Friday, August 11, 2023

சரயு நதிக்கரையில்


வைகாசி மாதத்தின்

முழு நிலா இரவில்

சரயு நதிக்கரையில்

நானும் ராமனும்

அருகருகே நின்றிருந்தோம்... 


பெண்கள் வரிசையாக வந்து 

நதியில் மூழ்கி மூழ்கி நீராடினர்

நான் பெண்கள் கூட்டத்தில்

சீதையைத் தேடினேன்

ராமனின் கண்களோ 

சூர்ப்பனகையைத் தேடின


சீதையின் பாதம் பணிய

குனிந்த என்னை தடுத்த சீதை

கை குலுக்கி நலம் விசாரித்தார்


ராமனோ சூர்பனகையை 

வானரக் கூட்டத்தோடு

வன்புணர்ந்து கொண்டிருந்தார்


தொலைக்காட்சியில்

செய்தி சேனல்கள்

அலறலில் திடுக்கிட்டு எழுந்தேன்


மணிப்பூர் பற்றி எரிகிறது 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்