Sunday, July 7, 2013

மண்டகொளத்துார் கிராமம்

எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஓர் கிராமம் மண்டகொளத்துார். அங்கு வண்ணியர்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல், தலித்துகளின் எண்ணிக்கை. 150க்கும் குறைவாகவே இருக்கும். அந்த கிராமத்தில் இரட்டை குவலை முறை நடைமுறையில் இருக்கின்றது இன்றும்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் திரு. ஏழுமலை என்னும் அந்த கிராமத்தின் முதல் கல்லுாரி மாணவர் இந்த இரட்டை குவலைக்கு எதிராக எதிர்குரல் எழுப்பினார். அதனால் அந்த ஊரின் நுாலகத்துக்கு முன்பு அவரை அடிக்கவும், சாதி பெயரைச் சொல்லி திட்டவும், செய்தனர் வன்னியர்கள்.

அவர் அந்த பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாமல், காவல் நிலையம் சென்று வழக்கு கொடுத்தார்.பின்னர் ஊர் முழுவதும் ஏழுமலைக்கு எதிராக செலவு செய்வது என்று அவர்களின் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏழுமலையின் குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர்ந்தது.  வழக்கு பத்து ஆண்டுகள் நடந்தது. தாழ்த்தப்பட்டோர் வண்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை திரும்ப பெற ஏழுமலைக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்கும் அளவேயில்லை...

இறுதியில் ஏழுமலைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. வன்னிய சாதி இந்துக்கள் ஏழுமலை மற்றும் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டனர். மற்றும் அபராதம் கட்டினர். மீண்டும் அவரது குடும்பம் சொந்த ஊருக்கு வந்தது.  அதன் பிறகு அவர்கள் தாழ்த்தப்பட்டோரை தாக்குவதில்லை. பொது இடங்களில் சாதி பெயரை சொல்லி திட்டுவதில்லை.

 இந்த நிகழ்விற்க்கு அந்த பகுதியில் இருந்த ” அம்பேத்கர் விடுதலை முன்னனி” உறுதுணையாக இருந்தது. திரு. ஏழுமலை அவர்களுக்கு... இன்று ஏழுமலை ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கின்றார்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர் வண்முறையில் இறங்கினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே பாதுகப்பு ” தாழத்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்புச் சட்டம்” மட்டுமே.

இந்த நிலையில் ”பாட்டாளி மக்கள் கட்சியின் ” தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்பு சட்டத்தை திருத்தம் வேண்டும் என்று மற்ற சாதிகளை அனியப்படுத்திய நிகழ்வின் உள்நோக்கமாக இருப்பது தலித் மக்களின் மீது தொடுக்க இருக்கும் தொடர் தாக்குதலுக்கான திட்டமே.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்