பசுமை படர்ந்த
வெளிதனில்
சிலுவை
சுமந்த
சொலகொல்லை
பொம்மைக்கு
தெரியும்
தன்னை பற்றி
சிலுவையில்
அறைய பட்டதால்
தான் இயேசு
அல்லஎன்றும்
பெரு வெலிக்கு
காவல்
நிற்பதால் தான்
காவல்காரன்
அல்ல என்றும்
பறவைகள்
பயப்பட
அதனிடம்
வலை இல்லை
மனிதர்கள்
பயப்பட
அதனிடம்
மனம் எல்லை
மன்னர்கள்
பயப்பட
அதனிடம்
படையும் நாடும் இல்லை
ஒன்றும் இல்லாத
பொம்மைக்கு
இவ்வளவு பயனா ?
தலைகனம் கொள்ள
அதற்க்கு
தலை இல்லை
உறுப்புகள் இல்லை
அதன்
அடையாளத்தை
மட்டுமே கொண்ட
உடலும் மனமும்
இல்லாத பொம்மை அது
அதன் மேல்
மற்றவர்களுக்கு
ஏன் இந்த
கோபமும் வெறுப்பும்
தன்னைப்போல்
இருப்பதால்
தன்னை புரிந்து
கொள்ளவில்லை
என்று
மனிதனுக்கும்
மன்னன்க்கும்
மனம் இல்லா
பொம்மை
மண் தானே
அதை புரிந்து
கொள்வது
அவ்வளவு கடினமா ?
புகழும்
பாராட்டும்
பழியும்
பாவமும்
வஞ்சமும்
காமமும்
மனம்
உடையவர்களுக்குதானே !
மனம் இல்லாத
பொம்மை இடம்
எதிர்பார்ப்பது
சரியா ?
பொம்மையை
பொம்மையாக
பாருங்கள்
பொம்மைக்கும்
வாழ்க்கை உண்டு
அதுவும் தான் வாழ
இடி மின்னல்
மழை வெயில்
காற்று புயல்
என எல்லாவற்றையும்
எதிர்து நிற்கிறது
வாழ்கிறது
படைப்பின்
நோக்கத்தை
புரிந்து
கொண்டதால்
அதற்க்கு
அச்சம்மில்லை
பறவைகள்
தன்னைக் கண்டு
பயபடுவதால்
பெருமையும்
இல்லை
மன்னர்களை
கண்டு
மகிழ்வதும் இல்லை
சோளக்கொல்லை பொம்மைகள்
தங்கள் தொப்பியை
கழற்றுவது
இல்லை
மாண்புமிகு
மகாராஜாவுக்கு
முன் ...
No comments:
Post a Comment