Thursday, August 8, 2013

தலித் கூட்டுறவு விற்பனை மையம்.

இன்றுள்ள தாராள மயம், தனியார் மயம், யாரையும் பணக்காரர்களாக விடாது. அவ்வாறு யாராவது பணக்கார்களாக தம்மை காட்டிக் கொண்டால், அது நேர்மையான வழியில் வந்த பணமாக இருக்க இயலாது. அவ்வாறு திடிர் பணக்காரர்களின் பணத்துக்குப் பின்னால் நிச்சயம், ஒரு குற்றம் அல்லது பல குற்றங்கள் மறைந்திருக்கும். அந்த பணத்தில் இரத்தக்கறை படிந்திருக்கும். இது யாரே ஒரு அறிஞர் பணம் குறித்து சொல்லும் போது சொன்னது.

அவரின் கூற்று அப்படியே தலித் சமுகத்துக்கும் பொருங்தும், தலித் சமுகத்தில் ஆணுக்கு நிகராக, பெண்ணும், பெண்ணுக்கு நிகராக, ஆனும் சேர்ந்தே உழைக்கின்றனர். ஆயினும் பொருளாதார நிலையில் அவர்களால் முன்னேற்றம் காண இயலவில்லை.

இன்று கணவன் மணைவி இருவருமே சேர்ந்து உழைத்தாலும், சேமிக்க முடிவதில்லை, மிச்சம் பிடிக்க முடியாமல், பற்றாக்குறைக்கு ஆளாகி, கடன் வாங்க வேண்டிய தேவையில் உள்ளோம். இந்த நிலை பொருளாதாரத்தில் மிக பின்தங்கி உள்ள தலித் மக்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்று இம்மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, பணம் ஒரு வழியில் வந்தால் பல வழிகளில் செலவாகின்றது. முதலில் நாம் செலவழிக்கும் பணம் எங்கு செல்கின்றது, ஏன் செலவாகின்றது என்று பார்க்க வேண்டும்... இன்று நாம் செலவழிக்கும் பணம் யாவுமே, பண்ணாட்டு நிறுவனங்களிடம் சென்று சேர்கின்றது. அவர்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு அழகழகாய் அடுக்கி வைக்கின்றார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதால் அந்த பணம் அவர்களிடம் சென்று குவிகின்றது. அந்த பணம் மீண்டும் நம்மிடம் திரும்ப வராது. எனவே நாம் மீண்டும் மீண்டும் ஏழைகளாக்கப்படுகின்றோம்.

அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் வாங்குவதால், இடைகழிவு, விற்பனை லாபம் யாவும் கடையின் உரிமையாளருக்கு சென்று சேர்கின்றது. எந்த வகையிலும் ஒரு பொருளை கடையில் இருந்து வாங்கும் போது, ,நாம் நட்டமடைகின்றோமே ஒழிய, லாபம் அடைவதில்லை . இந்த நிலை மாறி கடையில் இருந்து ஒரு பொருளை நாம் வாங்கும் போது நாம் லாபம் அடையும் வகையில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இயலுமு்.

உண்மையில் மக்கள் பணம் மக்களிடமே சுழல வேண்டும், அல்லது உழல வேண்டும். அப்போதுதான் மக்களிடம் வறுமை அண்டாது. மாறாக மக்களின் பணம் அனைத்தும் ஒரே இடத்தில் குவியும் போது. தனிநபர்  பணத்தில் குளிக்கலாம், ஆனால் ஒட்டு மொத்த சமுகம் ஏழை சமுகமாக இருக்கும். இதைத்தான் இன்றைய இந்திய பொருளாதார மேதைகளும், அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் செய்கின்றனர். மக்களால் பொருளாதார மேம்பாடு அடைய முடியமல் தவிக்கின்றனர்.

இந்த நிலை தலித் சமுகத்துக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே இவற்றை தவிர்க முதலில் மக்கள் பணத்தை மக்களிடமே, சுழலச் செய்ய வேண்டும்.

அதற்காக சேரிகள் தோறும் உள்ள வீடுகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று அந்த தொகையை முதலீடாகவும், முலதனமாகவும் கொண்டு ஒரு கூட்டுறவு விற்பனை மையத்தை தொடங்க வேண்டும், அதில் தற்போதுள்ள எல்லா பன்னாட்டு வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி, உள்ளுர் வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி நாம் விற்பனைக்கு வைக்கவேண்டும், நம் மக்களும் குண்டுசி முதல் அனைத்து பொருட்களையும் அந்த கடையிலேதான் வாங்க  வேண்டும்.

கிராம அளவில் தலித் மக்கள் உற்பத்தி செய்யும் காற்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை கூட தலித் கூட்டுறவு விற்பனை மையத்திலே விற்று தனக்கு வேண்டிய பொருட்களை அந்த விற்பனை மையத்திலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதன் வழியாக பொருளாதார மேம்பாடு அடைய எளிமையான வழி கிடைக்கும். இதை ஒரு பெரும் நிறுவனமாக வளர்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

 உள்ளுர் விற்பனை விலை, சில்லறை விற்பனை விலைக்கே பொருளைக் கொடுத்தாலும், ஒவ்வொரு பொருள் விற்க்கும் போதும் கடைக்காரருக்கு ஒரு லாபம் உண்டு, அந்த லாபம் முழுவதும் அந்த கடையை நடத்தும் மக்களுக்கு செல்லும், ஆண்டு இறுதியிலோ, அல்லது, ஆண்டிற்கு இரு முறையோ கடை யில் பொருட்களின் விற்பனை வழியாக கிடைத்த லாபம் மக்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

இதன் முலம் ஒரு பொருளை வாங்கும் போது கடைக்காரருக்கு கிடைக்கும் லாபம் தலித் மக்கள் அணைவருக்கும் கிடைக்கும். மேலும், காலப்போக்கில், பன்னாட்டு வியாபாரிகளின் பொருட்கள் விற்பனையை நிறுத்தி, அல்லது குறைத்து, உள்நாட்டு வியாபாரிகளின் பொருளை விற்கலாம். அல்லது. தலித்துகள் உற்பத்தி செய்யும் பொருளை தலித் மக்களிடமே, கூட்டுறவு விற்பனை மையத்தின் வழியாக எளிதில் விற்பனை செய்யலாம், இந்த மக்களின் பணம் இவர்களிடமே உழன்று பலருக்கு வேலை வாய்ப்பையும், பொருளாதார மேம்பாடும் அடைய வழி பிறக்கும்.

இதை சேரிகள் தோறும் செய்ய வேண்டும். அப்போதுதான் தலித் மக்களுக்கென விற்பனை நிலையங்கள் உருவாகும். தலித் கூட்டுறவு விற்பனை மையம் என்பது தலித் மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு நிறுவனமாக உருவெடுக்கும். நமக்கான பொருளாதாரத்தை நாமே கட்டமைக்க இயலும்.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்