Sunday, August 13, 2023

பல்கு நதிக்கரையில்

பல்கு நதிக்கரையில்

அரச மரத்தின் கீழ் இருந்த

மரங்களின் தேவனுக்கு

பால் சோறு படைக்கிறாள் 

பழங்குடி இளவரசி சுஜாதா


துறவி சாப்பிடும் போது

சிந்திய சோற்றுப் பருக்களை

எங்கிருந்தோ வந்த 

காகம் ஒன்று தன்

அலகால் கொத்தி தின்றது


சுஜாதா கையை தூக்கி

காகத்தை விரட்ட எத்தனிக்க

பார்வையால் தடுக்கிறார் சித்தார்த்தர்


கௌதமர் அமர்ந்திருந்த இடத்தை

சுத்தம் செய்த மகிழ்ச்சியை 

கா கா என கத்தி சொன்னது காகம் 

தூக்கம் கலைந்து நானும்

காகா என கத்திக் கொண்டிருந்தேன்

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்