Thursday, April 11, 2013

சோள கொல்லை பொம்மை



பசுமை படர்ந்த
வெளிதனில் 
சிலுவை 
சுமந்த 
சொலகொல்லை
பொம்மைக்கு 
தெரியும் 
தன்னை பற்றி 

சிலுவையில் 
அறைய பட்டதால் 
தான் இயேசு 
அல்லஎன்றும் 

பெரு வெலிக்கு 
காவல் 
நிற்பதால் தான் 
காவல்காரன் 
அல்ல என்றும் 

பறவைகள் 
பயப்பட 
அதனிடம் 
வலை இல்லை 

மனிதர்கள் 
பயப்பட 
அதனிடம் 
மனம் எல்லை 

மன்னர்கள்
பயப்பட 
அதனிடம் 
படையும் நாடும் இல்லை 

ஒன்றும் இல்லாத 
பொம்மைக்கு 
இவ்வளவு பயனா ?

தலைகனம் கொள்ள 
அதற்க்கு
தலை இல்லை 
உறுப்புகள் இல்லை 

அதன் 
அடையாளத்தை 
மட்டுமே கொண்ட 
உடலும் மனமும்
இல்லாத பொம்மை அது 

அதன் மேல்
மற்றவர்களுக்கு 
ஏன் இந்த
கோபமும் வெறுப்பும் 

தன்னைப்போல்
இருப்பதால் 
தன்னை புரிந்து
கொள்ளவில்லை 
என்று 
மனிதனுக்கும் 
மன்னன்க்கும் 

மனம் இல்லா 
பொம்மை 
மண் தானே 
அதை புரிந்து
கொள்வது 
அவ்வளவு கடினமா ?

புகழும் 
பாராட்டும் 
பழியும் 
பாவமும் 
வஞ்சமும் 
காமமும் 
மனம்
உடையவர்களுக்குதானே !

மனம் இல்லாத 
பொம்மை இடம் 
எதிர்பார்ப்பது 
சரியா ?

பொம்மையை 
பொம்மையாக 
பாருங்கள் 

பொம்மைக்கும் 
வாழ்க்கை உண்டு 

அதுவும் தான் வாழ 
இடி மின்னல் 
மழை வெயில் 
காற்று புயல் 
என எல்லாவற்றையும் 
எதிர்து நிற்கிறது 
வாழ்கிறது 

படைப்பின் 
நோக்கத்தை
 புரிந்து 
கொண்டதால் 
அதற்க்கு 
அச்சம்மில்லை 

பறவைகள் 
தன்னைக் கண்டு 
பயபடுவதால் 
பெருமையும் 
இல்லை 

மன்னர்களை
கண்டு 
மகிழ்வதும் இல்லை 


சோளக்கொல்லை பொம்மைகள் 
தங்கள் தொப்பியை 
கழற்றுவது 
இல்லை 
மாண்புமிகு 
மகாராஜாவுக்கு 
முன் ...













Sunday, April 7, 2013

யாழன் ஆதியின் தம்மபதம் – புத்தக விமர்சனம்





கி.பி.623 – ல் வைகாசி விசாக முழுமதி நாளில் முழு நிலவாய் புத்தர் பிறந்தார். தனது 29 ஆம் அகவையில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமான ரோகிணி நதிநீர் பங்கீட்டில் போரை தவிர்க்க துறவியானார்.
புத்தர் போதனைகள்தம்மம் மூன்று தொகுப்புகளாக தொகுக்கப்பட்டன அவை .
1.   பேருரைப் பகுதி
2.   நன்னடத்தைப் பகுதி
3.   உன்னதக் கோட்பாட்டுப் பகுதி
இந்த 3 பிரிவுகளும் ஒவ்வொரு பகுதியாகவும், அவை பல வகைகளாகவும், பற்பல உட்பிரிவுகளாகவும், விரிந்து கொண்டே செல்கின்றன. அந்த வகையில் தொகுக்கப்பட்ட தம்ம புத்கங்களின் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும்.
இவற்றில் பேருரைப் பகுதி என்பது துறவிகளும், குடும்பத்தாருக்கும், பல்வேறு நேரங்களில், காலகட்டத்தில், புத்தரால் நேரடியாக சொல்லப்பட்ட அறிவுரை மற்றும் அறவுரையாகும். இவைகள்.
1.   ஒழுக்கம்
2.   நன்னெறி
3.   சமுக்க் கடமைகள் மற்றும்
4.   வாழ்வியல் பிரச்சனைகளைப் பற்றியதாகும்.
இந்தப் பேருரைகள் 5 வகைகளாகத் பிரிக்கப்பட்டிருக்கின்றன அவை.
1.   நீண்டப் பேருரைகள்
2.   இடைப்பட்ட அளவு பேருரைகள்
3.   உறவுடைக் கூற்றுகள்
4.   படிப்படியான உரைகள் மற்றும்
5.   சிற்றுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிற்றுரைத் தொகுப்பு மட்டுமே 15 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் அணைவராலும் அறியப்பட்ட ஒரு புத்தகம்தான் தம்மபதம் ( தம்மவழி) இது புத்தரின் வாய்மொழியாக வந்தவை.
தம்மபதம் புத்தர் இவ்வுலகில் உள்ள அணைத்து உயிரினங்களின் மீதும், மனிதர்களின் மீதும், கொண்டிருந்த கருணை மற்றும் அவருடைய எல்லையற்ற ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தும்  சிறிய செய்யுள்களின் தொகுப்பாகும். 26 தலைப்புகளைக் கொண்டது. 423 சிறு செய்யுளைக் கொண்டதாகும்.
இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கை, சீனா, சப்பான், பர்மா என எல்லா கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவக் காரணமாக இருந்ததில் போதிதர்மர் துவங்கி பல்வேறு தமிழர்களின் பங்களிப்பு இருந்தாலும், 20ஆம் நுற்றாண்டில் இந்தியாவுக்கு வந்ததில்
1.   கர்னல். ஆல்காட்
2.   ராய்ஸ் டேவிட்ஸ்
3.   பால்காரஸ் என்னும் 3 மேலைநாட்டு அறிஞர்களின் வழியாக மேலைநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பரவியது.
இவர்களோடு இணைந்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பவுத்தம் பரவுவதில் பெரும் பங்கெடுத்தவர். பண்டிதர் அயோத்திதாசர் ஆவார்.
தேரவாத பௌத்தம் உலகின் பழைய பவுத்த முறை என்று போற்றப்படுகின்றது. அந்த பௌத்த முறை பரவியுள்ள  ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் தம்மபதமானது, மெய்யறிவு வளரவும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தினசரி வாழ்க்கை சிக்கலுக்கு எளிய தீர்வை தரும் தீர்வுப் புத்தகமாகவும், ஒழுக்கத்தை பேணவும், அமைதியான மன நிலையில் வாழவும் அறிவுடையோர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை தம்மபதம் விவரிப்பதால் இன்று தம்மபதம் திசையெங்கும் தீர்வு சொல்லும் நீதி புத்தகமாக பயணப்படுகின்றது.
தேரவாத பௌத்தக் கொள்கையின் படி தம்மபத ஒவ்வொரு வரியும், ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது நிகழ்விற்க்கு பதில் தர புத்தரால் சொல்லப்பட்ட வார்த்தையாகும். வரலாற்றில் முதன் முறையாக கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தேகோஷர் உரையெழுதி இருக்கின்றார். அவருக்குப் பின் தம்மத பதம் உலகின் பல பகுதியில் பிரபலமாயுள்ளது.
ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இப்போது அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.
தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவை. பெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்ததுஎன்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தம் இலக்கிய உதயம் பகுதி 11 எனும் நூலில்.
தம்ம பதத்தின் பெருமையை ஹெர்மான் ஓல்டன்பெர்க் எனும் ஜர்மானியப்
பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.
பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும்போதே ஆராய்ச்சியாளனுக்கு ஒரு புனிதமானவரின் கைகளால் தம்மபதத்தை அளிப்பதைவிட மேலான காரியம்  ஒன்றும் இருக்க முடியாது. தம்மபதம் தன்னிரகற்ற அழகுடையது. பொருள் நிறைந்தபழமொழிக்களஞ்சியம்.பெளத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத்
திரும்பப் டிக்க வேண்டிய நூல் இது.”
தம்மத்தை முதலில் தமிழிற்க்கு தந்தவர் அய்யன் திருவள்ளுவர். அவருக்குப்பின் பலரும் தம்மத்தை தமிழ்படுத்தினாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த எம். என். மெகைதீன்., பவுத்த துறவி சோமானந்த தேரா, சி.எஸ்.தேவநாதன், மற்றும் பகவான். ரஐனிஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பகவான் ரசினிஸ் தம்ம பத்த்தை கதைகளாக விளக்கினார். மற்றவர்கள் வசன கவிதை மற்றும் உரைநடைகளாக வெளியிட்டுள்ளனர்.
இவர்களை அடுத்து தமிழ் கவிதைகளில் தனக்கென தனி ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ள யாழன் ஆதியும் தம்மபதம் என்னும் அரியதொரு பொக்கிஷத்தை வெளியிட்டுள்ளார். 180 பக்கமுடைய கையடக்கப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அட்டை படமும், அச்சிட்ட விதமும் மிக அருமை. கவிதைகள் ஆழ்ந்த பொருளை எளிய தமிழில் யாருக்கும் புரியும் வண்ணம் இருக்கின்றன.
கவிதைகள் பிற மொழி சொற்கள் இல்லாமல் எளிய தமிழில் யாருக்கும் புரியும் வகையில் வந்துள்ளது. குழந்தைகளுக்கும் புரியும் விதமாய் உள்ளது.
மனம் முன்னோடி
 மனம் தலைமை
தீயது பேசும்
தீயது செய்யும் மனம்
துன்பத்தால்
தொடரப்படும்
காளையைத் தொடரும்
வண்டியாய் என முதல் கவிதையை துவங்கி கடைசி கவிதையான
அந்த துறவி
தன் பழைய பிறப்புகளை
அறிந்தவர்
மகிழ்வை
துன்பத்தை அறிந்தவர்
பிறப்பின் முடிவை அடிந்தவர்
மேனறிவுடன் இருப்பவர்
முழுமையடைந்தவர்
பற்ற்ற்ற நிலையை அடைந்தவர்
அவரே அறவோர் என்னும் கடைசி கவிதைக்க  வரை, உள்ளங்கை நெல்லிக் கணி போல படிக்கப்  படிக் இன்பம் பயப்பனவாக இருக்கின்றது.
ஒவ்வொரு கவிதையும் சில நேரங்களில் திருக்குறளை புதுக்கவிதையில் வடித்துள்ளோரோ என்னும் உணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை. இது யாழன் ஆதியின் அற்புதமான படைப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஏற்கனவே யாழன் ஆதியின் செம்பறை கவிதைப் புத்தகம், பெரியார் பல்களைக் கழகத்தில் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருப்பது போல இந்த தம்மபதம் நுலும் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பாநுலாகும்.
இறுதியாக புத்தர் தன்னுடைய ஒளியால் மனிதனின் இருள் விலக பேசிய தம்மபதம், இங்கு யாழன் ஆதிகவிதையால் படிப்பவரின் மனத்தில் தம்மபதம் ஆட்சி செய்யவும், ஆளுமை செய்யவும் புத்தராலேயே அருளப்பட்டிருக்கின்றது.

வெளியீடு – புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை – சென்னை கிளை 
விலை – 100 உருவா.



Wednesday, April 3, 2013

ஆயிரம் கால அடிமைகள் - தமிழர்கள்



தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆட்சி நடந்த காலங்களை கணக்கிலெடுத்தால் வரலாற்றில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர்களின் ஆட்சி நடைபெறவில்லை.
மதுரை நாயக்காகளின் ஆட்சி, 300 வருடம்
கிருஷ்ணதேவராயரின் ஆட்சி 180 வருடம்
நவாப்புகளின் ஆட்சி
போர்த்துக்கிசியர்களின் ஆட்சி,
மராத்தியர்களின் ஆட்சி.
பாளையக்காரர்களின் ஆட்சி
வெள்ளையர்களின் ஆட்சி 300 வருடங்கள்
என நடந்த ஆட்சிகள் யாவும் அயலவர்களின் ஆட்சிதான்.

விடுதலை அடைந்து அமைந்த அரசுகளில், அறிஞர் அண்ணா, மற்றும் பச்சைத் தமிழன் காமராசர் ஆகிய இருவர்களின் ஆட்சித் தவிர மற்ற ஆட்சியாளர்களை தமிழர்களின் ஆட்சியாக கருத முடியாது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒர் இனம் தொடர்ந்து அயலவர்களின் ஆட்சியில் இருந்திருக்கின்றது என்றால், அந்த இனத்திற்க்கு விடுதலை வேட்க்கை இல்லை என்றுதானே பொருள்.
இன்றைய வரலாற்றில் நாம் தமிழரின் வீரம் என்று படிப்பவை யாவும்,  தமிழனுக்கும், தமிழனுக்கும் நடந்த பங்காளிகள் சண்டைதானே. ஒற்றுமையாக இருக்கத் தெரியாத ஒரு இனம் தானே தமிழினம்.
வரலாற்றில் 300சேர,சோழ,பாண்டியரின் 300 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடந்த கூட்டாட்சியை கலிங்க மன்ன்ன் காரவேலன் உடைத்தலிருந்து அமைதி நிலவியிருக்கின்றதா?
வெல்லாள தமிழர்கள், 
திராவிடத் தமிழர்கள்,
உயர் சாதி தமிழர்கள்,
என நீங்கள் அணைவரும் சேர்ந்து தலித்துகளுக்கு செய்த தீண்டாமை கொடுமைகள் கொஞ்சமா, அவர்கள்( தலித்துகள்)தமிழர்கள் இல்லையா? வேறு மாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களா?
தமிழர்களால் தனித்து உழைத்து அரும் சாதனைகள் செய்ய முடியும், ஆனால் கூட்டு செயல்பாட்டில் முனைப்பு காட்டுவார்களா? ஏனெனில் அவரிகளிடம் அதிகம் இருப்பது புகழ் போதை, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்த வேண்டும் என்னும் எண்ணம்.
அவர்களால் சேர்ந்து உணவருந்த இயலுமா? தன்சாதி மற்றும் மற்ற சாதிகாரர்களுடன், ஆனால் சேர்ந்து மலம் கழிப்பான் எல்லா சாதிகாரனுடனும். இதுதான் தமிழன் புத்தி.
தமிழினம் என்று பேசுவோர்கள், தங்களுடைய சுய சாதியைத் துறந்து தங்களை தமிழன் என்று அடையாளம் படுத்திக் கொள்ளும் துணிச்சல் உண்டா?
நடிகர்களை தமிழர்கள் என்று நம்பியிருக்கின்றீர்களே. தமிழ் நடிகர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா? தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் என்று தெரியுமா? அவர்களுக்கு எல்லாம் ரசிகர் மன்றம் உண்டா? அவர்களை உச்ச நட்சத்திரம் என்று சொல்ல முடியுமா தமிழ் திரைப்பட ரசிகர்களால்.
உங்களுக்கு எல்லாம் தமிழ் பேசினால் அவர்கள் எல்லாம் தமிழர்கள். மார்வாடி தமிழ் பேசி இந்த நாட்டின் வளத்தை கொள்ளையடித்து குசராத்துக்கு கொண்டு போகின்றான்.
மலையாள நடிகர்கள் தமிழ்பேசி, தமிழர்களின் வருமாணத்தையெல்லாம் திரைப்பட ரசனை வழியாக சுரண்டி அவர்களின் மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றான்.
கன்னட நடிகர்கள் எல்லாம் தமிழ்பேசி, தமிழர்களின் வருமாணத்தையெல்லாம் திரைப்பட ரசனை வழியாக சுரண்டி அவர்களின் மாநிலத்துக்கு சொத்துக்களாக கொண்டு செல்கின்றான்.
ஆட்சியில் இருப்பவர்களும், அரசியல் வாதிகளும், அடுக்கு மொழி பேசினால், தமிழர்கள் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவர்களை ஆசியாவின் மிகப்பெரும் பணக்கார்களாக வளர்த்து விட்டு பிறகு தமிழினத்துக்கு துரோகம் செய்கின்றனர் என கதறுவது.
தமிழில் பேசுவது இழுக்கு என்னும் மனோபாவம், தமிழர்களுக்க்கு மட்டுமே உரியதாகும். தேசத்தந்தை என்று போற்றும் மோகன்தாஸ் கரம்சந் காந்தியார்கூட தனது தாய்மொழியான மரத்தியில்தான் பேசுவாராம். ஆனால் இங்கு பல தமிழின தலைவர்களுக்கு தாய்மொழியே தமிழ் கிடையாது.
இன்றைக்கு ஈழ ஆதரவு போராட்டம் உக்கிரமாய், உச்சபட்சமாய் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், யார் யாரையோ தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அடிமை புத்தியை விட்டு விட்டு . இனத்தை வாழவைக்கும் வழிகளைத் தேடுங்கள். தமிழினத்தின் வரலாற்றை மீள் வாசிப்பு செய்யுங்கள், அப்பொழுதுதான் உங்களால் அம்பேத்கர் சொன்னது போல, வரலாறு தெரிந்தால்தான் வரலாற்றைப் படைக்க முடியும்.
ஒரு இனம் தன்னுடைய பலம் தெரியாமல் பல்லாயிரம் ஆண்டுகள் வாழலாம். ஆனால் தன்னுடைய பலவீனம் தெரியாமல் வாழ கூடாது. தமிழினம் தன்னுடைய பலமவீனம் தெரியாமலே பலநுர்ரு ஆண்டுகள் வாழ்ந்த்து கொண்டிருக்கின்றது. அது
1.   சாதியப் பாகுபாடு
2.   திரைப்பட ரசனை
3.   ஒற்றுமையின்மை
4.   தொலைநோக்கு பார்வையின்மை
5.   பொருளாதார பார்வையின்மை
6.   எல்லோரையும் நம்புவது தலைவனாக ஏற்றுக் கொள்வது.

 பட்டியல் நீளும். அதனால் ஆகப் போகும் பயனில்லை. இதை முகநுலில் படித்து விட்டு பகிரவோ, விரும்பவோ செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்த்தாக நிணைத்து விடுவோம்.

இதையும் படியுங்கள்