Sunday, November 23, 2014
Friday, August 8, 2014
மழையும் மக்களும்
கிராமப்புறங்களில்
பெய்த மழையை அளவிட்டு பேசுவார்கள்.
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு
முன்பு . எனக்குத் தெரிந்த வரையில் அவற்றை இங்கே
பதிவு செய்கின்றேன்.
·
துாறல்
( துாத்தல் என்பார்கள் பேச்சு வழக்கில் ) ( லேசான மழை)
·
சிறு
துாறல் ( மண்னுக்கு ஈரப்பதம் அளவுக்கான மழை)
·
படி
மழை (பலமழை) என்பார்கள் பேச்சு வழக்கில்
( சிறு
புல்லுக்கு உகந்த மழை)
·
சால்
மழை ( சால மழை அல்லது சான மழை என்பார்கள் பேச்சு வழக்கில் ) ( சுமாரான மழை) நாங்கள் எல்லாம் விளையாடும் போது எங்க
ஊரில் சான மழை பொழிஞ்சது என்போம். சால் என்பது இறைப்புக்கருவி பத்துசால் பாசனம் என்று
நிலத்திற்க்கு பயிரிடும் போது கவளையிறைக்கும் போது சால் முறையில் அளந்து இறைப்பார்கள்
பண்டையநாளில்.
·
எறப்பு
மழை ( இறைக்கின்ற அளவுக்கு பொழிந்த மழை)
·
வெள்ளம்
( நீர் நிலைகள் நிரம்புகின்ற அளவுக்கு
பொழிந்த மழை
)
உங்க ஊர்ல
வெள்ளம் போச்சா என்று மழை
பெய்த அளவை விசாரிப்பார்கள்.
·
கோடி
மழை ( நீர் நிலைகள் நிரம்பி
வழிகின்ற அளவுக்கு
இருக்கின்ற
மழை )
·
பேய்
மழை ( புயலும் காற்றும் சேர்ந்து
அடித்தால்)
·
பெரு
மழை ( விடாது பெய்து கொண்டிருக்கும்
மழை)
·
மாரி
( அளவிட முடியாத அளவுக்கு பொழிந்த மழை)
அப்போது
எல்லாம் வெளியூரில் இருந்து யார் வந்தாலும் முதலில் அவரைப் பற்றி நலம் விசாரித்து விட்டு,
பின் அவரது குடும்பத்தினரின் நலம் விசாரிப்பார்கள். மூன்றாவதாக உங்க ஊர்ல மழை பொழிந்ததா
என்று விசாரிப்பார்கள். பேச்சு வழக்கில் உங்க ஊர்ல மழை மாரி பொஞ்சதா என்பார்கள். எனக்கு
இந்த மழை மாரிக்கான விளக்கம் நீண்ட நாட்களாய் தெரியவில்லை, பின்னர்தான் தெரிந்தது.
மேலே உள்ள மழை அளவு முறையில் பெய்தால் அது மழை, அளவற்ற முறையில் பெய்தால் அதாவது பெரு
வெள்ளத்துக்கு மேலே பெய்தால் அது மாரி என்று. மழையையும் நமது உறவினராகவே கருதி அதையும்
விசாரிக்கும் பழக்கமும், பெய்கின்ற மழையை விவசாயத்துக்கு உகந்த அளவில் கணக்கிட்டு பேசும்
பழக்கமும் அப்போது நம்முடைய வாழ்வோடு கலந்திருந்த ஒன்றாக இருந்தது.
இவ்வாறு
மழையை
சுட்டும் பெயர்கள் எதுவுமே
இப்போது வழக்கத்தில் இல்லை, நலம் விசாரிப்பு முறைகளும் இப்போது இல்லை, நம் வீட்டுக்கு யார்
வந்தாலும் அவரிடம் இரண்டு வார்த்தை பேசுகின்றோம், மூன்றாவது வார்த்தை பேசுவதற்க்குள்
தொலைக்காட்சி தொடர், கிரிக்கெட், சினிமா, அரசியல் இவைகளில் ஏதாவது ஒன்று வந்து மழையின்
இடத்தை பிடித்துக் கொள்கின்றது.
மழை
குறித்த விசாரிப்புகளே நம்மிடையே இல்லாமல் போய் விட்டது. விவசாயத்தை தொழிலாக இல்லாமல் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த
நாம் வெகு
சுலபமாக மழையை மறந்து விட்டேம். இரண்டு காரணம்,
·
விவசாயத்தை
கொண்டாடுபவர்கள் மழையை கொண்டாடுவார்கள் எனவே
அதன் தன்மை மற்றும் அளவை
வைத்து, அழைத்தார்கள். இன்று விவசாயம் வாழ்க்கை
முறை என்பதில் இருந்து மாறி, வருமானம்
ஈட்டும் முறையாகிப் போனதால், நிலமற்ற விவசாய கூலிகள் நிலத்தில்
இருந்து அன்னியப் பட்டு நிற்பதால் விவசாயத்தை கொண்டாட யாரும் இல்லாததால் மழையை கொண்டாட
யாரும் இல்லை.
·
மழையை
நம்பி பயிர் செய்யும் முறையும், ( மானாவரி விவசாயம்) சிறு தானிய உற்பத்தி முறையும்
மாறிப் போனது.
·
மானாவரி
பயிர் செய்யும் நிலத்தில், கிணற்றை வெட்டி, விவசாயம் செய்ததால், மழைபெய்தால்தான் விவசாயம்
என்ற நிலை மாறிவிட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் கிணற்றில் இருந்து நீரை இறைக்கின்றோம்
என்னும் மனோபாவம் வந்து விட்டது. நீர் இருப்பு குறைந்ததால் ஆண்டுதோறும் இரண்டு கெஜம்
கிணற்றை வெட்டினால் போகின்றது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் இதனால் புவியின்
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகின்றது என்பதை யாரும் எண்ணவில்லை.
மழையை
கொண்டாடும் மரபு போய் மழை வேண்டாத விருந்தினராகிப்
போனது நம்முடைய வாழ்க்கை முறையில் இன்று. ஆண்டிற்க்கு முன்னுாறு நாள் பெய்த மழை போய்
இன்று 15 நாட்களே மழை பெய்கின்றது. இவ்வாறு பெய்யும் மழைநீர் கூட நிலத்தில் பதிய கூடாது
என்பதற்காக, தெருக்களெல்லாம் சிமெண்ட் சாலைகளும், மேம்பாலங்களும், மழையை பகையாளியாக
கருதி தடுப்பு முறையை கையாளுகின்றோம்.
ஆறுகளில் இப்போது இருக்கும் மேம்பாலங்கள் எதுவும்
அப்போது இல்லை, இருந்தும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அவ்வாறு பெருக்கெடுத்து
ஓடுகின்ற வெள்ளத்தை பார்ப்பதற்காகவே மக்கள் ஆற்றுக்குப் போய் பார்த்து வருவார்கள்.
எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. எங்கள் ஊர் கரிக்காத்துாருக்கு பக்கத்தில் இருக்கும்
ஊர் மண்டகொளத்துார் இரண்டையும் செய்யாறு பிரிக்கின்றது, நான் சிறுவனாக இருந்த போது
செய்யாற்றில் வெள்ளம் வந்தால் இரு கரையிலும் கயிறு கட்டி அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு
பயணிக்க வேண்டும் ஆற்றை கடக்க,
எங்கள்
ஊரில் இருந்து கயிற்றை பிடித்து ஆற்றை ஒரு முறையேனும் கடந்து போய் வர கூட்டமாக போய்
வருவோம், ஒரு முறையேனும் பெருவெள்ளத்தில் கால் நனைத்து விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில்
அவ்வாறு செய்வோம். கால் நனைத்து வராதவரை குற்றவாளிபோன்றும், தவறு செய்தவரை போன்றும்
அடுத்த ஆண்டு வெள்ளம் வரும் வரைக்கும் பேசுவார்கள்,
அடுத்த
ஆண்டு வெள்ளம் வந்ததும் அவர் முதல் வேலையாக போய் கால் நனைத்து விட்டு வருவார். இவ்வாறு
ஆற்று வெள்ளத்தை அதாவது நீரை நீருக்கு மூலாதாரமாக விளங்கும் மழையை கொண்டாடும் மரபு
நம்முடைய மரபு.
காவேரி வைகை போன்ற பெரு நதிகள் பாயும் பகுதிகளில்
ஆடிப்பெருக்கு மிகுந்த விமரிசையாக கொண்டாடுவார்கள், இதுவும் நீரை, நீருக்கு ஆதாரமாக
விளங்கும் மழையை கொண்டாடும் மரபுதான். சிலம்பில் கொண்டாடப்படும் இந்திரன் விழாவின்
எச்சம்தான் இன்றும் ஆறுகள் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் ஆற்றத்திருவிழா. இதுவும்
மழையை கொண்டாடும் விழாதான். இவ்வாறு பன்டைய காலம் தொட்டு நீரையும், மழையையும் கொண்டாடும்
மரபு நம்முடைய மரபு.
என்னுடைய தாத்தா திரு. மு. பரசுராமன், சிறுமூர்
கிராமத்தில் இருந்தார், அவர் மழை பெய்யும் போது, அவசரப்பட்டு ஓடி வரமாட்டார், மாடு
மேய்த்துக கொண்டிருந்தாலும் அதையும் விரட்ட
மாட்டார், அவரும் நனைவார், மாடும் நனையும், அவருடன் அப்போது இருந்தால் நானும் நனைவேன்.
ஏன் தாத்தா எல்லோரும் மழைக்கு பயந்து ஓடுராங்களே
நாம ஓட வேண்டாமா என்றால், முட்ட பசங்க, மழை நம்ம மேல படுறதுக்கு நாம கொடுத்து வைத்திருக்கனும்
என்பார். மழையை அவ்வளவு ரசிப்பார். இன்னும் சொன்னால் மழையில் நனைந்தால் பன்ன பாவம்கூட
போகும் என்பார். அந்த அளவுக்கு மழையோடு ஒன்றி கலந்து உயிர் கலந்த உறவாக இருந்த மனிதர்களும்
இருந்திருக்கின்றார்கள் என்று என்னும் போது,
அய்யன்
திருவள்ளுவரின் வாக்கான நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும்
மழை என்னும் குறளுக்கு மழையை நேசிக்கின்ற நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும்
பெய்யும் மழை என்று கூட பொருள் கொள்ளத் தோன்றும் எனக்கு,
அப்போது எல்லாம் தெருக்கூத்து நடக்கும் போது,
மாதம் மும்மாரி பொழிகின்றதா அமைச்சரே என்று ராஜபார்ட் அமைச்சரைப் பார்த்து கேட்ப்பார்,
சிறு பிள்ளையாக இருக்கும் நாங்கள் கொல்லென்று சிரிப்போம், அப்போது எங்களுக்கு புரியவில்லை
அது, என் தாத்தாவே அதற்க்கு விளக்கமும் சொன்னார்,
·
அறிவில்
சிறந்த சான்றோருக்கும் முதியோருக்கும் ஒரு மழை
·
நீதி
நெறி வழுவாத அரசருக்கு ஒரு மழை
·
குடி
மக்களுக்கும் கற்பு நெறி தவறா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு மழை என்பார்.
இந்த
3 மழையில் எந்த மழை குறைந்தாலும் அத்தகைய பன்புடையவர்கள் நமது நாட்டில் இல்லை என்று
கருதி குடிமக்களின் நலன் காக்கும் மன்னனாக நடந்து கொள்வாராம் அரசர். நமது மான்பை கூட மழையை வைத்துத்தான் நாம் கணித்திருக்கின்றோம்
என்பதையும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை இன்று.
மழை என்பது சமவெளியில் வாழ்ந்த மக்களுக்கும்
பழங்குடிகளுக்கும் வாழ்வோடு கலந்த உறவு. கடற்கரையில் வாழ்பவர்களுக்கு காற்று என்பது
உயிரோடு கலந்த உறவாக இன்றும் இருக்கின்றது, பழங்குடிகளும் மழையை கொண்டாடுகின்றார்கள்.
சமவெளி மக்கள்தான் இன்று மழையை மறந்து விட்டார்கள்.
கிராமங்களில் காப்பு கட்டி விரதம் இருந்து கொண்டாடப்படும் கோயில்
திருவிழா என்பது மழைக்காக ஊர் மக்களின் வேண்டுதலும் அதற்காக கடைபிடிக்கும் அறம் சார்ந்த வாழ்வியல் நெறிமுறையும்தான்,
கிராமத்தில் உள்ள பெண்தெய்வமான மாரியம்மன் என்பது மழையை குறிக்கின்ற ஒரு குறியீடு என்பதையும்
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மழை
இன்று பெய்யும் அல்லது எப்போது பெய்யும் என்பதையும் நம் முன்னோர்கள் துல்லியமாக கணித்து
வைத்திருந்தனர். உதாரணத்திற்க்கு, சிறு மழைக் காலத்தில் கொக்கு, நாரை, மற்றும் நீர்கோழி
ஆகிய நீர் பறவைகள் நீர் நிலைகளில் நடமாடினால் 15 லிருந்து 30 நாட்களுக்குள் பெருமழை
பொழிந்து நீர் நிலைகள் நிரம்பப் போகின்றது என்று பொருள்.
தும்பிகள்
பறந்தால் இன்னும் ஒரு வார காலத்தில் மழை பொழியும் என்று பொருள். எறும்புகள் தங்களது
கூட்டை விட்டு இறையை இடம்மாற்றினால் இன்னும் 3 மாதத்தில் மழை பொழியும் என்று பொருள்.
( எறும்புகள் தங்களின் வாயில் வெள்ளையாக கொண்டு போவது அரிசி அதாவது அதனுடைய உணவு என்றுதான்
நான் வெகுகாலமாக நம்பியிருந்தேன். என் மூத்த மகளுக்கு எறும்பின் மீது திடீர் ஆர்வம்
ஏற்பட்டு அதை குறித்து தீவிராமாக வாசித்து எறும்புகள் தங்களின் வாயில் கொண்டு போவது
தங்களின் முட்டை என்று சொன்னாள்)
அளவுக்கு
அதிகமான புழுக்கம் (வெக்கை) இருந்தால் 1லிருந்து 3 நாட்களுக்குள் மழை பொழியும். மேற்கிலிருந்து
மேகம் கிழக்கே போனால் மழை விசிறிவிட்டுப் போகும் என்பார்கள். கிழக்கிலிருந்து மேகம்
மேற்கே போனால் கன மழை பொழியும் என்பார்கள்.
ஐம்பெரும்
காப்பியத்துள் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கூட மாமழை போற்றுதும் என்று சொல்லி
மழையை வனங்கியிருப்போம்.அவ்வையாரும் தனது கொன்றை வேந்தனில் ” நீரகம் பொருந்திய ஊரகத்து இரு என்று சொல்வார். அதாவது நீர் வளம்
உள்ள பகுதியில் வாழ வேண்டும் என்று. இவ்வாறு மழையை கொண்டாடும் மரபில் வந்தவர்கள் நாம்.
கோயில்களில்
கூட ஸ்தல விருட்சம் என்ற பெயரில் மரங்களைத்தான் வளர்த்துக் கொண்டிருந்தோம் நாம், இவ்வாறு
வழிபடும் கோயில் முதற்கொண்டு வாழிடம் வரை மரங்களை வளர்த்துக் கொண்டிருந்ததால் மழை அதிகமாக
பொழிந்தது.
”
கார்த்திகைக்குப் பின் மழையில்லை,
கர்ணனுக்குப் பின் சண்டையில்லை என்று பழமொழிகளில் கூட மழைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போம்
நாம். தை மாதத்தில் மழை பொழியாது, ஆயினும் பொங்களுக்குப் பின் இரண்டு நாட்களுக்கு சிறு
மழை பொழியும், கிராம புறத்தில் கேட்டால் பொங்கள் கோலத்தை கலைப்பதற்காக மழை பொழியும்
என்பார்கள்.
பொங்கல்
என்பது மழைக்கு நன்றி சொல்லும் திருவிழாவாக கருதப்படுவதால், மகிழ்ந்து மக்கள் சிரத்தையோடு
போட்ட கோலத்தை ஏற்றுக் கொள்கின்றது என்ற பொருளில் பொங்கல் கோலத்தை கலைப்பதற்க்கு மழை
பொழிகின்றது என்ற நமக்கும் மழைக்குமான புரிதலை நன்றியோடு வெளிப்படுத்துவர். ஆனால் இன்று
அரிசி மாவுக் கோலம் போய் பெயின்ட கோலம் வந்ததால், கோலத்தை கலைப்பதற்க்கு மழை வந்தாலும்
வராவிட்டாலும் கவலைப் படுவதில்லை நாம்.
இராகத்தில்
கூட அமிர்த வர்ஷினி என்றொரு ராகம் மழையை வருவிக்கும் என்று சொல்வார்கள். பாவேந்தர்
கூட மழையை அமிழ்தம் என்றுதான் சொல்லுவார். இவ்வாறு நமது மரபு மழையைக் கொண்டாடும் மரபு
என்ற நிலையிலிருந்து போய், மழையை வெறுக்கும் இயல்பாக மாறிவருவது மிகவும் வேதனைக்குரியது.
இளைஞர்களோ,
கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை சொன்னால்
மழை பெய்யக்கூடாது என்று கடவுளை வேண்டுகின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தை விட தங்களின்
பொழுது போக்கே முக்கியத்துவம் என நினைப்பதன் வெளிப்பாடு இது.
வேலைக்குச்
செல்லும் பெண்களோ, அலுவலகத்துக்கு செல்லும் நேரம் மற்றும் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில்
மழை பெய்யக்கூடாது என எண்ணுகின்றனர். முன்பு பருவகாலங்களில் மட்டுமே செங்கல்சூளை போட்டனர்.
இப்போது ஆண்டு முழுவதும் செங்கல் சூளை போடுவதால் எப்பொழுதும் மழை வரக்கூடாது என எண்ணுகின்றனர்.
அரசில்வாதிகளோ,
தங்களுடைய கூட்டம் நடக்கும் நாட்களில் மழைவந்தால் மக்கள் வரமாட்டார்கள் எனவே அன்று
மழை வரக்கூடாது என எண்னுகின்றனர்.
பள்ளி
செல்லும் குழுந்தைகள் மழைக்காலத்தில் பள்ளிக்கு செல்வது மிகுந்த சிரமமாக இருப்பதால்
அவர்களும் மழை வரக்கூடாது என என்னுகின்றனர். உண்மையில் கோடையில் விடுகின்ற பள்ளி விடுமுறையை
மழைக்காலத்தில் விட்டால் பிள்ளைகளும் மகிழ்வார்கள், பெற்றோர்களும் மகிழ்வார்கள்.
இவ்வாறு
அனைவரும் தன்னுடைய பங்குக்கு முதல் எதிரியாக மழையை கருதி ஏதோ மழையில் தாங்கள் நனைந்தால்
உயிர் போவது போல நினைத்து மழை வரக்கூடாது என்று நினைக்கின்றனர். இவ்வாறு உயிர்களின்
வாழ்வாதாரத்துக்கு காரணமாக இருக்கும் மழையை தங்களின் விருப்பத்திற்காக வரகூடாது என
நினைக்கின்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் இந்த நாட்டில்.
அன்று நம்மோடு மழை உயிர் கலந்த உறவாக இருந்தது
இன்று அது அவ்வாறு இல்லை, அன்னியப்பட்டு போய் நிற்கின்றோம் மழையோடு, அதனால்தான் வீடுதோறும்
மழையே மழையே துார போ, சின்ன பையன் ஜானி விளையாடனும் என்று பொருள் புரியாமலே மழையை விரட்டிக்
கொண்டிருக்கின்றது நமது குழந்தை, மழை வரக்கூடாது என்று மரங்களை வெட்டிக் கொண்டிருக்கின்றோம்
நாம்.
- நன்றி . காக்கை சிறகினிலே இதழ்
Friday, May 9, 2014
Subscribe to:
Posts (Atom)
இதையும் படியுங்கள்
-
அசோகன் அங்குலிமாலா அகத்தியன் அகிம்சகன் அஜபலா அசாஜி அஜாதசத்ரு அனத்தா அனிச்சா அகாலா அஷ்வகோஷ் அஞ்சான் அசித்தா அனிருத்தா அபயன...
-
புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...
-
புத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...
-
பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த ...