Saturday, September 14, 2013

வாழ்க்கை பயணம்...



கடந்து போகும்
பாதையெல்லாம்
கடல் அலை
தாலாட்ட
நடப்பதோன்றும்
கடற்கரை அல்ல...

கல்லும் முல்லும்
காலுக்கு மெத்தை
என்று சொல்லி
நடக்க இது ஒன்றும்
சபரிமலை அல்ல..

நடந்த பாதையில்
நலமாய் திரும்ப
இது ஒன்றும்
மகிழுந்து பயணம் அல்ல...

வாழ்க்கைப் பயணம்....

அது எப்படி இருக்கும்...

ஆள் நடமாட்டம்
இல்லாத
அனுபவமில்லாத
காட்டை அழித்து
பாதை செய்வது....

முள் கிழிக்கும்,
கல் அடிபடும்...
கால் வைத்த இடமெல்லாம்...
நெருஞ்சி குத்தும்...

உடலெங்கும் காயம்
எஞ்சியிருக்க
மனம் எங்கும்
முள் குத்திய வலியும்
தனிமையின் தவிப்பும் தகிக்க
ஒரு வழி பாதையாய்
பயணம் தொடர
எனக்கு பின் வருபவனுக்கு
சுகமான பாதை
கிடைக்கும்....

பாதை போட்டவனக்கு
என்ன கிடைக்கும்...
அசிங்கம்...
அவமானம்...காயம்...
வலி... வேறென்ன...
இதுதானே வாழ்க்கை பயணம்...

யாரேனும் தப்ப இயலுமா என்ன
இந்த பயனத்திலிருந்து...

இன்று எனக்கு
எதுவோ அதே தானே,
நாளை எனக்கு பின் வருபவனுக்கும்...
இடமும், களமும் மாறுபடும்...
அவ்வளவுதானே...
அதுதானே வாழ்க்கை பயணம்...

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்