இப்பொழுது அனைத்து அரசியல் கட்சியும் தேர்தல் காய்ச்சல் பிடித்து தனக்கான அணி, தனக்கான வாக்கு வங்கியை தக்க வைக்கும் அல்லது அதிகரிக்கும் யுக்தியை பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சியாக எதுவும் இல்லை.
எல்லா அரசியல் கட்சிகளுமே உள்ளுர் முதலாளியில் இருந்து பண்ணாட்டு முதலாளிக்கு ஆதரவாகத்தான் ஆட்சியை நடத்துகின்றனரே ஒழிய தன் நாட்டு மக்களுக்கு ஆதராவாக ஆட்சியை நடத்தவில்லை, வறுமையை ஒழிக்க எந்த செயல்திட்டமும் இல்லை,
கனினிமயம், காவிமயம் இரண்டும்தான் இன்றைக்கு முக்கிய முழக்கமாக இருக்கின்றது. இரண்டுமே ஏழைகளுக்கு எதிரானவை. இவை பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை, நாடே இன்று கொள்ளை போய்கொன்டிருக்கின்றது, நாட்டில் உள்ள வளங்கள் யாவும் வெள்ளையர் ஆட்சியில் இருந்ததை விட அதிக அளவில் உலகமயத்தால் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாமல் ஆட்சி அதிகாரம் பற்றியே அனைத்து அரசியல் கட்சிகளும் கனவு கான்கின்றன.
தண்ணீர் வளம் குடிநீர் வணிகமாகிக்கொண்டிருக்கின்றது அதற்கான மாற்று திட்டம் இல்லை, இயற்கை வளம் அனைத்தும் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன, அதற்கான எதிர்புகள் கவனம் ஈர்க்கும் வகையில் இல்லை, மன்னையும் மக்களையும் அழிக்கும்
- கூடங்குளம் அனுமின் திட்டம்
- கல்பாக்கம் அனுமின் திட்டம்
- நியூட்ரினோ ஆய்வு திட்டம்
- காவிரி படுகை மீத்தேன் திட்டம்
- சேது கால்வாய் திட்டம்
- கெய்ல் குழாய் திட்டம் என எத்தனையோ வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்தாலும் இவற்றிற்கான பலன் மக்களுக்கானதா, என்றால் இவற்றிற்கு பின் இருக்கும் பெரு நிறுவனங்களின் சுரண்டல் என்பது அணைவருக்கும் தெரியும்.
இன்றும் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும், கவனிக்கப்படாமலும் இருக்கின்றன.
- விவசாயம் அழிந்து கொண்டிருப்பது
- விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு குத்தகை தருவத
- பட்டியலின சாதி மக்களுக்கான சலுகைகளும், வேலை வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பது,
- கவுரவ கொலைகள் பெருகிக் கொண்டிருப்பது,
- வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பது,
- ஏழைகள் ஏழைகளாகிக்கொண்டிருப்பது,
- மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருப்பது
- குடிநீர் தட்டுப்பாடு
- வன வளம் குறைந்து கொண்டிருப்பது
- போன்ற முக்கிய பிரச்சனைகளைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளும் இதுவரைக்கும் தமது நிலைப்பாடு என்ன என்று கூறவில்லை.
மாறாக தமக்கு அதிகாரத்தில் இருக்கும் ஆசையை மட்டும் பல்வேறு வழிகளில் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. மக்கள் மட்டும் இவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் ஆனால் இவர்களின் பிரச்சனைகளை நாங்கள் தலையிடவேண்டும் என்னும் போக்கு அரசியல் கட்சிகளிடம் அதிகரித்து வருவது நல்லதில்லை.
No comments:
Post a Comment