Sunday, October 11, 2015

தலித்துகளின் வாக்கு மட்டும் வேண்டும் அவர்கள் வாழ வேண்டாமா?


நாட்டில் இன்றுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு வகையில் ஒருமித்து செயல்படுகின்றன. அது தலித்துகளின் வாழ்க்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. அது தலித்து மக்கள் இந்த நாட்டில் எந்த வகையிலும் தலைநிமிர்ந்து வாழகூடாது ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். என்னும் எண்ணம் மட்டும் இருக்கின்றது அனைத்து அரசியல் கட்சிகளிடமும், இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி.

அன்மைய நிகழ்வுகள் இதை நிருபிக்கின்றன. இளவரசன் மரணம், அதற்க்கு முன் நிகழ்ந்த சாதிய வெறியாட்டத்தில் 3 கிராமங்கள் அழிந்தது, கோகுல்ராஜ் மரணம் அதற்கு காரணமானவர்களின் அரசியல் பின்புலம் மற்றும் கொங்கு மண்டலத்திலுள்ள வெள்ளால கவுண்டர்களின் வாக்கு வங்கியை காப்பாற்ற அரசு கடைபிடிக்கும் மெத்தனம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது தலித்துகள் இன்னும் தங்களின் வாக்கை அரசியலாக்கும் யுக்தி தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.

இல்லையெனில் மற்ற சாதியினரின் வாக்கு வங்கியை காப்பாற்ற துடிக்கும் அரசியல் கட்சிகள் தலித்துகளின் வாக்கு வங்கி விஷயத்தில் மட்டும் அக்கறை காட்ட மறுப்பதற்க்கு காரணம், அனைத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் தலித்துகள் எந்த நிலையிலும் தங்களின் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.


ஆக தலித்துகள் தங்களை பிற அரசியல் கட்சிகளில் இனைத்துக் கொண்டிருக்கும் வரை தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்