Monday, February 15, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 3

பஞ்ச சீலங்கள் - பாளி

ஐந்தொழுக்கங்கள்  

பானாதி பாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

அதின்னதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

காமேசு மிச்சா சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

மூசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

சுரா மேரய மஜ்ஜ பமாதட்டான வேரமணி சிக்காபதங் சமாதியாமி

                                                       சாது   சாது   சாது 



பஞ்ச சீலம் - தமிழ்  பொருள்

வழிபாட்டின் போது சொல்லவேண்டியது

  1. நான் உயிர்வதை செய்வதிலிருந்து விலகியிருப்பேன்  என்ற போதனையை ஏற்றுக்கொள்கின்றேன். 
  2. நான் எனக்கு கொடுக்கப்படாததை எடுப்பதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
  3. நான் பிழையுறு காமத்தினை பின்பற்றுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன். 
  4. நான் பொய் பேசுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
  5. நான் போதையை உண்டாக்ககூடிய பொருளை எடுத்துக் கொள்வதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.

நேர்மறை சீலம் - தியானத்திற்கு முன் சொல்ல வேண்டியது

  1.  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
  2. மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
  3. சாந்தம்,எளிமை மற்றும் மனநிறைவுடன் வாழ்ந்து என் உடலை துாய்மை படுத்துகிறேன். 
  4. உண்மை நிறைந்த உரையாடல் மூலம் என் நாவினை துாய்மை படுத்துகிறேன்.
  5. தெளிவு, தீர்க்கம் மற்றும் பிரகாசமான மத்துடன் இருந்து என் மனதை துாய்மை படுத்துகிறேன். 
சிறப்புகள் 

  • புத்தநெறியைப் பின்பற்றும் குடும்பத்தினர்கள் மன அமைதியோடும் மகிழ்வோழும் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய ஒழுக்க கோட்பாடுகள்
  • தனிநபர் ஒருவர் மன அமைதியோடு வாழ்வாரெனில் இந்த உலகம் அமைதியோடு வாழும் என்ற நெறிமுறையின் படி பகவான் புத்தரால் போதிக்கப்பட்ட ஒழுக்க நெறியாகும்.
  • இந்த 5 ஒழுக்க கோட்பாட்டின் படி வாழும் ஒருவர் உயர் ஞானம் பெற்றவராக கருதப்படுவார்.
பயன்கள்

  • மன அமைதியோடு வாழ வழி வகுக்கும்
  • எல்லா உயிர்களையும் நேசிக்கும் எண்ணம் மேலோங்கும்
  • இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து வாழும் எண்ணம் பெருகும்
  • உலகம் அமைதிக்கான அருமருந்து 5 ஒழுக்க கோட்பாடு

இதன் லிங்க் : https://www.youtube.com/watch?v=LMIQVuVf8LU
 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்