Saturday, July 20, 2019

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் புத்தகம் வாங்க

வாங்க விரும்புவோர்,
புத்தகத்தின் விலை ரூ.200, கொரியர் செலவு ரூ.50 இரண்டையும் சேர்த்து கீழே உள்ள வங்கி கணக்கில் செலுத்தினால். புத்தகம் உங்களுக்கு கொரியரில் வந்து சேரும். 
வங்கி விவரம்
Amaresan, Account No: 107801000007712, IOB Bank, Polur Branch, IFSC Code, IOBA0001078
Contact: 9150724997 

#Illiyaraja
#Buddhisim
#MusicandSongs
#Firstresearchbook
#Maamaresan
#Arampublication

சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும் புத்தகத்தை வாங்க


சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும் புத்தகம் வாங்க விரும்புவோர்,
புத்தகத்தின் விலை ரூ.100, கொரியர் செலவு ரூ.50 இரண்டையும் சேர்த்து கீழே உள்ள வங்கி கணக்கில் செலுத்தினால். புத்தகம் உங்களுக்கு கொரியரில் வந்து சேரும்.
வங்கி விவரம்
Amaresan, Account No: 107801000007712, IOB Bank, Polur Branch, IFSC Code, IOBA0001078
Contact: 9150724997

சேரி ரெண்டுபட்டால் புத்தகத்தை வாங்க


சேரி ரெண்டுபட்டால்,
புத்தகத்தின் விலை ரூ.90, கொரியர் செலவு ரூ.50 இரண்டையும் சேர்த்து கீழே உள்ள வங்கி கணக்கில் செலுத்தினால். புத்தகம் உங்களுக்கு கொரியரில் வந்து சேரும்.
வங்கி விவரம்
Amaresan, Account No: 107801000007712, IOB Bank, Polur Branch, IFSC Code, IOBA0001078
Contact: 9150724997

Wednesday, July 17, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 1



புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 1

ரங்கா (1982) தமிழ்த் திரைப்படம்

ரங்கா 1982 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 75 ஆவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் அவருடன் ராதிகா, புன்னகையரசி கே.ஆர். விஜயா, கரத்தே ஆர்.வி.டி. மணி, சில்க் சுமிதா, ரவீந்திரன், தேங்காய் சீனிவாசன் ஏ. ஆர். எஸ் இவர்களுடன் மாஸ்டர் சுரேஷ் மற்றும் பலரும் நடித்துள்ள திரைப்படமாகும். இந்தப் படத்திற்கு இசையமைத்தது, கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் ஆகும். தயாரித்தது சி. தண்டாயுதபாணி, இயக்கியது ஆர். தியாகராஜன். கதை தேவர் பிலிம்சின் கதை இலாகா, வசனம் எழுதியது. திரு. துாயவன்.

பொதுவில் ரங்கா திரைப்படம் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், என அனைத்துத் தரப்பு மக்களும் எப்போது பார்த்தாலும் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையான திரைப்படமாகும். இதனை ஆங்கிலத்தில் சொல்வதென்றால் கல்ட் மூவி என்று சொல்லாம். ரங்கா திரைப்படத்திற்கு தனிக்கை குழு, வயது வந்தோர்களுக்கான திரைப்படம் என சான்றிதழ் அளித்திருந்தாலும், அந்தத் திரைப்படம் குழந்தைகளையும், பெண்களையும் மிக கவர்ந்து அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்யததே அதன் வெற்றிக்கான காரணம்.



கதைச் சுருக்கம் :

       ரங்கநாதன் என்கின்ற ரங்கா என்னும் இளைஞன் ( ரஜினி) வேலைத்தேடி சென்னைக்கு வருகின்றார், அவரும் சென்னையில் உள்ள சிறு சிறு திருட்டுகளைச் செய்து வரும் ராஜீவும் ( கரத்தே மணி) ஒரு இரவு ராஜீவின் வீட்டில் தங்குகின்றார், அப்போது இரவில் திருடனாய் இருப்பதன் காரணத்தை ராஜீவும், நல்லவனாய் வாழ்வதில் கிடைக்கும் மன அமைதியை ரங்காவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்கின்றனர், விடிந்ததும், ராஜீவின் பேச்சைக் கேட்டு ரங்கா திருடனாகவும், ரங்காவின் பேச்சைக் கேட்டு ராஜீ நல்லவராகவும் மாறி இருப்பார்கள். இதில் கூடுதலாக, ரங்கா தனது முதல் திருட்டை ராஜீவின் வீட்டிலேயே துவங்கியிருப்பார். அதற்குப் பின் அவர் பணத்துக்காக, அடிதடி, திருட்டு. ஆள்கடத்தல் என எதையும் செய்யும் நபராக மாறியிருப்பார்.
      
சில ஆண்டுகள் கழித்து, ரங்கா, ஒரு வீட்டில் உள்ள குழந்தையை கடத்தி வந்தால், தனது சிறு வயதில் தொலைந்து போன அக்கா (கே.ஆர். விஜயா) எங்கிருக்கின்றார் என சொல்வதாக கூறி ரங்காவை குழந்தைக் கடத்தலுக்கு சம்மதிக்க வைக்கின்றார் ரவி ( ரவீந்திரன்) முதன் முறை குழந்தை கடத்தலுக்கு  முயற்சிக்கும் பொழுது, அந்த வீட்டில் அந்தக் குழந்தைக்கு ( மாஸ்டர். சுரேஷ்) காவலாக இருப்பது ராஜீ என அறிகின்றார். எனவே ராஜீவிடம் நண்பராகப் பழகி, தனது அக்காவின் வீடு என அறியாமலேயே அக்காவின் வீட்டிலேயே ராஜீவின் மூலமாக வேலைக்குச் சேர்ந்து, தனது அக்காவின் குழந்தையை கடத்த முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகின்றார்.

       இறுதியில் தான் கடத்தியது தனது சொத்த  அக்காவின் குழந்தையைத்தான் என்றும், அந்த குழந்தையைக் கொன்று தனது அக்காவின் சொத்துக்களை அடைய ரவீ திட்டமிட்டிருப்தையும், தான் அதற்கு பலியாக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்து தனது காதலி ( ராதிகா) மற்றும் தேங்காய் சீனிவாசன் மற்றும் ராஜீ ஆகியவர்களின் உதவியோடு ரவியின் திட்டத்தை முறியடித்து, தனது அக்காவுக்கும் உண்மையை உணர்த்தி அக்காவோடு இனைவதே ரங்கா திரைப்படத்தின் கதை சுருக்கமாகும்.

 ரங்கா திரைப்படத்திலுள்ள புத்தச் சமயக் கருத்தியல்:

       திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ரங்கா, ராஜீவின் வீட்டில் தங்கும் அந்த  ஒரே இரவும், அவர்களுக்குள் நிகழ்கின்ற உரையாடலும் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சிகள். அந்த காட்சியில் வரும் வசனங்கள் புத்தச் சமய கருத்தியலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட  மிக முக்கியமான வசனங்களாகும்.  இந்த படத்தின் ஒரு வரிச் செய்தியான “ திருடாதே” முதல் கொண்டு “ மது அருந்தாதே” என்பது வரை அனைத்தும் புத்தச் சமயக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டடது ஆகும்.

       மேலும் அந்த காட்சியில் இடம்பெறும் வசனங்கள் மது அருந்துவோரின் எண்ணிக்கை 92% விழுக்காட்டிற்க்கும் மேலாக உள்ள இன்றைய தமிழகச்சூழலுக்கும் மிகப் பொருந்தும் வகையில் இருப்பதும் அந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு. அதற்கு முன்னதாக புத்தர் போதித்த 5 ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும் என்பதால் கீழே 5 ஒழுக்கக் கோட்பாடுகளைப் பட்டியலிடுகின்றேன்.

       ஒரு மனிதன் கீழ் கண்ட செயல்களை தனது வாழ்கையில் தவிர்த்து வாழ்வதே 5 ஒழுக்க கோட்பாடுகள். இந்த செயல்களை தவிர்த்து வாழும் மனிதன் துன்பமில்லாமல் மன நிறைவுடன் வாழ்வான் என்பது பகவான் புத்தரின் போதனையாகும். அடைப்புக் குறிக்குள் இருப்பது பாலி மொழிச் சொல். இதைத்தான் புத்தச் சமயத்தினர் தங்கள் வழிபாட்டின் போது பயன்படுத்துவதால் புரிதலுக்காக இனைத்துள்ளேன்.

1.   கொல்லாமை  - ( சிக்காபதம்)
2.   திருடாமை     - ( அதின்னதானா)
3.   பிறன் மனை விழையாமை – ( காமேசு மிக்காரா)
4.   பொய் சொல்லாமை – (மூசாவாதா)
5.   மது அருந்தாமை -    (மஜப்பமாடத்தானா)

பொதுவில் இந்த 5 ஒழுக்க கோட்பாட்டில், சமுகத்தில் மிக அரிதாக நடைபெறுகின்ற உயிர்கொலை என்னும் கருத்தை முதலில் வைத்து, மிக இயல்பாக, வெகு மக்களால் விரும்பி செய்யப்படுகின்ற “ மனதினை மயக்கும் மது குடி வெறியை” 5வதாக ஏன் புத்தர் சொன்னார் என சிந்திக்க வேண்டும்.

   ஏன் என்றால், மது அருந்தும் ஒருவன் நிச்சயம், மதுவினால் தனது செல்வத்தை இழந்திருப்பான், எனவே மீண்டும் குடிப்பதற்காக வீட்டிலோ, உறவிணர்களிடத்தோ, சமூகத்திலோ நிச்சயம் பொய் சொல்லுவான் ( மூசாவாதா) மேலும் மது அருந்திய ஒருவனுக்கு தனது கண்ணில் படுகின்ற பெண்கள் அனைவருமே அழகானவர்களாகவும், தன்னை உடலுறவுக்கு அழைப்பதாகவுமே தோன்றுவதால் ஆண்களாக இருந்தால், பிறரின் மனைவியின் மீதும் மோகம் கொல்வதும், பெண்களாக இருந்தால் பிறரின் கணவன் மீது மோகம் கொல்வதும் சாதாரணமாக நடக்கும் ஒன்றாகவே உள்ளது.

   உதாரணத்துக்குச் சொல்வதானால், இன்றைக்குச் சமுகத்தில் நடைபெறுகின்ற பாலியல் சீர்கேடுகள், ஒழுக்க பிறழ்வுகள், வன்புனர்வுகள், பாலியல் கொலைகள் இவை அனைத்தையும் செய்யும் நபர், அதைச் செய்யும் முன்போ, அந்த செயலைச் செய்யும் போதோ நிச்சயம் மது அருந்தியவராகவே இருப்பார். இதனை பத்திரிகைச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

   மது அருந்தியதால் செல்வத்தை இழந்த பின் நிச்சயமாக திருடுகின்றான், (அதின்னதானா) அதற்குப் பின் மது அருந்துவதற்காகவும், அதற்குத் தடையாக இருக்கும் நபர்களை கொலை செய்கின்றான் ( சிக்காபதம்) இந்தப் புரிதலின் காரணமாகவே 5 ஒழுக்கக் கோட்பாட்டில், சமூகத்தில் அரிதாக நடைபெறுகின்ற கொலையை முதலிலும், திருட்டுவை இரண்டாம் இடத்திலும், காமத்தை 3 ஆம் இடத்திலும் பொய் பேசுவதை நான்காம் நிலையிலும், இவை எல்லாவற்றிக்கும் அடித்தளமாக உள்ள மது அருந்துதலை 5ஆம் நிலையிலும் வைத்து நமக்கு 5 ஒழுக்க நெறியை போதித்தார் பகவான் புத்தர்.

   இந்த உண்மை ராஜீவுக்கு, ரங்காவின் வழியாக ஒரு குட்டிக் கதையாக வெளிப்படுத்தப்படுகின்றது திரைப்படத்தில், அதாவது ஒருவனிடம் வந்து ஒருவன் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான், கூடாரத்திலுள்ள பொருளைத் திருட வேண்டும், குழந்தையைக் கொல்ல வேண்டும், பொய் சொல்ல வேண்டும், அழகானப் பெண்னைப் புனர வேண்டும், அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும், இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் உன்னை விட்டுவிடுவேன், இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அந்த ஒருவன்,

   இவ்வாறாக யோசிக்கின்றான், குழந்தையைக் கொல்வது பாவம், கூடாரத்திலுள்ள பொருளைத் திருடுவது கேவலம், பெண்னை புனர்வது ஒழுக்கமில்லாதச் செயல், எதற்காக பொய் பேச வேண்டும், மது அருந்துவதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மொத்தப் பாதிப்பும் நமக்குத்தானே, சமூகத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என நினைத்து மது அருந்துகின்றான், மது அருந்தியபின், போதையில், அந்தப் பெண்னைப் புனர்கின்றாரன் ( வன்புனர்வு) அதற்குத் தடையாக உள்ள குழந்தையைக் கொல்லுகின்றான், பின் கூடாரத்திலுள்ள பொருளைத் திருடுகின்றான், இதை எதையுமே தான் செய்யவில்லை என்று பொய் சத்தியமும் செய்கின்றான்.

   தனக்கு மட்டுமே பாதிப்பு, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என செய்யும் செயலான மது அருந்துதலால், தானும் பாதித்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பாதித்து சமூகத்துக்கும் பாதிப்பு உண்டாகின்றது என்பதே ராஜீவுக்கு ரங்கா சொல்லும் கதையின் நீதி.  அது புத்தச் சமயக் கோட்பாடான 5 ஒழுக்க நெறியினைச் உணர்த்துவதாகும்.

   இந்த 5 ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கதைதான் ரங்கா திரைப்படத்தின் கதையாகும்….

-    









Saturday, March 16, 2019

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்


இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்
1. ஜனனி ஜனனி
2. ஆயிரம் தாமரை மொட்டுகளே
3. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
4. என்னுள்ளில் எங்கோ.ஏங்கும்
5. என்ன பாட்டு பாட
6. தும்பி வா
7. நதியில் ஆடும் பூவனம்
8. எனது உடலும் உயிரும் பொருளும்
ஆகிய எட்டு பாடல்களின் இசையும். இளையராஜா எழுதிய பாடல்களின் பேசு
பொருளும் எவ்வாறு புத்தசமயக் கோட்பாடுகளை நினைவுபடுத்துகின்றது என்பதுதான் புத்தகத்தின் மைய பொருள். இளையராஜா. அல்ல
மேலும் ஒரு இசை அமைப்பாளரின் இசை கோவையை ஆய்வு செய்த வகையில் தமிழுக்கும் இந்தியாவுக்குமே இது முதல் புத்தகம். இதுதான் இந்த  புத்தகத்தின் சிறப்பு.
இது முதல் பாகம்.. இன்னும் நான்கு பாகங்கள் இருக்கு.
புத்தகத்தை வாங்க புத்தகத்தின் விலை ரூபாய். 200/
அஞ்சல் செலவு 50/
இரண்டையும் சேர்த்து கீழேயுள்ள வங்கி கணக்கில் செலுத்த கோருகிறேன். நன்றி
Amaresan
A/C NO: 107801000007712
IOB Bank
Polur branch
IFSC CODE: IOBA0001078
MICR: 606020007
Cell:9150724997 மற்றும் 7519413542

Wednesday, March 6, 2019

புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்


புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்


  1. அபயா
  2. அமிதா
  3. அபிதா
  4. அஞ்சனா
  5. அசிந்தா
  6. அனோமா
  7. அரிஷ்மதி
  8. அபிமுகி
  9. அவித்யா
  10. அம்பிகா
  11. அம்பாலி
  12. அஜீவா
  13. அபிதானா
  14. கச்சனா
  15. பமிதா
  16. மகாமாயா
  17. சுலக்ஷணா
  18. மகா பிரஜாபதி
  19. லும்பினி
  20. பூர்ணிமா
  21. வைசாகா
  22. கௌதமி
  23. காருவாகி
  24. சங்கமித்ரா
  25. மணிமேகலை
  26. மாதவி
  27. கோசலா
  28. கந்தகா
  29. மகதா
  30. சகி
  31. பத்மா
  32. வைசாலி
  33. சுஜாதா
  34. புன்னா
  35. நிரஞ்சனா
  36. சுவர்ண பிரபாகா
  37. சுவர்ண பிரபா
  38. தம்மா
  39. சாங்கியா
  40. சம்போதி
  41. முதித்தா
  42. விமலா
  43. நந்தா
  44. பிரபாகரி
  45. சுதிர் ஜெயா
  46. நிதனா
  47. சாதுமதி
  48. தர்ம மேகா
  49. தம்ம மேகா
  50. பரமித்தா
  51. ஜாதகா
  52. தாரா
  53. தாரா தேவி
  54. பாவனா
  55. மெத்தா
  56. மைத்திரி
  57. விசாகா
  58. புன்ன வதனா
  59. திரி பீடகா
  60. சுக்தா
  61. தீகா
  62. மஜ்ஜீமா
  63. சம்யுக்தா
  64. தேரா
  65. தேரி
  66. புத்த வம்சா
  67. விசுத்தா
  68. விலாசினி
  69. மதுரத்த விலாசினி
  70. பரமத்த தீபினி
  71. தீபினி
  72. குசலதம்மா
  73. சிந்தாமணி
  74. கதிரவானி தாரா
  75. வசிய தாரா
  76. அரிய தாரா 
  77. மகத்தரி தாரா
  78. வரத தாரா 
  79. துர்காத்தரனி தாரா
  80. தண்டத் தாரா
  81. ஜங்குலி
  82. பரனாஸ்பரி
  83. அஸ்தாம் அபையா
  84. மிருத்துவ வஞ்சன தாரா
  85. சத்ருஜ்ஜா சித்த தாரா
  86. ஜாங்குரி
  87. குருகுலா
  88. விஷ்வாத்மா
  89. சதபுஜ சித்த தாரா
  90. வஜ்ஜிர தாரா
  91. பிர்குட்டி
  92. பிரனாஸ்பரி
  93. ஜங்குலி
  94. ஈஜித்தா
  95. மகா சீனத் தாரா
  96. சாயா
  97. மாயா
  98. நாராயணி
  99. பிரம்மயானி
  100. பைரவி
  101. மகேஸ்வரி
  102. ருத்ராயணி
  103. வைசாலி
  104. திரிபுரா
  105. உக்ரதாரா
  106. சார்சிகா
  107. தாரணி
  108. அம்பிகா குமாரி
  109. பாகபலி
  110. நிலா
  111. கமலா
  112. சாந்தி
  113. காந்தி
  114. காதம்பரி
  115. சமுண்டா
  116. சந்தரகாந்த
  117. மாதவி
  118. காசிகேஸ்வரி
  119. அனலா
  120. ரூபா
  121. வராகி
  122. நாகரி
  123. கேசரி
  124. பூஜாரி
  125. பேதலி
  126. கனஞ்சிய பைரவி
  127. சங்கா
  128. ருத்ரகாரி
  129. கலாவதி
  130. கங்கலி
  131. பூகுச்சாய்
  132. பாலி
  133. தோகனி
  134. துவராணி
  135. சோகினி
  136. சங்கட தாரிணி
  137. கொற்றவை
  138. அனுச்சாயா
  139. சமுகா
  140. கீச்சமுகி சமுகா
  141. உலகா
  142. சமசீலா
  143. முத்தா
  144. தாக்கினி
  145. கோபாலி
  146. மோகினி
  147. காம சேனா
  148. கபாலி
  149. உத்ரயாணி
  150. திரிலோகபயபிணி
  151. திரிலோச்சனா
  152. நிமரி
  153. தாகேஸ்வரி
  154. ராமயாணி
  155. ஆண்டி சக்தி
  156. பால சத்திரியாயினி
  157. பிராமணி
  158. தாரணி
  159. மாதங்கி
  160. மெய்மொழி
  161. சோலைக்கொடி
  162. சோலையரசி
  163. சோலைமதி  
  164. சோலையரசி
  165. முத்துகுமாரி
  166. மனோண்மனி
  167. மணி மணிகா 
  168. மணிக்கதிர் 
  169. மணிக்கொடி 
  170. மணிச்சுடர் 
  171. மணிப்பவளம் 
  172. மணிமகள் 
  173. மணிமலர் 
  174. மணிமாலா 
  175. மணிமுகில் l 
  176. மணிமேகலை 
  177. மணிமொழி
  178. நாகதேவி 
  179. நாகமணி 
  180. நாகமதி 
  181. நாகம்மாள் 
  182. நாகம்மை 
  183. நாகவல்லி 
  184. நாச்சி நாச்சியார் 
  185. நாதவேணி 
  186. நாமகள் 
  187. நாயகி 
  188. நாவரசி 
  189. நாவுக்கரசி
  190. தாமரை
  191. சிந்தனைச்செல்வி 
  192. சிந்தனைமதி 
  193. சிந்தனைமுகில் 
  194. சிந்தாமணி 
  195. சிந்திசை
  196. சந்திரவதி 
  197. சகுண் 
  198. சக்தி 
  199. சங்கமித்ரா 
  200. சங்கமித்ரை 
  201. சங்கரி 
  202. சங்கவி 
  203. சங்கவை 
  204. சங்காரம் 
  205. சங்கு 
  206. சங்குக்கொடி 
  207. சங்குப்பூ 
  208. சங்குப்பூவழகி 
  209. சங்குமணி 
  210. சங்குமதி 
  211. சங்குமாலை 
  212. சங்கெழில் 
  213. சங்கொலி
  214. கமலராணி 
  215. கமலா 
  216. கமலிகா 
  217. கமலினி 
  218. கமல் 
  219. கயற்கண்ணி
  220. ஞானமுருகேஸ்வரி 
  221. ஞானாஞ்சலி 
  222. ஞானமுத்துசெல்வி 
  223. ஞானம்மாள் 
  224. ஞானம் 
  225. ஞானேஸ்வரி 
  226. ஞானஸ்ரீ 
  227. ஞானகுமாரி 
  228. ஞானச்செல்வி

Tuesday, March 5, 2019

புத்தச் சமயப் பெயர்கள் - ஆண் குழந்தைகள்


  1. அசோகன்
  2. அங்குலிமாலா
  3. அகத்தியன்
  4. அகிம்சகன்
  5. அஜபலா
  6. அசாஜி
  7. அஜாதசத்ரு
  8. அனத்தா
  9. அனிச்சா
  10. அகாலா
  11. அஷ்வகோஷ்
  12. அஞ்சான்
  13. அசித்தா
  14. அனிருத்தா
  15. அபயன்
  16. அலாரகாலம்   
  17. அகரன்
  18. அகரமுதல்வன்
  19. அகவழகன்
  20. அகமுடையான்
  21. அஞ்ஞான்
  22. அஞ்ஞா நெஞ்சன்
  23. அடியார்கடியான்
  24. அடியார்கு நல்லான்
  25. அடியார்கு ஆசான்
  26. அண்ணல்
  27. அத்தன்
  28. அத்தியப்பன்
  29. அதியன்
  30. அதியமான்
  31. அதிகுணன்
  32. அரங்கன்
  33. அரங்கரசன்
  34. அரங்கமணி
  35. அரசன்
  36.  அரசமலை
  37. அரசமணி
  38. அரசவேந்தன்
  39. அரசிளங்கோ
  40. அரசு
  41. அரகன்
  42. அருங்கல நாயகன்
  43. அருங்கலமணி
  44. அருங்கல நம்பி
  45. அருங்கல முத்து
  46. அருணன்
  47. அருண்மொழி
  48. அருண்மொழி வேந்தன்
  49. அருண்மொழிச் செல்வன்
  50. அருளி
  51. அருளரசு
  52. அருளரசன்
  53. அருளப்பன்
  54. அருளாளன்
  55. அருளாளி
  56. அருளுடைநம்பி
  57. அருள் தரும் பெருமாள்
  58. அருள் நாயகன்
  59. அருள் வடிவேல்
  60. அருள் வடிவேலன்
  61. அருள் நம்பி 
  62. அருள் நிலவன்
  63. அருள் மணி
  64. அருட்சுடர்
  65. அருட்செல்வன்
  66. அருட்செல்வம்
  67. அருட்குமரன்
  68. அருட்குன்றன்
  69. அழகன்
  70. அறம்
  71. அறன்
  72. அறம் வளர்த்தான்
  73. அறம் வளர்த்த நம்பி
  74. அறம் வளர்த்த நாயகன்
  75. அறம் வளரத்த தம்பி
  76. அறம் காத்தான்
  77. அறம் காத்த நம்பி
  78. அறம் காத்தமுத்து
  79. அறம் காத்தவேல்
  80. அறவாழி
  81. அறவாழியன்
  82. அறவாணன்
  83. அறிவன்
  84. அறிவரசு
  85. அறிவுமதி
  86. அறிவொளி
  87. அறிவுக்கனி
  88. அறிவுமுத்து
  89. அறிவுக்கரசு
  90. அறிவுச்சுடர்
  91. அறிவுக் கொழுந்து
  92. அறிவுடையான்
  93. அறிவுடையரசு
  94. அறிவுச் செல்வம்
  95. அறிவு நம்பி
  96. அறிவுமணி
  97. அறிவழகன்
  98. அறுபடையோன்
  99. அன்புமணி
  100. ஆனந்தா
  101. ஆனந்தன்
  102. ஆழியன்
  103. ஆழி குமரன்
  104. ஆழி புத்தன்
  105. ஆழி சூழ் உலகோன்
  106. ஆய்வகன்
  107. ஆண்டான்
  108. ஆசான்
  109. ஆனையரசு
  110. ஆனையரசன்
  111. ஆனையன்
  112. ஆனைமுத்து
  113. ஆனைமணி
  114. ஆத்திச்சூடி
  115. ஆத்திச்சூடியான்
  116. ஆத்தியன்
  117. ஆத்தியப்பன்
  118. ஆத்திமுத்து
  119. ஆத்திமணி
  120. ஆதி முத்து
  121. ஆதி மணி
  122. ஆதி பகவன்
  123. ஆதி புத்தன்
  124. இனியன்
  125. இன்பன்
  126. இமையன்
  127. இமையவன்
  128. இந்திரன்

  129. சித்தார்த்தன்
  130. சித்தார்த்தா
  131. கௌதம்
  132. கௌதமன்
  133. சுத்தோதனன்
  134. கபிலன்
  135. தொல் கபிலன்
  136. ஜெயசேனன்
  137. சினாகு
  138. போதிசத்வன்
  139. போதி தத்தா
  140. போதிசத்வா
  141. சுமேதா
  142. புத்தன்
  143. புன்னகை புத்தன்
  144. பூங்குயில் புத்தன்
  145. போதி மர புத்தன்
  146. வைசாகன்
  147. நந்தா
  148. நந்தன்
  149. மகாநமா
  150. பரத்வாஜ்
  151. தண்டபானி
  152. சன்னா
  153. ராகுல்
  154. ராகுலன்
  155. உதயன்
  156. மகேந்திரன்
  157. பிம்பிசாரன்
  158. கோலியன்
  159. சாக்கியன்
  160. கந்தகன்
  161. மகானமா
  162. சாக்கிய முனி
  163. சாக்கிய சிங்கம்
  164. ராஜகிரகன்
  165. மகதன்
  166. ரைவத்தன்
  167. பிருகு
  168. சேனானி
  169. காலா
  170. கலிங்கன்
  171. உருவேலன்
  172. நாகா
  173. பிரபாகரன்
  174. துரங்கமா
  175. போதிதர்மன்
  176. இளம்போதி
  177. கொண்டன்னா
  178. பதய்யா
  179. வேப்பா
  180. மகாநமா
  181. ராஜாயதனா
  182. தபசு
  183. பாலுக்கா
  184. தேவதத்தன்
  185. சாரநாத்
  186. யச்சன்
  187. கோசாம்பி
  188. ஏகநலா
  189. ஆலாவகன்
  190. சுபத்தன்
  191. திரிபீடகன்
  192. சாத்தன்
  193. சீத்தலை சாத்தன்
  194. அறவாணன்
  195. அறவானடிகள்
  196. நாகுதத்தன்
  197. புத்த தத்தன் 
  198. புத்தகோஷா
  199. தம்மபாலா
  200. தினகா
  201. போதிதம்மா
  202. தம்மபாலன்
  203. தம்மகீர்த்தி
  204. போதிசேனா
  205. புத்த மித்ரா
  206. அனுருத்தா
  207. பரமார்த்த குரு
  208. அனாகரிகா
  209. சுமங்கலன்
  210. ததாகதர்
  211. அருகன்
  212. தர்மகாயன்
  213. அமிதாப புத்தன்
  214. அமிதாபன்
  215. இந்திரன்
  216. இந்திரன் மகன்
  217. இந்திரன் மைந்தன்
  218. எண்குனன்
  219. நிச்சிந்தன்
  220. சாந்தன்
  221. வாமன்
  222. முனைவன்
  223. போதன்
  224. பூரணன்
  225. விமலன்
  226. விதசோகன்
  227. முத்தன்
  228. முக்குடையோன்
  229. கொல்லா வேதன்
  230. நித்தன்
  231. நின்னாமன்
  232. அத்தன்
  233. ஆதி
  234. ஆதன்
  235. சாத்தன்
  236. அறவாழி வேந்தன்
  237. அறவாழி அன்னல்
  238. புனிதன்
  239. மாமுனி
  240. சித்தன்
  241. தருமராசன்
  242. முனிந்திரன்
  243. சினன்
  244. ததாகன்
  245. ஆதிதேவன்
  246. சாக்கியன்
  247. சைனன்
  248. வினாயகன்
  249. சினந்தவிர்த்தோன்
  250. பகை தவிர்த்தோன்
  251. அரசு நிழலிருந்தோன்
  252. வரன்
  253. பகவன்
  254. செல்வன் 


Wednesday, November 28, 2018

இளையராஜா வின்.இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்


இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்
1. ஜனனி ஜனனி
2. ஆயிரம் தாமரை மொட்டுகளே
3. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
4. என்னுள்ளில் எங்கோ.ஏங்கும்
5. என்ன பாட்டு பாட
6. தும்பி வா
7. நதியில் ஆடும் பூவனம்
8. எனது உடலும் உயிரும் பொருளும்
ஆகிய எட்டு பாடல்களின் இசையும். இளையராஜா எழுதிய பாடல்களின் பேசு
பொருளும் எவ்வாறு புத்தசமயக் கோட்பாடுகளை நினைவுபடுத்துகின்றது என்பதுதான் புத்தகத்தின் மைய பொருள். இளையராஜா. அல்ல
மேலும் ஒரு இசை அமைப்பாளரின் இசை கோவையை ஆய்வு செய்த வகையில் தமிழுக்கும் இந்தியாவுக்குமே இது முதல் புத்தகம். இதுதான் இந்த  புத்தகத்தின் சிறப்பு.
இது முதல் பாகம்.. இன்னும் நான்கு பாகங்கள் இருக்கு.
புத்தகத்தை வாங்க புத்தகத்தின் விலை ரூபாய். 200/
அஞ்சல் செலவு 50/
இரண்டையும் சேர்த்து கீழேயுள்ள வங்கி கணக்கில் செலுத்த கோருகிறேன். நன்றி
Amaresan
A/C NO: 107801000007712
IOB Bank
Polur branch
IFSC CODE: IOBA0001078
MICR: 606020007
Cell:9150724997 மற்றும் 7519413542

Wednesday, September 5, 2018

நூல் அறிமுகம் -1

இளையராஜாவின் இசை – பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள் :

நூல் அறிமுகம்
இளையராஜாவின் இசை – பாடல்களில்
புத்த சமயக் கோட்பாடுகள் :
நண்பர் மா.அமரேசன், ஆரணியைச் சேர்ந்தவர். புத்தகயாவில் பணியாற்றுகிறார்.
காக்கைச் சிறகினிலே இதழில் ‘ ஞானபூமி புத்தகயா’ என்னும் தொடரை எழுதி வருகிறார்.
‘அறம்‘ வெளியீடாக வெளிவந்திருக்கும், ‘இளையராஜாவின் இசை – பாடல்களில், புத்தசமயக் கோட்பாடுகள் ‘ என்பது அவருடைய 11-வது நூல்.
அவர் புத்தகயாவில் பணியாற்றுவதால், புத்தசமயக் கோட்பாடுகள் பற்றி அதிக அளவில் அறிந்துவைத்திருக்கிறார் என்பது நமக்கு வியப்பேற்படுத்தவில்லை.
ஆனாலும், மற்றவர்கள் தொடத் தயங்கும் ஒரு தலைப்பை, தெரிவு செய்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் அவரது முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.
காரணம், ஒருபுறம் இசைஞானி இளயராஜாவின் இசை; இன்னொரு புறம் புத்தசமயக் கோட்பாடுகள். இரண்டுமே ஓங்கி உயர்ந்த இரண்டு சிகரங்கள்; அந்த சிகரங்களின் உச்சியை அடைவது மிகவும் சிரமமான பணி. ஆனாலும், நண்பர் மா.அமரேசன் அதனை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.
அந்த முயற்சியில் அவர் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை, இளையராஜாவின் இசையையும், புத்த சமயக் கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றுணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும்.
என்னுடைய வாசிப்பில், எனக்குத் தோன்றும் கருத்துகளில் ஒன்றிரண்டை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இளையராஜா இசையமைத்த, ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுகளே, பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே, என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம், என்ன பாட்டு பாட, தும்பி வா, நதியில் ஆடும் பூவனம், எனது உடலும் மனமும் ஆகிய ஏழு பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த பாடல்களோடு சம்பந்தப்பட்ட புத்தசமயக் கோட்பாடுகளை விளக்கிச் செல்கிறார்.
புத்த மதத்தை, இந்து மதம் அழித்தாலும், மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை என்கிறார்.
/ புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனதிலிருந்து இந்து மதத்தினால் அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இணைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகணங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இணைத்துக் கொண்டது./
முருகன் வழிபாடு என்பதே, குழந்தை புத்தர்தான் என்றும், பழனி முருகனின் காதில் இருக்கும் பெரிய ஓட்டையே அதற்கு சான்று என்றும் அவதானிக்கிறார்.
“பட்டியலின மக்களின் பவுத்த கூறுகளை நாம் தனியாகத் தேட முடியாது. ஏனெனில், அவர்களின் அகவாழ்வும், புறவாழ்வும் பவுத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது”
“அதைப்போலவே இசைஞானியின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியவனவற்றை இணைத்தலுமே பவுத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பவுத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.”
“ பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பவுத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பவுத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன? என்று சொல்லும் அமரேசன், இசைஞானியின் இசையில் புத்தமதக்கூறுகள் இயல்பாகவே அமைந்திருப்பதற்கும் அதுவே காரணம் என்கிறார்.
கபட புத்தரைப்பற்றிச் சொல்லும் போது, “ பவுத்தத்தின் உயிர்த் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலைக் கைவிட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டு, பவுத்த கருத்துகளுக்கு ‘மண்டூகக் காரிகையில் ‘ இந்துமத நோக்கில் உரை எழுதிய காரணத்தாலேயே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார் .அதிலிருந்து வந்ததுதான் ‘கபடதாரி’ , ‘கபட நாடகம்’ என்னும் சொல்வழக்குகள்” என்று அவர் கூறுவது, புதிய செய்தியாக உள்ளது !
ஜனவரி 2017 ‘ காக்கைச் சிறகினிலே’ இதழில், ‘தைப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும்’ என்னும் எனது கட்டுரை வெளிவந்தது. அந்த கட்டுரையில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“ பழங்காலத் தமிழகத்தில், போகி அன்று, ஒரு சில கிராமங்களில் ஒப்பாரி வைத்து அழும் வழக்கம் இருந்திருக்கிறது. அது பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்த போது , அது புத்தர் இறந்த தினம் என்கிற வியக்க வைக்கும் செய்தி தெரிய வந்திருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் புத்தமும், சமணமும் செல்வாக்கு செலுத்திய காலத்தில், இந்த பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.. சைவம் தலையெடுத்து, புத்தமும், சமணமும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கம் மறைந்திருக்கலாம். கூடவே, புத்தர் மறைவு நாள் பற்றிய செய்தியும் காற்றில் கரைந்து போயிருக்கும். “ (ஜனவரி 2017 ‘காக்கை’)
ஆக, பழங்காலத் தமிழகத்தில், பவுத்தம் பரவி, செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும், மா.அமரேசன் குறிப்பிடும் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன்.
பழங்காலத் தமிழகத்திலேயே, பட்டியலினம் உருவாக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறுவது, ஒன்று.
இரண்டாவது, பட்டியலின மக்களின் வாழ்வியலில் மட்டுமே புத்தசமயக் கூறுகள் இருப்பதாக அவர் நிறுவ முயல்வது.. அதுதான் உண்மை என்றால், அது எப்படி நேர்ந்தது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ என்னும் பாடலைப் பற்றிய கட்டுரையில், ‘அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும் வரலாறு சொல்கின்றது “ என்கிறார். இதனை, ‘வரலாறு’ என்று குறிப்பிடுவது, அறிவியல் அடிப்படையில் நெருடலை ஏற்படுத்துகிறது.
“ திருவண்ணாமலை உலகின் மிகப்பழமையான மலை. அதே போல் உலகின் முதன்முதலில் குளிர்ந்த அல்லது உயிரிழந்த எரிமலை என்பதை புத்த சமயத்தவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்” என்பது அறிவியல் அடிப்படையில் ஏற்கக் கூடியதாக இல்லை.
இந்துமதச் சார்பு உள்ளவர்கள்தான், இதுவரை இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லி வந்தார்கள். இப்போது, மா. அமரேசனும், புத்தசமய அடிப்படையில் அதே கருத்தை முன்வைக்கிறார்.
ஆக, மதச்சார்பு உள்ளவர்கள் மட்டுமே, திருவண்ணாமலை அவிந்த எரிமலை என்று சொல்லி வருகிறார்கள். மாறாக, இன்று வரை அறிவியல் ஆய்வுகள் எதுவும் திருவண்ணாமைலை, குளிர்ந்த எரிமலைதான் என்று கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இந்த நூலை வாசிப்பவர்கள், தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் என்னும் பவுத்தத்தின் முப்பெரும் பிரிவுகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மாத்திரமல்ல, சங்கரர், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்துவாச்சியார், ரமணர், தாராதேவி போன்றோரைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.
இசைஞானி இளையராஜாவின் இசை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களையும் கட்டிப் போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அந்த பாடல்களில், இயல்பாகவே புத்தசமயக் கூறுகள் கலந்திருக்கின்றன என்பதை இந்நூலின் வாயிலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார், நூலாசிரியர் மா. அமரேசன்.
புதிய கோணத்தில் சிந்தித்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து, அச்சு வடிவில் நூலாகக் கொண்டுவந்திருக்கும் நண்பர் மா. அமரேசனுக்கு எனது வாழ்த்துகள்.
சு.இராமசுப்பிரமணியன்,
தோவாளை,
குமரி மாவட்டம்.
mail : srsthovalai@gmail.com
நூல் பற்றிய விபரம்:
வெளியீடு
:
அறம் பதிப்பகம்,
3/584, முல்லை தெரு, கஸ்தூரிபா நகர்,
முள்ளிப்பட்டு கிராமம், ஆரணி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் - 632 316
email : ma.amaresan@gmail.com
mobail : 7519413542
பக்கம் 130
விலை ரூ 200-
( நண்பர் அமரேசனின் வேண்டுகோளுக்கு இணங்க, எனது படமும்)

https://www.facebook.com/ramasubramanian.subbiah/posts/909546809239791?__tn__=K-R



இதையும் படியுங்கள்