Tuesday, March 26, 2013

நல்லுணர்வு


புத்தரின் நான்கு உண்ணத வாய்மைகளான

1.      துக்கம் வாழ்வில் உள்ளது.
2.      துக்கத்திற்கான காரணம் உள்ளது.
3.      துக்கம் ஒழிக்கப்படக்கூடியது.
4.      துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது.
எண்வழி பாதை என்பது நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது என்பதை குறித்து பேசுவது. அவ்வாறு துக்கத்தை ஒழிக்கப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளே எண்வழிப் பாதையாகும். அவை ,
        1. நல்லறிவு

  • 1.    நல்லுணர்வு       
  • 2.     நற் கருத்து   
        2. நல்லொழுக்கம்

  • 3.     .நல் வாய்மை
  • 4.     நற் செயல்
  • 5.    நல் வாழ்க்கை
      3. நற்கருணை

  • 6.      நன் முயற்சி
  • 7.      .நல் மனம்
  • 8.      நல் அமைதி
நல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிற – என்பார்.

தெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.
இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதே ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும் “ மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.

நல்லுணர்வு என்னும் கருத்தை ஒரு சிறிய சென் கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
     ஒரு நாள் அடர்ந்த காட்டிற்க்கு வேட்டைக்குச் சென்ற மன்னர், ஒய்வெடுக்க கருதி அந்த அடர்ந்த காட்டில் யாருடைய தொல்லையும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையிலிருந்த ஒரு சென் மடத்திற்க்குச் சென்றார். அந்த மடத்தின் அமைதியும், துறவிகளின் உபசரிப்பும் அவரை மெய் மறக்கச் செய்தது. ஒரு புத்துணர்வு பெற்று கிளம்பினார். அரசர் சென்ற சில தினங்கள் கழித்து, அரசரின் காவலர்கள், மடத்திற்க்கு ஒரு ஓலையும், பரிசும் கொண்டு வந்து கொடுத்தனர்.
     ஓலையில் மடத்திற்க்கு கொஞ்சம் நிலங்களையும், மாண்யத்தையும் அறிவித்திருந்ததுடன், அந்நாட்டிலுள்ள அனைவரும் அந்த மடத்திற்க்குச் சென்று வந்தால் நாட்டில் அமைதி நிலவும் என்று எழுதி இருந்த்துடன், மடத்திற்க்காக அழகிய பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
அரசர் பரிசு அனுப்பிய செய்தியறிந்து, மக்கள் அவற்றைப் பார்ப்பதற்காக மடத்திற்க்கு வந்து போனார்கள். மடத்திற்க்கு மக்கள் கூட்டம் அரசரின் நிணைவுப் பரிசை பார்ப்பதற்க்கு வந்து போனது, எனவே, கூட்டத்தைக் குறைப்பதற்காக அரசருடைய நிணைவுப் பரிசை பார்க்க வருகின்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம், வசூலிக்க வேண்டும் என்று தலைமை குரு சொன்னதும், அவ்வாறே நுழைவுக் கட்டணம், வசூலித்தனர் மாணவர்களும், ஆனாலும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. மடத்திற்க்கு வருமானமும் அதிகமாக வந்து கொண்டே இருந்த்து. ஒரு நாள்
மடத்திலிருந்த சீடன் ஒருவன் அந்த நினைவுச் சின்னத்தை துடைத்து வைக்கும் போது, கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது. உள்ளே இருந்த தலைமைத் துறவி கேட்டார். என்ன சத்தம் என்று  மாணவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கை கால் நடுக்கத்துடன், பயத்தில் உளறலோடு “ அரசரது நிணைவுச் சின்னம் உடைந்து விட்டது என்று சொன்னான். “ உடைந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு உனது அடுத்த வேலையை பார் என்றார். இதுதான் நல்லுணர்வு என்பது.
மடத்தை பார்வையிட வந்த மக்கள் கூட்டம், துறவியின் கருத்தையோ, அவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வந்த கூட்டம் அல்ல. கட்டணம் வசூலித்த போதும், மடத்திற்க்கு வருமாணம் வந்தாலும், அது நிரந்தரமானதல்ல என்பதும், திடிரென்று வந்த புகழும், வளர்ச்சியும், திடிரெண்று மறையும் என்பதை துறவி உணர்ந்தே இருந்தார். இதுதான் நல்லுணர்வு.
தன்னை உணர்தலும், தனது கடமையை சரியாக செய்தலும், தன்னைச் சுற்றி நடப்பவைகளை உணர்தலுமே நல்லுணர்வு.
நல்லுணர்வை வலியுறுத்தி சில திரைப்படப் பாடல்களும் வந்துள்ளன.
நிணைக்கத் தெரிந்த மனமே உணக்கு மறக்கத் தெரியாதா?
உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள்   இருக்கும்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான் ”   என்ற பாடல்களில் வருகின்ற எல்லாமே நல்லுணர்வு என்னும் கருத்தை வலியுறுத்தி வந்தவைதான்.
யாரோடு இருக்கும் போது நாம் மகிழ்ந்திருக்கின்றோமோ, அவராலே நாம் துன்பத்திற்க்கு உள்ளாவோம்.
யாரை நாம் உயிராக கருதுன்றோமோ? அவராலே நமக்கு உயிர் போகும் அளவுக்கு துன்பம் வரும், என்பதை புரிந்து கொண்டு பழகுவதே நல்லுணர்வு.
இன்று நண்பராக இருப்பவர் நாளை எதிரியாகவும் மாறலாம் என்று புரிந்து கொண்டு பழகுதலே நல்லுணர்வு.


புத்தரின் நாண்கு உண்ணத வாய்மைகளில் நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை அல்லது துன்பத்தை போக்குவதற்க்கு வழியிருக்கின்றது அது தான் எண்வழிப் பாதை, அதை தமிழுக்கு தந்தவர் ஓளவையார். ஔவையாரின் ஆத்திச் சூடி எண்வழி மார்க்தைத்தான் தமிழ் மக்களுக்கு போதிக்கின்றது. அது நல்லுணர்வு என்னும் கருத்தை கீழ்கண்ட பாடல்கள் மூலமாக வலியுறுத்துகின்றது.
நல்லுணர்வு
1.      ஏற்பது இகழ்ச்சி
2.      ஒப்புரவு ஒழுகு
3.      தந்தை தாய் பேண்.
4.      காப்பது விரதம்.
5.      சான்றோரினத்திரு.
6.      தக்கோனெனத்திரு.
7.      நன்மெய் கடை பிடி
8.      தக்கோனெனத்திரு.
9.      நேர்பட ஒழுகு.
10.   பெரியாரைத் துணைக்கொள்
11.   மாற்றானுக்கு இடம் கொடேல்.
12.   மேன்மக்கள் சொற்கேள்.
13.   உத்தமனாய் இரு.


ஆத்திச்சூடியின் உண்மையான பொருளுணர்ந்து அதனை விளக்கியவர் பண்டிதர் அயோத்தி தாசர். மற்றவர்கள் அது பௌத்தம் குறித்து பேசுவதை புரிந்து கொள்ளாமல் விளக்கியுள்ளனர். இரு வேறு வகையான விளக்கங்களையும் உங்களுக்கு கீழே தருகின்றேன். 



ஏற்பது இகழ்ச்சி
nghJ tpsf;fk;:
·        ,we;J tho;tJ ,opthdJ. mjdhy; ahrpf;f $lhJ.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        xUth; nrhy;Yk; thh;j;ijia tprhhpidapd;wp Vw;Wf;nfhs;tJ  ,opitj;jUk;
2. Xg;GuT xOF
 nghJ tpsf;fk;:
·        cyf elj;ijia mwpe;J nfhz;L> mj;NjhL nghUe;JkhW ele;J nfhs;
 mNahj;jpjhrh; tpsf;fk;:
·        kdjpy; mikjpnfhz;L Kfkyh;r;rpNahL tho;jy; Ntz;Lk;
3. je;ij jha; Ngz;
nghJ tpsf;fk;:
·        cd; je;ijiaAk; jhiaAk; mth;fSila KJikf; fhyk; tiu md;Gld; fhg;ghw;W.
mNahj;jpjhrh; tpsf;fk;:
cd; je;ijiaAk; jhiaAk; mth;fSila KJikf; fhyk; tiu md;Gld; fhg;ghw;W
4. fhg;gJ tpujk;.
nghJ tpsf;fk;:
·        jhd; nra;aj; njhlq;fpa jUkj;ij tplhky; nra;tNj tpujkhFk;. (my;yJ)
·        gpw caph;fSf;F Jd;gk; nra;ahky; mtw;iwf; fhg;ghw;WtNj jtk; MFk;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;nyhOf;fq;fis tplhky; fhg;ghNj tpujk;
5. rhd;Nwhhpdj;jpU.
nghJ tpsf;fk;:
o   mwpnthOf;fq;fspy; epiwe;j nghpNahh;fSld; Nrh;e;J ,U.
mNahj;jpjhrh; tpsf;fk;:
         mwpnthOf;fq;fspy; epiwe;j nghpNahh;fSld;
          Nrh;e;J ,U.
6. jf;Nfhnddj;jphp

nghJ tpsf;fk;:
·        nghpNahh;fs; cd;idj; jf;ftd; (Nahf;fpad;> ey;ytd;) vd;W GfOk;gb ele;J nfhs;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        vLj;j nraiy ntw;wpfukhf Kbf;f ty;yth;fSld; Nrh;e;jpU.
7. ed;ik filg;gpb

nghJ tpsf;fk;
·        ey; tpiz nra;jiy vt;tsT ,ilA+W te;jhYk; cWjpahf njhluTk;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;ytd; vd;W nrhy;yj;jFe;j nray;fis tplhky; njhlh;e;J nra;
8. Neh; glnthOF.
nghJ tpsf;fk;:
·        xOf;fq;jtwhky; Neh; topapy; el.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        miztUf;Fk; Neh;ikahdtdha; ele;J nfhs;
9. nghpahiuj; Jizf;nfhs;.
nghJ tpsf;fk;:
·        mwptpNy rpwe;j nghpNahh;fis cdf;Fj; Jizahfg; Ngzpf;nfhs;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        fy;tp> njhopy;><if> mwpT kpFjpahf cs;s Nkd;kf;fis rhh;e;J tho;
10.      khw;whDf;fplq;nfhnly;.
nghJ tpsf;fk;:
·        giftd; cd;id Jd;GWj;jp cd;id nty;tjw;F ,lk; nfhLf;fhNj.

mNahj;jpjhrh; tpsf;fk;:
·        tQ;rfh;fs; ek;ik mDf tha;g;Gfs; juhNj.
11.      Nkd; kf;fs; nrhw;Nfs;.
nghJ tpsf;fk;:
·        ey;nyhOf;fk; cila nghpNahh; nrhy;iyf; Nfl;L el.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;nyhOf;fk; cila nghpNahh; nrhy;iyf; Nfl;L el.
12.      cj;jkdha; ,U.
nghJ tpsf;fk;:
·        cah;e;j Fzq;fs; nfhz;ltdhf thO
mNahj;;jpjhrh; tpsf;fk;:
       midtUk; ey;ytndd;W nrhy;Yk; gb tho;


இத்தகைய உண்மைகளை புரிந்து கொண்டு வாழும் போதுதான் புத்தரின் போதணையான உனக்கு நீயே ஒளி என்ற உண்மை நமக்குப் புரியும். நம்மாலும் அதைப் போல் வாழ இயலும்.

-          நல்லுணர்வு என்னம் தலைப்பில் பௌத்தர்களின் இரண்டாவது பௌர்ணமி குடும்ப விழா, 24.03.13 அன்று வேலுர் மாவட்டம் விருஞ்சிபுரம் கிராமத்தில் தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்புத் ஆசிரியர் திரு. வெங்கடேசன் அவர்களின் இல்லத்தில் நடந்த போது நான் பேசியது. 


Monday, March 18, 2013

தீர்ப்பு எழுதும் நாள்


இந்திய பாராளுமன்ற தேர்தல் மேகம் திரண்டு கொண்டிருப்பதால், தமிழக அரசியல் கூட்டணி மாற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிப்பேன் நான்.
இப்போது அழுகின்ற ஓநாய்கள் எல்லாம் 1,50,000 தமிழர்கள் இறந்தபோது, 1,50,000 கோடி  ஊழலில் திளைத்துக் கொண்டு இருந்தவர்கள் தானே.
இலங்கையின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்களின் கட்சியினரே, உங்கள் மனச்சாட்சி(அப்படி எதுவும் இருக்காது) தொட்டு சொல்லுங்கள். உங்கள் தலைவரின் மரணத்துக்கு புலிகள் மட்டும் காரணம் என்றால். திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
தாலியின் மீது நம்பிக்கையில்லாத மோதிரம் மாற்றிக் கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்காக ஒரு இனத்தின் ஒட்டு மொத்த தாலியும் அறுபட காரணமாக இருக்கின்ற உங்களை இந்த தேசமும், வரலாறும் வாழும் தமிழ் மக்களும் ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள்.
மக்களுக்கு மறதி அதிகம், ஊடகங்களை வைத்து கருத்தை திசை மாற்றி விடலாம், பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று இருமாந்து இருந்தீர்கள் என்றால், ஏமாறப் போவது நீங்கள் தான். ஐந்து ஆண்டுகள் வேண்டுமானால் நீங்கள் ஆட்சியாளராக இருக்கலாம் ஆனால் உங்களை தேர்ந்தெடுக்க நீங்கள் எங்களைத் தேடி எப்போதாவது வர வேண்டும் தானே. அப்போது என் கோபம் வெளிப்படும். மீன்டும் நீ மீண்டெழ முடியாதவாறு.
ஈழத்தில் எம் தமிழினம் புதைக்ப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உங்களின் அரசியல் வாழ்க்கை ஈழ மக்களின் கண்ணீரால் புதைக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது மறக்க வேண்டாம்.

வரும் தேர்தலில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் படம் போட்டு, அதற்க்குப் பக்கத்தில் ” காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி  கட்சியும் வாக்கு கேட்டு என் வீட்டுப் படி ஏறாதீர்கள்” என என் வீட்டின் முன் சுவரொட்டி ஒட்டி வைப்பேன். என் போன்ற இன  உணர்வாளர்களையும் இதையே செய்யச் சொல்லுவேன். இது நடக்கும். உங்களுக்கு(ஈழ தமிழர்களை அழித்தவர்களையும், அழிக்க துணை போனவர்களுக்கும்) தமிழ் மக்கள் தீர்ப்பு எழுதும் நாள் நெருங்கி விட்டது.

Friday, March 15, 2013

விடுதலை போராட்டம்


ஈழ விடுதலை போராட்டம் தமிழ்நாட்டில் புதிய எழுச்சி கண்டுள்ளது. வரவேற்ப்புக்குரியது, எப்பொழுதுமே இத்தகைய திடிரெழுச்சிக்குப் பின் ஒரு அரசியல்  கட்சியிருக்கும், அல்லது போராட்ட புரவலர்கள் தொண்டு நிறுவனங்கள் இருக்கும், அல்லது மத அமைப்புகள் இருக்கும். இங்கே யார் இருக்கிறரார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் போராடும் மாணவர் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள், ஈழத்தில் வாழ்வு அழிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு போரிடும் அதே நேரத்தில் சிங்கள ரானுவத்தால் வாழ்கை அழிக்கப்பட்டு ஏதிலிகளாக இருக்கும் நம் தமிழ்நாட்டு சகோதரனையும் கொஞ்சம் பாருங்கள், ராமேசுவரம் மீனவரை சிங்கள ரானுவம் சுடுவதும், மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்ற செயல்தானே, அதற்க்காகவும் நாம் சேர்ந்து குரல் கொடுப்போம். அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வில்லையென்றால் நாம் அவர்களை தமிழர்களாக எடுத்துக் கொள்ள வில்லையென்றே அர்த்தம்.
21 கடல் மைல் தொலைவிற்க்குள் மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மீன் பிடி தொழிலுக்கு உகந்த்து அல்ல. ஈழத்தின் நில வளத்துக்காக எப்படி ஈழ தமிழரை சிங்கள இரானுவம் கொடுரமாக கொன்று குவித்த்தோ, அதைப் போலவே, இராமேசுவரம் கடல் மீன் வளத்தை சப்பானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்து தரவே, எல்லை தான்டி மீன் பிடித்த்தாய் சொல்லி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கொன்று குவித்திருக்கின்றது சிங்கள இரானுவம்.
இதுவரை சிங்கள இரானுவத்தின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1200 என்று ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. இவர்கள் தமிழர்கள் இல்லையா, இவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா, இவர்களின் கொடுமையான மரணத்திற்க்கு நீதி கேட்டது யார். ?
கடல் தொழிலில் எல்லை தாண்டுவது என்பது சர்வ சாதாரணமாய் நடக்கின்ற ஒன்று. ஆனால் ஈழ எல்லையில் மட்டும் இது அத்து மீறிய செயலாக கருதி கொன்று போடுவது, ஏன் ? ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் லாபம் தரக்குடிய தொழிலாய் குமரிக்கடற்கரை மீன் வளம் இருக்கின்றது. அது அந்த மண்ணின் மைந்தர்களான மீனவர்களுக்கு சேராமல் மொத்த வளத்தையும் கொள்ளையடிக்கவே இந்த கொலை நடக்கின்றது.  இதை கேட்க்க யாரும் இல்லை. இங்கே மீனவர்களின் ஓட்டு விழுக்காடு 2 சதமானம் தான், எனவே அவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் பரிந்து பேசாது.
அவர்களுக்கு எல்லாமே திருச்சபை தான், அவர்களும் இதை பற்றி பேசமாட்டார்கள், ஆண்டவரை வேண்டிக் கொள் என்பதே அவர்களுடைய இறுதி வார்த்தையாக இருக்கும், திருச்சபையை அவர்கள் திருச்சுமை என்று கருத தெரியாமல் உள்ளனர்.
நமது போராட்டம் ஈழ படுகொலைக்கு மட்டும் அல்லாமல், மீனவர் படுகொலக்கும் சேர்த்து இருக்கட்டுமே ஏன் என்றால் இரண்டையும் செய்த்து, செய்வது சிங்கள இரானுவம் தானே?

உண்மை


உண்மை
என்னும் ஒரே
ஆயுதம் தாங்கி
ஏழு ஆண்டுகள்
இடைவிடாது
போராடுகிறேன்…

எதிர்படும்
எல்லோரும்
எதிரிகளாகவே
இருக்கிறார்கள்…

நட்பு
அன்பு
தோழமை
கருணை
எல்லாமே
காற்றில்
கரைந்து போய்
போட்டியாளராகவே
புலப்படுகின்றனர்
கண்ணுக்கும்
கருத்துக்கும்…

என்னை
குறை சொல்லியே
கறைபட்டது
என் சட்டை
கைகளும் தான்
என்கின்றனர்
எதிரிகள்…

சாதிக்காரனில்
துவங்கி
சகோதரனும்.
புன்னகை முகத்தானும்,
புடவை கட்டியவர்களும்,
அதிகாரிகளோடும்
சதியாளர்களும்
எத்தனையோ
ஆயுதங்களோடு
எதிர்கொள்கின்றனர்
என்னை…

போராடுகிறேன்
வாழ்வு
என்னும் போர்களத்தில்
எதிரிகளோடும்
சதிகளோடும்.,,

என் எதிரிகளை
வீழ்த்துவது
என் இலட்சியம் அல்ல..,
வெற்றி பெறுவதும்
என் விருப்பம் அல்ல..,
தற்காத்துக் கொள்ளவே
என் போராட்டம்…

என் எதிரிகளுக்கோ
என்னை அழிப்பது
ஒன்றே குறி…
சில நேரம் முகம்
தெரிகிறது.
பல நேரம்
மறைந்து போய்
வெறுங்காற்றில்
சுழற்றுகிறேன் வாளை..,

அதிகாரத்தின்
சதுரங்க ஆட்டத்தில்
துவங்கியதும்
துண்டாடும்
சிப்பாயல்ல நான்
எளிதில் வெட்டமுடியாத
குதிரையாகவே
இருக்க வேண்டும் நான்..,

இங்கே
பொய்யர்கள்
மத்தியிலிருந்து
மெய்யர்கள்
வெளியேற்றப்படுகிறார்கள்
எனக்கு என்றோ???

போதியின் நிழலில்
இருந்த போது
உனக்கு நீயே ஒளி
என்றது நினைவுக்கு
வந்து…
மாற்றியோசித்தேன்…
உன்னாலே உனக்கு அழிவு…
உண்மையை
கை கொண்டதாலா?

அவர்களின்
சாதுர்யமும் புரியவில்லை
சந்தர்ப வாதமும்
தெரியவில்லை
எனக்கு..,

என்
நியாயமும்
புரியவில்லை
ஞானமும்
தெரியவில்லை
அவர்களுக்கு…

முடிவெடுத்த
போராட்டம்
முற்று பெறாமல்
நீள்கிறது..,

Friday, March 8, 2013

ஏழைகளாக்கப்படும் ஏழைகள்



தமிழ்நாட்டில் தலித் மக்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு நடந்த 15வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.73 இலட்சம் மக்கள் தொகையாகும். பழங்குடிகள் மக்கள் தொகை 4.09 இலட்சம் ஆகும். சதமான கணக்கில் அட்டவணை சாதிகள் 24.26 % அட்டவணை பழங்குடிகள் 1.17 % . இவர்களின் தேசிய சராசரி மாத வருமானம், கிராமங்களில் உள்ள தலித்துகளுக்கு87.83 ரூபாயும், அதுவே மற்ற சாதிகளுக்கு 119.94 ரூபாயும் இதுவே நகர்புறத்தில் வாழ்ந்து வரும் தலித்துகளின் சராசரி மாத வருமானம். 113.50 ரூபாயும் அதே நகர்புறத்தில் வாழ்ந்து வரும்  மற்ற சாதியினரின் மாத வருமான சராசரி170.30 ரூபாயாகவும் உள்ளது.

தாழ்த்ப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கென மத்திய அரசும் மாநில அரசும் 1981 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றன. தற்போது இந்த திட்டம் சிறப்பு உட்கூறு துணை திட்டம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் படி மாநில அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்க்கு என ஒதுக்கீடு செய்யும் தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசும் தொடர்ந்து வழங்கும்.
இந்த தொகையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து அம்மக்களை பொருளாதார வளர்ச்சியடையச் செய்வதே நோக்கம். ஆனால் அரசும் அமைச்சர்களும் அதை முறையாக செய்வதில்லை. ஏனென்றால் மாநில அரசு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யும், தொகை சுமார் 2500 கோடி, அதற்க்கு ஈடாக மத்திய அரசும் 2500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்கின்றது. இவ்வாறு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் 5000 கோடி பணம் எங்கு செல்கின்றது என்பதே எவருக்கும் தெரிவதில்லை.
அரசும் அரசியல்வாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களை ஆளும் சாதியினரின் மனோபாவத்திலேயே பார்க்கின்றனர். ” அதாவது உனக்கு சலுகையை தருகின்றேன் பெற்றுக் கொண்டு செல். ஆனால் உன்னுடைய உரிமைகளை கேட்க்காதே” என்பதுதான் அது. அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றது. சலுகைகள் சிற்சில நபருக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடைக்கின்றது.

இன்று வரை சிறப்பு உட்கூறு துணை நிதி திட்டத்திற்கு வரும் நிதியை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கென தனி நிதியறிக்கை தேவை என்று எந்த தேசிய கட்சிகளும் கோரிக்கை வைத்த்தில்லை. மாநில கட்சிகளும் இது குறித்து யோசித்த்து கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சிகள் எதுவும் எங்களுக்கு வரும் நிதியை எங்களுக்கே பயன்படுத்துங்கள் அதற்க்கு வாய்ப்பாக சிறப்பு உட்கூறு துனை திட்டத்திற்க்கென தனி நிதி அறிக்கை தேவை என வாய்திறக்கவும் திராணியற்று இருக்கின்றார்கள். தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக வென்று சட்டசபைக்குச் செல்லும் 48 சட்ட மன்ற உறுப்பினர்களும் இது குறித்து குரலெழுப்பியதும் இல்லை.

பின் இந்த தொகை எங்குதான் செல்கின்றது. திட்டமில்லாத செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அரசின் ஆடம்பர விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மந்திரிகள் பெயரில் சுவிஸ் வங்கிக்குச் செல்கின்றது. ஆனால் இந்த மக்களுக்கு மட்டும் செல்வதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையானது நோயோடு போராடுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதுமான நிலையில் உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இந்த மக்களுக்கென பல நல்ல திட்டங்களை செய்யலாம்.
·         வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரலாம்.
·         உயர் கல்வி நிறுவனங்களை துவங்கலாம்.
·         பல்கலைகழகங்களை நிறுவலாம்
இந்த மக்கள் தொழில் துவங்க வங்கி கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. தற்போது. தாட்கோ மூலம் வங்கி கடனுக்கு முயற்சிச் செய்தாலும் அவர்கள் தள்ளுபடியினை மட்டுமே வங்கிகளுக்கு அனுப்புவதால் தொழில் துவங்க தேவைப்படும் நிதி பெறுதில் தற்போது பெரும் சிக்கல் நிலவுகின்றது.
ஒரு தேசிய வங்கியினை ஆரம்பிக்க தேவைப்படும் மூலதனம் வெறும் 500 கோடி ரூபாய் ஆகும். சிறப்பு உட்கூறு துனை திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 17 தேசிய வங்கிகளை ஆரம்பிக்கலாம்.
கிராமப்புற வங்கிகளை ஆரம்பிக்க 10 கோடி முதலீடு தேவைபடுகின்றது. சிறப்பு உட்கூறு துனை திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 500 கிராமப்புற வங்கிகளை (Regional Rural Bank) ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
ஏழை எளியவர்களுக்கு கடன் உதவி தரும் நுன்நிதி நிறுவனம் ஆரம்பிக்க 5 கோடி முதலீடு தேவைப்படுகின்றது. அரசு சிறப்பு உட்கூறு துனை திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 1000 நுன் நிதி நிறுவனங்களை (Micro Finance Institutions) ஆரம்பித்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு கடன் உதவி அளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
இவை தவிர சிறப்பு உட்கூறு துனை திட்டத்துக்கென தனி நிதி நிலை அறிக்கை (Budget) இயற்றி அதன் படி செயல்படும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கென உருப்படியான திட்டங்கள் வரும் திட்ட நிதிகளுக்கே அவற்றை செயல்படுத்த முடியும். பணம் எங்கு செல்கின்றது என்பதையும் கண்காணிக்க இயலும். இவைகளை யெல்லாம் தலித் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஏன் கேட்பதில்லை.? இவர்கள் சட்டமன்றத்தில் இதை கேட்க்காமல் வேறுயார் கேட்ப்பார்கள் என்பதையும் ஏன் இவர்கள் உணர்வதில்லை.,?
எப்பொழுதும் ஒரு சமுக மக்கள் இரந்து முன்னேற முடியாது. மாறாக முனைந்து முன்னேற முடியும். அவ்வகையான முனைந்து முன்னேறும் திட்டம் எதுவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களிடமும் இல்லை. தலைவர்களிடமும். இல்லை. இப்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் தலைவர்களுக்கும் தேவைப்படுவது இந்த மக்களை முனைந்து முன்னேற்ற தேவைப்படும் திட்டங்கள் மட்டுமே.  இல்லையெனில் எத்தனை நுற்றாண்டுகள் கடந்தாலும் இவர்கள் ஏழைகளாக்ப்படும் ஏழைகளாத்தான் இருப்பார்கள்.





Wednesday, March 6, 2013

அம்பேத்கர் திரைப்பட அரசியல்


அம்பேத்கர் திரைப்பட அரசியல்


தமிழ்நாட்டில் ஒடுக்கப்ட்ட மக்களின் உரிமைக்காகப் போராடுகின்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள். அம்பேத்கர் திரைப்பட வெளியீட்டுக்காக செய்த வேலை என்ன?
இப்போது குறுந்தகடு வடிவில் கிடைக்கும் திரைப்படம் தேசிய திரைப்பட வளர்ச்சி கவுன்சில் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியிடும் போது 2 நாட்கள் கூட திரையரங்குகளில் ஓட விடாமல் செய்தவர்கள் யார்?
ஆனால் நடிகர்கள் படம் திரையிடும் போது 25 நாட்கள், 50 நாட்கள் படம் ஒட காரணமாக இருக்கும் தலித் சுவைஞர்கள் (ரசிகர்கள்) அம்பேத்கர் படம் ஓடும் திரையரங்குப் பக்கம் கூட எட்டிப்பார்க்க மறுத்தது ஏன்.?
எத்தனை தலித் கட்சிகள் தங்கள் தொண்டர்களிடம் இந்தப் படம் குறித்துப் பேசியிருப்பார்கள்.?
உலகில் அதிக சிலைகள் கொண்ட தலைவனின் வாழ்க்கை திரைப்படமாக வெளியிடும் போது, முதன் முதலில் பார்க்க ஆர்வம் கொண்டது எத்தனை பேர். நடிகர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யும் தலித் இளைஞர்கள் எத்தனை பேர் திரையரங்கில் அம்பேத்கருக்கு கட்அவுட் வைத்திருப்பர். திரைப்படம் பார்க்க வரும் சுவைஞர்களை வரவேற்று எத்தனை அரசியல் கட்சி, இயக்கம், பொறுப்பாளர்கள் சுவரொட்டி ஒட்டியிருந்தனர்.? விடை எனக்குத் தெரிந்து எதுவும் இல்லை. ஏன் என்பதுதான் எனது கேள்வி?
உணர்ந்து கொள்ளுங்கள் தலித் தலைவர்களே, இன்று அம்பேத்கர் திரைப்படத்துக்கு நிகழ்ந்த அத்தனையும் நாளை உங்களுக்கும் நடக்கும். உங்களின் செயல்பாடுகள் மறந்து போகும் அளவுக்குத்தான் நீங்கள் இன்றைய சமுகத்தின் இளைஞர்களுக்கு செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்.
ஒரு உன்னத தலைவரின் பெருமை உங்கள் கட்சி தொண்டனுக்கே தெரியக்கூடாது என்னும் சுய நலம் உங்களை ஆட்டுவிக்கின்றது. இல்லை என்று சொல்லமுடியுமா. உங்களால்.  ஏன் அம்பேத்கரின் திரைப்படத்தை சேரிகள் தோறும் திரையிட்டு காட்டி மக்களிடம் அவருடைய உழைப்பை, அவர் இந்த மக்களை நேசித்தை, சுட்டிக்காட்டி வரலாறு மறந்து போன இந்த தலித் மக்களுக்கு வரலாற்றை அம்பேத்கரின் படத்தின் மூலமாக சொல்ல முடியவில்லை.?
குறுந்தகட்டை வாங்குவதற்க்குகூட எந்த தலித் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை.
தலைவனை மறந்த எந்த சமுகமும், தலைநிமிர்ந்து வாழ்ந்த்து இல்லை. வரலாறு சொல்லும் உண்மை இது. . இன்று தலித் சமுகம் தலைவனை மறந்த சமுகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதையும் படியுங்கள்