Wednesday, April 3, 2013

ஆயிரம் கால அடிமைகள் - தமிழர்கள்



தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆட்சி நடந்த காலங்களை கணக்கிலெடுத்தால் வரலாற்றில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர்களின் ஆட்சி நடைபெறவில்லை.
மதுரை நாயக்காகளின் ஆட்சி, 300 வருடம்
கிருஷ்ணதேவராயரின் ஆட்சி 180 வருடம்
நவாப்புகளின் ஆட்சி
போர்த்துக்கிசியர்களின் ஆட்சி,
மராத்தியர்களின் ஆட்சி.
பாளையக்காரர்களின் ஆட்சி
வெள்ளையர்களின் ஆட்சி 300 வருடங்கள்
என நடந்த ஆட்சிகள் யாவும் அயலவர்களின் ஆட்சிதான்.

விடுதலை அடைந்து அமைந்த அரசுகளில், அறிஞர் அண்ணா, மற்றும் பச்சைத் தமிழன் காமராசர் ஆகிய இருவர்களின் ஆட்சித் தவிர மற்ற ஆட்சியாளர்களை தமிழர்களின் ஆட்சியாக கருத முடியாது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒர் இனம் தொடர்ந்து அயலவர்களின் ஆட்சியில் இருந்திருக்கின்றது என்றால், அந்த இனத்திற்க்கு விடுதலை வேட்க்கை இல்லை என்றுதானே பொருள்.
இன்றைய வரலாற்றில் நாம் தமிழரின் வீரம் என்று படிப்பவை யாவும்,  தமிழனுக்கும், தமிழனுக்கும் நடந்த பங்காளிகள் சண்டைதானே. ஒற்றுமையாக இருக்கத் தெரியாத ஒரு இனம் தானே தமிழினம்.
வரலாற்றில் 300சேர,சோழ,பாண்டியரின் 300 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடந்த கூட்டாட்சியை கலிங்க மன்ன்ன் காரவேலன் உடைத்தலிருந்து அமைதி நிலவியிருக்கின்றதா?
வெல்லாள தமிழர்கள், 
திராவிடத் தமிழர்கள்,
உயர் சாதி தமிழர்கள்,
என நீங்கள் அணைவரும் சேர்ந்து தலித்துகளுக்கு செய்த தீண்டாமை கொடுமைகள் கொஞ்சமா, அவர்கள்( தலித்துகள்)தமிழர்கள் இல்லையா? வேறு மாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களா?
தமிழர்களால் தனித்து உழைத்து அரும் சாதனைகள் செய்ய முடியும், ஆனால் கூட்டு செயல்பாட்டில் முனைப்பு காட்டுவார்களா? ஏனெனில் அவரிகளிடம் அதிகம் இருப்பது புகழ் போதை, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்த வேண்டும் என்னும் எண்ணம்.
அவர்களால் சேர்ந்து உணவருந்த இயலுமா? தன்சாதி மற்றும் மற்ற சாதிகாரர்களுடன், ஆனால் சேர்ந்து மலம் கழிப்பான் எல்லா சாதிகாரனுடனும். இதுதான் தமிழன் புத்தி.
தமிழினம் என்று பேசுவோர்கள், தங்களுடைய சுய சாதியைத் துறந்து தங்களை தமிழன் என்று அடையாளம் படுத்திக் கொள்ளும் துணிச்சல் உண்டா?
நடிகர்களை தமிழர்கள் என்று நம்பியிருக்கின்றீர்களே. தமிழ் நடிகர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா? தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் என்று தெரியுமா? அவர்களுக்கு எல்லாம் ரசிகர் மன்றம் உண்டா? அவர்களை உச்ச நட்சத்திரம் என்று சொல்ல முடியுமா தமிழ் திரைப்பட ரசிகர்களால்.
உங்களுக்கு எல்லாம் தமிழ் பேசினால் அவர்கள் எல்லாம் தமிழர்கள். மார்வாடி தமிழ் பேசி இந்த நாட்டின் வளத்தை கொள்ளையடித்து குசராத்துக்கு கொண்டு போகின்றான்.
மலையாள நடிகர்கள் தமிழ்பேசி, தமிழர்களின் வருமாணத்தையெல்லாம் திரைப்பட ரசனை வழியாக சுரண்டி அவர்களின் மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றான்.
கன்னட நடிகர்கள் எல்லாம் தமிழ்பேசி, தமிழர்களின் வருமாணத்தையெல்லாம் திரைப்பட ரசனை வழியாக சுரண்டி அவர்களின் மாநிலத்துக்கு சொத்துக்களாக கொண்டு செல்கின்றான்.
ஆட்சியில் இருப்பவர்களும், அரசியல் வாதிகளும், அடுக்கு மொழி பேசினால், தமிழர்கள் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவர்களை ஆசியாவின் மிகப்பெரும் பணக்கார்களாக வளர்த்து விட்டு பிறகு தமிழினத்துக்கு துரோகம் செய்கின்றனர் என கதறுவது.
தமிழில் பேசுவது இழுக்கு என்னும் மனோபாவம், தமிழர்களுக்க்கு மட்டுமே உரியதாகும். தேசத்தந்தை என்று போற்றும் மோகன்தாஸ் கரம்சந் காந்தியார்கூட தனது தாய்மொழியான மரத்தியில்தான் பேசுவாராம். ஆனால் இங்கு பல தமிழின தலைவர்களுக்கு தாய்மொழியே தமிழ் கிடையாது.
இன்றைக்கு ஈழ ஆதரவு போராட்டம் உக்கிரமாய், உச்சபட்சமாய் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், யார் யாரையோ தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அடிமை புத்தியை விட்டு விட்டு . இனத்தை வாழவைக்கும் வழிகளைத் தேடுங்கள். தமிழினத்தின் வரலாற்றை மீள் வாசிப்பு செய்யுங்கள், அப்பொழுதுதான் உங்களால் அம்பேத்கர் சொன்னது போல, வரலாறு தெரிந்தால்தான் வரலாற்றைப் படைக்க முடியும்.
ஒரு இனம் தன்னுடைய பலம் தெரியாமல் பல்லாயிரம் ஆண்டுகள் வாழலாம். ஆனால் தன்னுடைய பலவீனம் தெரியாமல் வாழ கூடாது. தமிழினம் தன்னுடைய பலமவீனம் தெரியாமலே பலநுர்ரு ஆண்டுகள் வாழ்ந்த்து கொண்டிருக்கின்றது. அது
1.   சாதியப் பாகுபாடு
2.   திரைப்பட ரசனை
3.   ஒற்றுமையின்மை
4.   தொலைநோக்கு பார்வையின்மை
5.   பொருளாதார பார்வையின்மை
6.   எல்லோரையும் நம்புவது தலைவனாக ஏற்றுக் கொள்வது.

 பட்டியல் நீளும். அதனால் ஆகப் போகும் பயனில்லை. இதை முகநுலில் படித்து விட்டு பகிரவோ, விரும்பவோ செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்த்தாக நிணைத்து விடுவோம்.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்