் பாடல்களாக விவரித்து பழக்கப்பட்டவர்கள், காப்பிய மரபு அவர்களிடம் இல்லை,

ஆனால் வட இந்தியர்களுக்கோ, காப்பிய மரபு உண்டு, அவர்கள் எந்த செய்தியானாலும் பாடல் வடிவிலே காப்பியமாக்குவர், அதில் அந்த காப்பிய பாத்திரங்களுடன், தானும் ஒரு பாத்திரமாக வந்து போவார்கள், இந்த மரபில் எழுதப்பட்ட கற்பனைக் காப்பியங்கள்தான், இராமாயணம், இதில் இந்த காப்பியத்தை எழுதிய வால்மிகி, ஒரு பாத்திரமாக வந்து போவார்,


அதைப்போலவே, மகாபாரதமும், இவற்றை எழுதிய வியாசரும் ஒரு பாத்திரமாக வந்து போவார், வட இந்தியாவின் இந்த மரபின் தாக்கத்தில் முகிழ்ந்த மொட்டுக்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வடஇந்திய காப்பிய மரபின்படியே இதை இயற்றிய இளங்கோவடிகள், மற்றும் சீத்தலை சாத்தனார் ஆகிய இருவருமே ஒரு பாத்திரங்களாக வந்து போகின்றனர், இந்த காப்பியங்களில், இதன் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது, வட இந்திய மரபுப்படி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் காவியம்தான் சிலம்பும் மணிமேகலையும்.

பொதுவில் எழுத்து என்பது, “ வாழ்வியற் சம்பவங்களின் பாதிப்பாகும். அந்த வகையில் இளங்கோ அடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார் ஆகிய இருவரும், கண்டுணர்ந்த, கேட்டுணரந்த, அல்லது வாசித்துணர்ந்த சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்தவைதான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

மணிமேகலை காப்பியத்தை நாம் சிலப்பதிகாரத்தில் இருந்தே தெரிந்து கொள்ள இயலும், சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில், வாழ்த்துப் பாடலில், காப்பியத்தில் உள்ள, பெரும் பாத்திரங்கள் தவிர்த்த சிறு பாத்திரங்களின் முடிவையும் சொல்லியிருப்பார் நுாலாசிரியர். அதன்படி, கோவலணின் தந்தை சமண மதத்தையும், கண்ணகியின் தந்தை ஆசிவகத்தையும், தழுவுகின்றார்கள். கோவலணின் தாயாரும், கண்ணகியின் தாயாரும் தங்களின் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் தாங்காமல் இறந்து போகின்றனர். மாதவியும் கண்ணகியும் பௌத்தம் தழுவுகின்றனர்.

உண்மையில் இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தமிழ் சமுகத்துக்கு இலக்கியத் தளத்தில் நின்று நிகழ்த்தியிருப்பது சமயங்களின் அறிமுகம் அல்லது வட இந்தியாவில் உள்ள சமயத்துக்கும், அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த வைதீக சமயங்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்.


காப்பியத்தில் உள்ள பிற கதாபாத்திரங்கள் தழுவுகின்ற மதத்தின் அடிப்படையில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமணம் ( அல்லது ) ஜைணம், பௌத்தம் அல்லது புத்த மதம், ஆசிவகம் இவை 3 மதங்களுமே வட இந்தியாவில் தோன்றியவை, அறிவைக் கற்பிக்கும் மதங்களாகும்.  அறிவின் அடிப்படையில் நின்று எதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் மதங்களாகும்.  இதைத்தவிர அப்போது தமிழ்நாட்டில் இருந்த மதங்கள் (இருக்கும்) மதங்கள் யாவும் நம்பிக்கையை போதிக்கும் மதங்களாகும். எதையும் நம்ப வேண்டும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏன் எதற்க்கு என்ற கேள்விகள் எழகூடாது அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகள் மதத்திற்க்கு எதிரானவை என்ற கோட்பாடுகளை உடையவை.

அறிவை கற்பிக்கும் மதத்திற்க்கும், நம்பிக்கையை போதிக்கும் மதத்திற்க்குமான ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்க்காக எழுதப்பட்ட காப்பியங்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இவற்றில் சிலப்பதிகாரம் மெண்மையாக இந்த சங்கதிகளைத் தொட்டுச் செல்கின்றது, மணிமேகலை மற்ற மதத்தினருடன் வாதம் புரிந்து நம்மை இட்டு செல்கின்றது இந்த நிலையில் இருந்துதான் அல்லது இந்த புரிதலில் இருந்துதான் நாம் இரு பெரும் காப்பியங்களையும் அனுக வேண்டிய தேவையுள்ளது.

இதன் அடிப்படையில்தான் இளங்கோ அடிகள், தன் கதை மாந்தர்களை ஆசிவகத்துக்கும், ஜைணத்துக்கும், பௌத்தத்துக்கும் பயணப்படுத்துகின்றார். இவற்றில், உயர்சாதியினராகிய கோவலனின் தந்தையும், கண்ணகியின் தந்தையும் ஜைணம், மற்றும் ஆசிவகம் தழுவுவதில் எந்த சிக்கலும் இல்லாததால் ஒரு பாடலின் வழி நின்று அந்த தகவலை சொல்லிச் செல்ல இயலுகின்றது.

ஆனால், ஆடல் பெண்டிர், கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியும், மணிமேகலையும், பௌத்தம் தழுவுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் சமூக முரண்பாடுகளை சொல்லிச் செல்ல எழுதப்பட்ட காப்பியம்தான் மணிமேகலைக் காப்பியம். ஏன் கணிகையர் குலத்தி்ல் பிறந்த மணிமேகலையும், மாதவியும் பௌத்தம் ஏற்றார்கள் என்றால், உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட பௌத்தம் மட்டுமே யாரையும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதில்லை,

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கின்ற வழிமுறையாக இருந்தது. அன்பையும் அறிவையும் போதிக்கின்ற மதமாக இருந்தது. இந்த அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் இழிவான குலமாக கருதப்பட்ட அவர்கள் இருவரையும் பௌத்தம் சம நோக்கோடு ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவர்களால் பௌத்தம் ஏற்க  முடிந்தது. பௌத்த மதத்திலும் அவர்களுக்கு இடமிருந்தது.

பௌத்தம் இரண்டு வகையான மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தும், அது முதலில் தன்னை மாற்றும், தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தின் வழியாக இந்த சமூகத்தை மாற்றும் இந்த இரு பணியையும் பௌத்தம் ஒருங்கே நிகழ்த்தும் இதுதான் பௌத்த வாழ்க்கை முறை.

மாதவி மற்றும் மணிமேகலையிடம் முதலில் தங்கள் கணிகையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மாற்றுவது, பின்னர் அவர்களையும் பொது சமூகத்தவரின் வாழ்க்கையையும் பொது சமூகத்தினரோடு  சேர்ந்து  வாழ வைப்பது ஆகிய இரண்டு பணிகளையும் புத்தரும் அவரின் போதனைகளின் வழியாக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளே மணிமேகலை காப்பியத்தில் விரித்துரைக்கின்றது.

இந்த முயற்சியில் அவர்கள் சந்தித்த பேராட்டங்களையும் போர்களங்களையும் விளங்கி கொள்வோமேயோனால் மணிமேகலையின் மனத்தையும் விளங்கிக் கொள்ள இயலும். மணிமேகலை காப்பியத்தில் கதை புரியும், ஆனால் அதனுள் வரும் பௌத்தம் குறித்த சங்கதிகளும் செய்திகளும் புரிவதில்லை எளிதில் எவருக்கும்.

அதற்க்கு காரணம் தமிழக நிலம்சார் அரசியல் சூழலில், தமிழகத்தின் மேலே இருக்கும் ஆந்திர மாநிலத்தில் நிலவிய பௌத்தம் மகாயாண பௌத்தமாக இருந்தது, கீழிருந்த இலங்கையில் இருந்த பௌத்தம் ஈனயான பௌத்தமாக இருந்திருக்கின்றது, இவை இரண்டுக்கும் இடையில் இருந்த தமிழ்நிலப்பகுதியில் இந்த மண்ணுக்கு ஏற்ற நிலையில் ஒரு பிரிவு பௌத்தம் இருந்திருக்கின்றது.

அது ஆந்திரம் மற்றும் இலங்கையில் இருந்த பௌத்தத்திற்கான ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கின்றது, இந்த இரு நிலப்பரப்பில் நிகழ்ந்த பௌத்தங்களின் பின்புலத்தில் நின்று மணிமேகலையில் வரும் சமய உரையாடல்களை கவனிக்கும் போது நமக்கு புரியும்.

எளிய நடையில் இருக்கும் பௌத்தமாக மணிமேகலை இருந்ததற்க்கு காரணம் எளியமக்களின் வாழ்வில் கலந்த பௌத்தமாக அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த பௌத்தம் இருந்தது என்பதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் நிலவிய பௌத்த சூழலின் பிரதிபலிப்பாகத்தான் பண்டிதர் அயோத்திதாசர், லட்சுமி நரசு, ஆகியோரின் பௌத்தத்தை கணிக்க வேண்டும், பௌத்தம் என்பதே பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளை பாவிக்காமல், சமத்துவத்தை நிலை நிறுத்துவதே, அதே அடிப்படையில்தான், பிறப்பின் அடிப்படையில் கணிகையான மணிமேகலையை, பெண் என்னும் நிலையில் சமத்துவத்தை நோக்கி நகரச் செய்ததே மணிமேகலை காப்பியத்தின் ஒற்றை வரி செய்தி,

இதில் மணிமேகலையின் மனம், எந்த நிலையில் இருந்தது, என்று நோக்கும் பொழுது, பெதும்பை பருவத்தில் இருக்கும் காலத்தில் இருந்தே, பிறப்பின் அடிப்படையில் தனது சமுகத்தின் மீது வெறுப்பும், தன் சமூகம் தனக்கு கற்ப்பித்த வாழ்வை எந்த நிலையிலும் வாழ கூடாது என்ற போராட்ட குணம் நிரம்பியவளாகத்தான் காட்டப்படுகின்றது, அதனால்தான் தன் தாய் இந்திர விழாவில் நாட்டியமாட சென்றதையும் கண்டிக்கின்றாள்,

பின்னாளில் உதயகுமாரன் தன் மீது கொண்ட காதலை நினைத்து. காதல் உணர்வு வருவதற்க்கு எந்த வகையில் தான் காரணமாக இருந்தோம், இருக்கின்றோம் என்பதை நினைத்து தன்மீதே கழிவிறக்கம் கொள்கின்றாள், உதயகுமாரணின் மரணத்திற்க்கு தான்தான் காரணமாக இருந்து விட்டோம் என்ற எண்ணம் மேலிட குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றாள், இவ்வாறு மணிமேகலை மனநிலையில் பழிக்கு அஞ்சும் எண்ணமும், குற்ற உணர்ச்சியும் மேலிடும் போதெல்லாம் பௌத்தம் அவளை அரணாக நின்று காக்கின்றது என்பது மணிமேலையை படிப்பவர்களுக்கு புரியும்.

சிறையில் அடைபட்டு கொடுமைகள் அடையும் பொழுது மிகுந்த மன உறுதியும் மனத்தெளிவும் கொண்டவளாக சித்தரிக்கப்படுகின்றாள், அந்நிலையில் பௌத்தம் அந்த உணர்வை அனைவருக்குள்ளும் உருவாக்கும் என்ற செய்தியும் உணர்த்தப்படுகின்றது. இன்றைய நிலையில் மணிமேகலை என்னும் பெயரும், மணிமேகலை காப்பியமும் ஒரு குறியீடாகத் திகழ்கின்றது, அது சமூக தளத்தில்
·         தலித்துகள்
·         அறவாணிகள்
·         மீணவர்கள்
·         பழங்குடிகள் –
போன்ற சமூக தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை சமநிலைக்கு கொண்டுவருவதற்கான காரணியாகவே பௌத்தம் திகழ்கின்றது. மனித குலத்தின் மகத்தான பாதியாக இருக்கின்ற ஒடுக்கப்பட்ட பெண் குலத்தின் போராட்ட குணம் கொண்ட பெண் பிரதிநிதியாகவே மணிமேகலை உணர்த்தப்படுகின்றாள்.

இறுதியாக இன்றைக்கும் ஜைணமதம் உயிர்ப்புடன் இருக்கின்றது தமிழகத்தில் ஆனால் பௌத்தம் தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் இல்லை அதற்க்கு காரணம், கொல்லாமை, மற்றும் சைவத்தை போதிக்கும் சமயமாக மட்டுமே ஜைணம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நிலைத்து நின்றது, ஆனால்,

பௌத்தம் இன்றும் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் நிகழும் பாகுபாடுகளை களைந்து சமத்துவத்தை போதிக்கும் சமயமாக உள்ளதால், இந்தியாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் சமத்துவத்தை உருவாக்கும் பெண் குலத்தின் குறியீடாகவும், மனம் படைத்தவளாகவும் மணிமேகலை திகழ்கின்றாள். 

- 13. 09.2014 சென்னை எத்திராஜ் கல்லுாரியில் நடைபெற்ற மணிமேகலையில் தொன்மம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Wednesday, March 7, 2018

புத்தரின் அஸ்தி ஊர்வலம்



ஆண்டுதோறும், புத்தகயாவில் பிப்ரவரி 1,2, மற்றும் 3 ஆகிய தினங்களில் நடக்கும் புத்த உற்சவ் நிகழ்வின் இறுதி நாளில் புத்தகயா மகா போதி சங்கத்திலிருந்து, புத்தர், சாரிபுத்தர் மற்றும் மக்கெல்லன் ஆகிய 3 புனிதர்களின் அஸ்தி மகாபோதி சங்கத்திலிருந்து 80 அடி புத்தர் சிலை வரை ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்படும்.

இந்த நிகழ்வை இந்த முறை நானும் கானும் பேறு பெற்றேன். அதை என் கை பேசியிலிருந்து கானொலியாக பதிவும் செய்து உங்களின் பார்வைக்காக தந்துள்ளேன். முதலில் பெறுவது புத்தரின் அஸ்தி.














நான் பெற்ற இன்பம் உலகத்தவர்களும் பெற வாழ்த்துகள்

Monday, October 9, 2017

டீ குடிக்கலாமா

டீ குடிக்கலாமா?

      நம்மில் பெரும்பாலானவர்கள், தமது நட்பை, அன்பை, நன்றியை, நெகிழ்சியை, மற்றவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, அல்லது உடன் இருப்பவர்களுக்கோ, தெரியப்படுத்த வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை, டீ குடிக்கலாமா?. நம்முடைய வீட்டிற்கு வருகின்றவர்களை அன்போடு உபசரிக்கும் போது அதில் கட்டாயம் குடிப்பதற்கென்று காபி அல்லது தேனீர் இருக்கும்.

      ஆண்கள் எனில் அவர்கள் தேனீர் அருந்தும் போது, ஆறாம் விரலாய் வெண்சுருட்டு அல்லது பீடி, புகைந்து காற்றில் பரவிக்கொண்டிருக்கும், அல்லது புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் ஏதேனும் சிறுகடி, அல்லது தின்பண்டத்தை(பிஸ்கெட், பொறை, வர்க்கி) சாப்பிட்டு விட்டு பின்னர் சூடாக தேனீர் அருந்துவார்கள். இவையெல்லாம் நாம் காண்கின்ற, நமக்கு நிகழ்கின்ற , அல்லது நாமே செய்கின்ற அன்றாட நிகழ்வுகள். இதையெல்லாமா கட்டுரையாக எழுதுவார்கள் என்பவர்களுக்கு, நாம் அருந்தும் ஒரு குவலை ( அது கண்ணாடி குவலை அல்லது துரு பிடிக்காத இரும்புக் குவலை, வெள்ளிக் குவலை, வெங்கலக் குவலை, பிளாஸ்டிக் குவலை) என எதுவாக இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கின்ற அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் நம்மில் பல பேருக்கு தெரியாது. அதை சொல்லத்தான் இந்த கட்டுரை.

      தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. முதல் கதை, கி.மு. 2737- ஆம் ஆண்டு ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன் சுடு நீர் அருந்திக் கொண்டிருக்கும் போது, தற்செயலாய் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து ஒரு இலை அந்த சுடு நீரில் விழுந்ததாகவும் அதனால் நீரின் நிறம் மாறியதையும் சுவை உண்டானதையும் அதை குடித்ததும் ஒரு புத்துணர்ச்சி உண்டானதாகவும் ஒரு கதை தேனீர் குறித்த தகவலை தேடும் போது இனையத்தில் கிடைத்தது.

      சீனாவில் ஒரு பௌத்த துறவி தியானம் செய்யும் பொழுது அடிக்கடி துாங்கிவிடுவதால், அவரால் ஞானம் அடைய முடியவில்லை என்று வருந்தினாராம், எனவே துாங்காமல் இருப்பதற்காக, தனது இமைகளை வெட்டி வீசி விட்டு தியானம் செய்து ஞானத்தை அடைந்தாரம், அவர் இமைகளை வீசிய இடத்தில் சில நாட்கள் கழித்து ஒரு செடி முளைத்தது அந்த செடிதான் தேநீர் செடி, அதன் இலையிலிருந்து உண்டான தேநீர் அருந்துவோர்க்கு துாக்கம் போய் உற்சாகம் வருகின்றது என ஒரு கதையை நான் சிறுவயதில் இருந்த போது படித்தது.
     
ஆக இரண்டு கதைகளிலும் சீன வருவதால் தேனீர் சீனாவில் தோன்றி சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாகஇங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில்இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியதுஇன்று உலகில் 52 நாடுகளில் தேனீர் பயிரிடப்படுகின்றது. ,

      பொதுவாக தேனீர் இலைகளை வைத்து வகைப்படுத்தபடுகின்றது, உலகில் 3 வகையான தேனீர் பயிரிடப்படுகின்றது,

1.    அசாம் வகை தேனீர், ( இலைகள் பெரிய அளவில் இருக்கும்)
2.    சீனா வகை தேனீர் ( இலை சிறியதாக இருக்கும்.
3.    கம்போட் வகை ( இலைகள் நடுத்தர அளவில் இருக்கும். இந்த 3 வகையான தேனீர் இலைகளில் இருந்து ,
                         i.   கருந்தேநீர்,
                         ii.   ஊலாங்கு தேநீர்,
                        iii.   பசுந்தேநீர்,
                        iv.   வெண்தேநீர்,
                         v.   புவார் தேநீர்
என ஐந்து வகையான தேநீர்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று உலகில் மக்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேனீர் மட்டும்தான். ஏழைகளுக்கு என ஒரு வகையான தேனீரும், நடுத்தர மக்களுக்கு, பணக்காரர்களுக்கு, மற்றும் மிக பெரும் பணக்காரர்களுக்கு என ஒவ்வொரு வகையான தேனீர் என தரம் பிரிக்கப்பட்டு தனது அந்தஸ்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நமக்கு பெரும்பாலும் தேயிலை என்று மட்டுமே தெரியும், உண்மையில் தேயிலை ஒரு மர வகை பயிராகும், தேயிலையின் கொழுந்து மட்டுமே நமக்கு பயன்படுகின்ற பொருளாக இருப்பதால், கொழுந்து பரிப்பதற்காகவும், நம்முடைய வசதிக்காவும், அதிக கொழுந்துகளை பறிப்பதற்காக தேனீர் செடி வகையாக பராமரித்து வறப்படுகின்றது.


      1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சுவை, மனம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றால்  உலகப் புகழ்பெற்ற தேயிலைகள் ஆகும்.

      இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டிலிருந்து தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் டிசம்பர் 15ஆம் தேதியை உலக தேயிலை தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

      இவையாவும் தேயிலை குறித்தான அடிப்படை செய்திகள். ஆனால் இன்று வரையிலும் சரித்திரப் புகழ்பெற்ற சம்பவமாய், சந்தைப்படுத்துதலில் பேசப்படுகின்ற நிகழ்வு தேனிரை வணிகமயப்படுத்தியதுதான். ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒரு பிரிவினரை இலக்காக வைத்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அளவுக்கான தேனீர் துாளை, இலவசமாக கொடுத்திருக்கின்றனர் தேனீர் விற்பனையாளர்கள். அவ்வாறு இலவசமாக பெற்றவர்கள் தங்களுக்கும் தங்களின் நண்பர்கள், சுற்றத்தார்கள், உறவினர்கள் என அனைவருக்குமே அந்த தேனீர் துாள் இருக்கும் வரை தாங்கள் தேனீர் தயாரித்து,  தாங்களும் குடித்து மற்றவர்களையும் குடிக்க வைத்ததன் விளைவாக, அவர்கள் தேனீர் சுவைக்கு தங்களையும் தங்களது மனதையும் பழக்கப்படுத்திக் கொண்ட காரணத்தால் ஒரு மாதத்திற்கு பிறகு, அவர்கள் டீ துாளை விலை கொடுத்து வாங்கி குடிக்கப் பழக்கப்படுத்தி கொண்டனர் தேனீர் துாள் விற்பனையாளர்கள். ஒரிரு மாதங்களுக்குப் பிறகு விற்பனையாளர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கெல்லாம் வாங்க ஆரம்பித்தனர். சந்தையிலும் தேனீர் துாள் விற்பனை உச்சத்தை எட்டியது.
 .
      தேனீர் துாள் விற்பனையாளர்கள், முதலில் தேனீர் துாளை அரசர்கள், சிற்றரசர்களுக்கும், அதன்பின் ஜமின்தார்கள், மற்றும் பிரபுகளுக்கும், இலவசமாக கொடுத்து அவர்களின் வழியாக தங்களின் வணிகத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொண்டனர். இது நடந்தது 1940க்கு முன்பு. அதன் பின் வெகு மக்களை எளிதாக சென்று சேரும் விதமாக அரசு அலுவர்களை, ஆசிரியர்களை இலக்காக கொண்டு அவர்களுக்கும் இலவசமாகவே தேனீர் கொடுத்து பழக்கினர். இது நடந்தது 1970 களில். அதற்கு பின்னர் வீதிதோறும் தேனீர் கடைகள் பெருகி, தேனீர் வணிகம் எட்டமுடியாத உயரத்துக்கு சென்று விட்டது. என்பது வணிக வரலாறு. இன்று உலகில் அதிக தேனீர் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது, அதேபோல, தேனீர் அருந்துவதிலும் இந்தியா்கள் முதலிடம் வகிக்கின்றனர். இவையெல்லாம்  தேனீர் வணிக சந்தையில் தனது வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்ட அல்லது வலிமை படுத்திக் கொள்வதற்காக, எடுக்கப்பட்ட முயற்சிகள்.

      சமிபத்தில் சந்தைக்கு வந்து பசுந்தேனீர், எலுமிச்சைத் தேனீர் முதலியன எல்லாம், சர்க்கரை நோயாளிகள் பெருகிப் போனதால், சரிவுக்கு உள்ளான தேனீர் சந்தையை உயர்த்துவதற்காக செய்த வணிக யுக்திதான். நமது நாட்டில் கழிவுத்துாள், தேனீரை நமக்கு தந்து உயர்தரமான வெண்மை தேனீர், பசுந்தேனீர், போன்ற தரமான, உயர்தரமான, தேனீர் துளையெல்லாம் மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தவர்கள், தங்களின் வணிக சந்தை சரிவுக்கு உள்ளானதால், பசுமை தேனீரை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

      இவ்வாறு இலவசமாக கொடுத்து பின்பு வணிகப் பொருளாக்கியதில் நடந்த சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் சிலவற்றை  நினைவுபடுத்திக் கொள்வோம். முதலாவதாக, நமது வாழ்வும், உணவு முறையும் நம் சுற்றுப்புறத்தையும், சூழலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. தேனீர் அறிமுகமாவதற்கு முன்பு, வெப்ப மண்டல பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள், அதன் வெயிலுக்கு ஏற்றவகையில், காலையில் எழுந்தது முதல், இரவு வரையிலும், எப்பொழுதெல்லாம் மிகுதியான தாகம் வருகின்றதோ, அப்பொழுதும், உணவுப் பழக்கமாகவும் பானமாகவும்,  நீராகாரம், நீர் மோர், தயிர் மோர், இளநீர், நன்னாரி சாறு, போன்ற தாகம் தனிக்கும் பானங்களையும், அருந்தினர். இவை நமது சூழலுக்கு ஏற்ற செலவில்லாத பானங்களாகும். மாறாக,
      சமூகத்தில் பழைய உணவு முறையில் இருந்த நீராகாரம், நீர்மோர், தயிர் மோர், இளநீர், நன்னாரி, போன்றவைகள் ஏழ்மையின் அடையாளமாகவும், பழைமையின் அடையாளமாகவும், தேனீர் அருந்துவது என்பது வளமையின் அடையாளமாகவும் புதுமையின் அடையாளமாகவும் மாறிப்போனது. இதனால் தேனீரும், காபியும் நமது கலாச்சாரத்தில் இரண்டற கலந்து பிரிக்க இயலாத நிலைக்கு சென்றுவிட்டன.
      `முதலில் தேனீர் எந்த வகையான பானம் என்பதை பார்ப்போம், அடிப்படையில் தேனீர் குடித்தால் புத்துனர்ச்சி வருகின்றது, இதய நோய்கள் வருவதில்லை என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், அடிப்படையில் தேனீர் பசியின்மையை உருவாக்குகின்ற ஒரு பானம், இதனை அதிகமாக அருந்தும் போது பசியின்மையை உருவாக்கும், மேலும் நாம் 3 வேலை நேரா நேரத்திற்க்கு சாப்பிட்டு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டதால், பசியில்லை என்றாலும் சாப்பிட பழகியதன் விளைவாக இன்று சர்க்கரை நோய் 80 சதவிகித மக்களுக்கு உள்ளதாக ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. இந்த அளவு சர்க்கரை நோய் உயர்வதற்க்கு அடிப்படை காரணம் தேனீர் என்பதை ஊடகங்களும், நாமும் வசதியாக மறந்து விட்டோம்.
·         அடுத்ததாக தேனீர் மற்றும் காபி நம் வாழ்வில் பழக்கமான பின், அதனுடன் இலவச இனைப்பாக வெள்ளை சர்க்கரை அல்லது சீமை சர்க்கரை, ஆகியவையும் நம்முடன் வந்து இணைந்து கொண்டன. அதற்க்கு முன்பு வரை நாம் இனிப்புக்காக, வெள்ளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தோம், வெல்லம் என்பது மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகின்ற ஒரு பொருள். வெள்ளம் சாப்பிட்டால் நமது உடலில் வெளியேறாமல் தேங்கி நிற்கின்ற கழிவுகளை வெளியில் அனுப்பி நமது உடலை சுத்தம் செய்யும் பணியை வெல்லம் செய்கின்றன. ஆனால் சீமை சர்க்கரை, நமது உடலை நஞ்சாக்கும் பணியை செய்கின்றன.
·         தேனீருடன் சாப்பிடுவதற்கென, பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு பொருளான மைதா மற்றும் சீனி கொண்டு தயாரிக்கும் நம் உடல் நலனுக்கு ஒவ்வாத, பிஸ்கெட்டும் நம் வாழ்வில் வந்து இணைந்து கொண்டன.
·         தேனீர் குடித்ததால் பசியின்மை ஏற்பட்டு, அதனால் கனையத்தில் செயல் தன்மை குறைந்து, இறுதியில் நீரிழிவு என்று சொல்லப்படுகின்ற சர்க்கரை நோய்க்கு நம்மை கொண்டு சென்று, நம்மையெல்லாம் நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதையொட்டி, சர்க்கரை நோய்க்கான மருத்துவம், மற்றும் மருந்துப் பொருட்கள், என ஒரு பிராமாண்ட வலை பின்னல் வழியாக நமது பணத்தை பிடுங்கும் பணியின் துவக்கப் புள்ளியாக தேனீரும் காபியும் இருக்கின்றன.
·         பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளை நமக்கு அறிமுகப்படுத்தும் பொழுது அதை ஒட்டி ஒரு நுகர்வு நோக்கில் பெரிய வலை பின்னப்படுகின்றது என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை டீ, காபியை இலவசமாக கொடுத்து சந்தையை தக்க வைத்துக் கொண்டபின் அதன் வழியாக நமது பணத்தை எந்த வகையில் எல்லாம் பிடுங்க முடியும் என திட்டமிட்டு நம்மிடமிருந்து நமது பணத்தை நமக்கே தெரியாமல் சுரண்டும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன பன்னாட்டு நிறுவனங்களின் வசமிருக்கின்ற தேனீர் மற்றும் காபி உற்பத்தி மற்றும் விற்பனை சார் நிறுவனங்கள்.
இவையெல்லாம் ஏதோ தேனீருக்கு மட்டுமே நடப்பதாகவும், காபி உடலுக்கு மிகவும் நல்லதென்றும் நினைக்க வேண்டாம், உண்மையில் காபியை சுற்றிலும் ஒரு வலை பின்னப்பட்டிருக்கின்றது. முதலில் காபியிலும் தேனீரில் உள்ளதைப் போலவே பல வகைகள் இருக்கின்றன. என்பதையும், காபி பிரேசில் நாட்டில் உள்ள கால்டீ என்னும் ஆடு வளர்ப்பவனால் கண்டறியப்பட்டது என்பதையும் நினைவில் கொள்வோம், காபி செடியை மேய்ந்து வந்த ஆடுகள் உற்சாகத்தோடு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பதையும், இரவில் உறங்காமல் இருப்பதையும் கண்டறிந்து அதன் தழைகளை கண்டு பிடித்து, அதன் சாறை மனிதர்களுக்கும் குடிக்க பழக்கப்படுத்தியதாக வரலாறு சொல்கின்றது.
      காபி குடிப்பதால், செரிமானம் மிகும், அதே நேரத்தில் உடலின் சம நிலை பாதிக்கப்பட்டு உறக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டு அது மன நிலை பாதிப்பை உருவாக்குகின்றது, இன்று இந்தியாவில் 80 சதவிகிதம் மக்கள் துாக்கமின்மை, மற்றும் மன அமைதியின்மை நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரம் சொல்கின்றது. அதற்காக காரணத்தில் காபியின் பங்கும் இருக்கின்றது என்பது மறுக்க இயலாத உண்மை. உண்மையில் தேனீர் என்பது ஏழைகள் மற்றும் உடல் உழைப்பாளர்களின் பானமாகவும், காபி என்பது உயர்சாதியினர் மற்றும் பணக்காரர்களின் பானமாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது இந்தியாவில்.
      ஒரு பொருளை நாம் ஏற்றுமதி செய்யும் பொழுது, அல்லது விற்பனைக்கு வரும் பொழுது, அந்த பொருள் உற்பத்தி செய்வதற்க்கு எடுத்துக் கொண்ட தண்ணீரையும் சேர்த்து நாம் விற்பனை செய்கின்றோம் என்னும் கருத்தாக்கமே புலப்படாத் தண்ணீர் என அழைக்கப்படுகின்றது, அதன்படி இந்தியாவில் ஒரு கப் காபி தயாரிக்க, அதாவது, 120 மில்லி கிராம் காபியை உற்பத்தி செய்ய 140 லிட்டர் தண்ணீரை செலவழிக்கின்றோம், அதே போல் ஒரு கப் டீயை (250மில்லி கிராம்) உற்பத்தி செய்ய,  34 லிட்டர் நீரை செலவழிக்கின்றோம், அதாவது டீ யை விட எட்டு மடங்கு அதிகமான நீரை செலவழித்து காபி உற்பத்தி செய்யப்படுகின்றது.
      எனில் டீ உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் சொல்கின்றது, ஆண்டொன்றுக்கு சராசரியாக, டீ துாளை ஏற்றுமதி செய்வதின் வழியாக தண்ணீரையும் மேலை நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கின்றது. உதாரணமாக, 2014 ஆண்டின் இந்தியாவின் தேயிலை மொத்த உற்பத்தி, 12,07,310 மெட்ரிக் டன் ஆகும் அதாவது 120,73,10,000 கிலோ ஆகும். அதாவது 1000 மில்லி லிட்டர் என்பது ஒரு லிட்டர் கொண்டால், நாம் அயல்நாடுகளுக்கு தேயிலையின் வாயிலாக எவ்வளவு நீரை ஏற்றுமதி செய்கின்றோம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 2014 ஆண்டின் இந்தியாவின் மொத்த தேயிலை ஏற்றுமதி 2,07,440 மெட்ரிக் டன் என்பதையும், அதன் வழியாக இந்தியா மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும் தண்ணீர் எவ்வளவு என்பதையும் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி உற்பத்தி 3,27,000 மெட்ரிக் டன். ஏற்றுமதி செய்த அளவு 1,72,858 அளவுள்ள மெட்ரிக் டன் ஆகும், இதன் மூலம், இந்தியாவில் இருந்து காபி, மற்றும் தேனீரை துளை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக  கணகிட முடியாத அளவுக்கான நீரையும் சேர்த்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றோம் என்பது யதார்த்தமான உண்மையாக உள்ளது.
      அதே நேரத்தில் இந்தியாவில் வட மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளதென்றும், தண்ணீர் கொண்டு வருவதற்காகவே, தண்ணீர் மனைவிகள் என ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை உள்ளதையும், தண்ணீர் பிடிக்க செல்லும் பத்து வயது சிறுமிகள் கூட கிணற்றில் தவறி விழுவதையும் பத்திரிகை செய்தியாவே படித்து கடந்து செல்கின்றோம், நாம், அத்தகைய தண்ணீர் பஞ்சத்திற்க்கு பின்னால் நம் நாட்டின் தண்ணீர் இவ்வாறு மேலை நாடுகளுக்கு பொருளாக ஏற்றுமதியாகின்றது என்றும் அதுவும் நம்முடைய தண்ணீர் பஞ்சத்திற்க்கு ஒரு காரணம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவும், மற்றவர்களுக்கு சொல்லவும் மறந்து போகின்றோம்.
      இந்தியப் பெண்கள் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் தண்ணீருக்காவே செலவழிக்கின்றார்கள் என்கின்ற செய்திக்கு பின்னால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பணக்காரர்களின் பணப்பயிர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்றும், அது மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது என்ற உண்மையையும் இங்கு சொல்வதற்க்கு யாருமில்லை.
      இறுதியாக, 3 லட்சம் ஆண்டுகளாக இந்தியாவில் பெய்து கொண்டிருந்த பருவ மழையை நாம் 150 ஆண்டுகளாக தவற விட்டுக் கொண்டிருக்கின்றோம், தேயிலை மற்றும் காப்பி உற்பத்திக்காக மலைகளில் மீது இருந்த உயரமான மரங்களையெல்லாம் வெட்டி தேனீர் மற்றும் காபி பயிரிட ஆரம்பித்ததால். உண்மையில் உயரமான மலைகளுக்கு மேல் செல்லும் மேகத்திலிருந்து ஈரப்பதத்தை ஈர்க்க மரங்கள் தேவை அதுதான் மழையாக பூமிக்கு வருகின்றது, அவ்வாறு மேகத்திலிருந்து ஈரப்பத்ததை ஈரக்க மரங்கள் மலைகளின் மேல் அவை காற்றோடிகளாக வானில் மிதந்து கொண்டே செல்கின்றன. அதனால் இந்தியாவிற்க்கு பருவ மழை என்பது இல்லாமல் போய் புயல்களால் மட்டுமே மழை பெய்கின்றது, அல்லது காற்றழுத்த தாழ்வு நிலையினால் மட்டுமே மழை பெறுகின்றோம்,
இமயமலை தொடங்கி நீலகிரி மலை வரைக்கும் அனைத்து மலைவாழிடங்களிலும், தேனீரும் , காப்பியும் போட்டி போட்டிக் கொண்டு உற்பத்தியாகின்றது, இதன் விளைவு இங்கெல்லாம் மலைகளின் மீது உயரமான மரங்கள்  இல்லாததால் பருவ மழை பொய்த்து போகின்றது. உலகின் அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சியிலும் குடி நீர் பஞ்சம் உள்ளது என்றும், அங்கும் மழை பொழிவு குறைந்து கொண்டு வருகின்றது என்பதையும் படிக்கும் பொழுது அதற்கான காரணங்கள் நமக்கு தெரிவதில்லை, இமய மலையில் உள்ள பனி பாறைகள் அதிக அளவில் கரைந்து கொண்டு வருகின்றன, இன்னும் 60 ஆண்டுகளில் அவை முற்றிலும் கரைந்து விடும் என ஒரு தகவலை படிக்கும் பொழுது நாம் சூரியனின் மேல் பழியை போடுகின்றோம், வெய்யில் அடிப்பதால் பனிப்பாறைகள் கரைந்து நீராக மாறுகின்றது என நினைத்துக் கொள்கின்றோம், உண்மையில் அங்கெல்லாம் தேயிலை மற்றும் காபிக்காக மலைகளில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டதால், பருவ மழை தவறியதால் பனி பாறைகள் உருகுகின்றன என்பதை நமக்கு சொல்ல எந்த ஊடகங்களும் தயாராக இல்லை.
உலகின் மொத்த தேனீர் வணிகத்தில் 31 சதவிகிதம் இந்தியாவின் வசம்  உள்ளது. இந்திய தேனீர் வணிகம் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி கொள்முதலை கொண்டிருக்கின்றது, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தேயிலை உற்பத்திக்கான நிலப்பரப்பு 250 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது எனில் அந்த அளவுக்கு மலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்களாக ஆக்கப்பட்டதால் பருவ மழையை இழந்து தவிக்கின்றோம் என்பதுதானே நிதர்சனமான உண்மை. இந்தியாவில் உள்ள இமயமலைச் சாரலும், தென்னிந்தியாவில் உள்ள மேற்கு மலைத் தொடரும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ மழை பொழிவுக்கு முக்கிய காரணிகளாககும், இவை இரண்டு மலைத் தொடர்களும், தேனீர் மற்றும் காபி உற்பத்தியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தேயிலைக்காடு மற்றும் காபி காடுகளாக உருமாற்றப்பட்டிருக்கின்றது.
      இவ்வாறு மலைகளை காபி காடுகளாகவும், தேயிலை காடுகளாகவும் மாற்றுவதற்காகவே, அங்குள்ள மலை வாழ் மக்களை வெளியேற்றும் பணியை சுற்று சூழல் அமைச்சகம் செய்து வருகின்றது, காடு வளர்ப்புக்கு தடையாக இருப்பதாக அங்குள்ள மலை வாழ் மக்களை முன்னிருத்தி, வெளியேற்ற முனைப்பு காட்டுகின்றது. அவர்கள்தான் மரங்களை அழிக்கின்றார்கள் அதனால்தான் இந்தியாவில் சுற்றுசூழல் பாதிக்கின்றது என கதை கட்டுகின்றது. உண்மையில் மலை வாழ் மக்கள், மரங்களை வெட்டுவதில்லை, காடுகளை அழிப்பதில்லை.
      அதே போல் ஒரு நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையில் சுற்றுசூழல் சார்ந்த விஷயங்களை கண்கிடுவதில்லை என்று சொல்கின்றார். எழுத்தாளர் பாமயன், அது முற்றிலும் உண்மை, ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடும் முறையில் இங்கு பணம் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது, அதை தவிர, நாட்டின் இயற்கை வளம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு தேவையான பணிகளை செய்வது போன்றவற்றிக்கு அளிப்பதில்லை. அந்த வகையிலும் சுற்று சூழல் காப்பகம் போன்ற துறைகளும் மலைகளின் மீது மரங்களின் அவசியத்தை உணராமல் தேனீர் வளர்ப்புக்கு தாரை வார்க்கின்றன.
      இந்தியா போன்ற விவசாயத்தை நம்பி இருக்கின்ற  நாடுகளில் மழை மட்டுமே முக்கிய வாழ்வாதாரம் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருந்தும் மழை பொழிவிற்க்கு முக்கிய காரணமாக இருக்கின்ற மரங்கள், வனங்கள், மலைகள், காடுகள் போன்றவற்றை காப்பாற்றாமல் அழித்துக் கொண்டிருப்பது, ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு சமம் என்பதை நம்மில் யாரும் உணர்ந்தவர்களாக இல்லை. நாம் உணர மறந்த உண்மையை நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்களும் உணர வில்லை என்பதும் மறுக்க இயலாத உண்மை.
      இந்த சூழலில் மழை பொழிவு குறைவதையும், பருவ நிலை மாற்றத்தையும், இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் உயர்வதையும், தேனீர் மற்றும் காப்பி உற்பத்தியோடும், இனைத்து பார்க்க வேண்டியதை காலத்தின் கட்டாயமாக்க வேண்டும்.

      மழை பொய்த்து போகாமல் பருவ மழை பொழிவிற்காக, மலைகளின் மீது மரங்களை வளர்க்க வேண்டும், தேனீர் மற்றும் காபி ஆகிய பயிர்கள் உவர் மண், கரடு மண், சரளை மண் போன்ற மண்ணிலும் பயிரிடக்கூடியவை என்பதால், சமவெளியில் அவைகளை பயிரிடுவதற்கான தொழில் நுட்பத்தை வேளாண் துறையினர் கண்டறிந்து பரவலாக்க வேண்டும், மலைகளின் மீது காடுகளையும், மரங்களையும் பயிரிட்டு மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பதை உணர வேண்டும்.
      நிறைவாக இந்த மண்ணிலிருந்து ஏற்றுமதியாகும் ஒவ்வொரு கிராம் தேனீர் மற்றும் காபி துாளுக்கு பின்னால், இந்த மண்ணிலிருந்து மறைமுகமா தண்ணீரும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது, என்ற உண்மை ஆட்சியாளர்களுக்கு உணர்த்ப்பட வேண்டும். மேலும் நாம் அருந்துகின்ற ஒவ்வொரு காபி மற்றும் தேனீருக்கு பின்னால் இந்த மண்ணை வறட்சிக்குள்ளாக்கும் திட்டமும், மழை பொழிவிக்கும் மரங்களை வெட்டி தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்படுவதால், மக்களின் வறுமை விகிதம் அதிகமாகின்றது என்ற எண்ணமும் உருவாக வேண்டும்.


            ஒரு செடியிலிருந்து பூவை பறிக்கும் நம்முடைய செயல் கூட இந்த உலகின் சுற்றுசூழல் மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்னும் போது, உலகின் உயிர் கோள மண்டலங்களின் பாதுகாப்பு மையங்களாக விளங்கும், இமயமலைத் தொடர், மற்றும் மேற்கு தொடர்சி மலை ஆகியவைகளில் உள்ள மரங்களை வெட்டி உருவாக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் உலகின் பல்லுயிர் சூழல் மண்டலம் பாதிக்கப்படுவதால் அதில் மனிதனும் பாதிக்கப்டுகின்றான், என்ற உண்மையை உணர்ந்தவர்கள், உணராதவர்களுக்கு உணர்த்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். மலைகள் மழை மேகங்களால் சூழப்பட்டு மழை மண்டலங்களாக உருமாற்றம் அடைய வேண்டும்.      

எனது சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும் நுாலில் உள்ள கட்டுரை. மீள் பதிவு

இதையும் படியுங்கள்