Sunday, April 7, 2013

யாழன் ஆதியின் தம்மபதம் – புத்தக விமர்சனம்





கி.பி.623 – ல் வைகாசி விசாக முழுமதி நாளில் முழு நிலவாய் புத்தர் பிறந்தார். தனது 29 ஆம் அகவையில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமான ரோகிணி நதிநீர் பங்கீட்டில் போரை தவிர்க்க துறவியானார்.
புத்தர் போதனைகள்தம்மம் மூன்று தொகுப்புகளாக தொகுக்கப்பட்டன அவை .
1.   பேருரைப் பகுதி
2.   நன்னடத்தைப் பகுதி
3.   உன்னதக் கோட்பாட்டுப் பகுதி
இந்த 3 பிரிவுகளும் ஒவ்வொரு பகுதியாகவும், அவை பல வகைகளாகவும், பற்பல உட்பிரிவுகளாகவும், விரிந்து கொண்டே செல்கின்றன. அந்த வகையில் தொகுக்கப்பட்ட தம்ம புத்கங்களின் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும்.
இவற்றில் பேருரைப் பகுதி என்பது துறவிகளும், குடும்பத்தாருக்கும், பல்வேறு நேரங்களில், காலகட்டத்தில், புத்தரால் நேரடியாக சொல்லப்பட்ட அறிவுரை மற்றும் அறவுரையாகும். இவைகள்.
1.   ஒழுக்கம்
2.   நன்னெறி
3.   சமுக்க் கடமைகள் மற்றும்
4.   வாழ்வியல் பிரச்சனைகளைப் பற்றியதாகும்.
இந்தப் பேருரைகள் 5 வகைகளாகத் பிரிக்கப்பட்டிருக்கின்றன அவை.
1.   நீண்டப் பேருரைகள்
2.   இடைப்பட்ட அளவு பேருரைகள்
3.   உறவுடைக் கூற்றுகள்
4.   படிப்படியான உரைகள் மற்றும்
5.   சிற்றுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிற்றுரைத் தொகுப்பு மட்டுமே 15 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் அணைவராலும் அறியப்பட்ட ஒரு புத்தகம்தான் தம்மபதம் ( தம்மவழி) இது புத்தரின் வாய்மொழியாக வந்தவை.
தம்மபதம் புத்தர் இவ்வுலகில் உள்ள அணைத்து உயிரினங்களின் மீதும், மனிதர்களின் மீதும், கொண்டிருந்த கருணை மற்றும் அவருடைய எல்லையற்ற ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தும்  சிறிய செய்யுள்களின் தொகுப்பாகும். 26 தலைப்புகளைக் கொண்டது. 423 சிறு செய்யுளைக் கொண்டதாகும்.
இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கை, சீனா, சப்பான், பர்மா என எல்லா கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவக் காரணமாக இருந்ததில் போதிதர்மர் துவங்கி பல்வேறு தமிழர்களின் பங்களிப்பு இருந்தாலும், 20ஆம் நுற்றாண்டில் இந்தியாவுக்கு வந்ததில்
1.   கர்னல். ஆல்காட்
2.   ராய்ஸ் டேவிட்ஸ்
3.   பால்காரஸ் என்னும் 3 மேலைநாட்டு அறிஞர்களின் வழியாக மேலைநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பரவியது.
இவர்களோடு இணைந்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பவுத்தம் பரவுவதில் பெரும் பங்கெடுத்தவர். பண்டிதர் அயோத்திதாசர் ஆவார்.
தேரவாத பௌத்தம் உலகின் பழைய பவுத்த முறை என்று போற்றப்படுகின்றது. அந்த பௌத்த முறை பரவியுள்ள  ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் தம்மபதமானது, மெய்யறிவு வளரவும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தினசரி வாழ்க்கை சிக்கலுக்கு எளிய தீர்வை தரும் தீர்வுப் புத்தகமாகவும், ஒழுக்கத்தை பேணவும், அமைதியான மன நிலையில் வாழவும் அறிவுடையோர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை தம்மபதம் விவரிப்பதால் இன்று தம்மபதம் திசையெங்கும் தீர்வு சொல்லும் நீதி புத்தகமாக பயணப்படுகின்றது.
தேரவாத பௌத்தக் கொள்கையின் படி தம்மபத ஒவ்வொரு வரியும், ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது நிகழ்விற்க்கு பதில் தர புத்தரால் சொல்லப்பட்ட வார்த்தையாகும். வரலாற்றில் முதன் முறையாக கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தேகோஷர் உரையெழுதி இருக்கின்றார். அவருக்குப் பின் தம்மத பதம் உலகின் பல பகுதியில் பிரபலமாயுள்ளது.
ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இப்போது அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.
தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவை. பெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்ததுஎன்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தம் இலக்கிய உதயம் பகுதி 11 எனும் நூலில்.
தம்ம பதத்தின் பெருமையை ஹெர்மான் ஓல்டன்பெர்க் எனும் ஜர்மானியப்
பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.
பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும்போதே ஆராய்ச்சியாளனுக்கு ஒரு புனிதமானவரின் கைகளால் தம்மபதத்தை அளிப்பதைவிட மேலான காரியம்  ஒன்றும் இருக்க முடியாது. தம்மபதம் தன்னிரகற்ற அழகுடையது. பொருள் நிறைந்தபழமொழிக்களஞ்சியம்.பெளத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத்
திரும்பப் டிக்க வேண்டிய நூல் இது.”
தம்மத்தை முதலில் தமிழிற்க்கு தந்தவர் அய்யன் திருவள்ளுவர். அவருக்குப்பின் பலரும் தம்மத்தை தமிழ்படுத்தினாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த எம். என். மெகைதீன்., பவுத்த துறவி சோமானந்த தேரா, சி.எஸ்.தேவநாதன், மற்றும் பகவான். ரஐனிஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பகவான் ரசினிஸ் தம்ம பத்த்தை கதைகளாக விளக்கினார். மற்றவர்கள் வசன கவிதை மற்றும் உரைநடைகளாக வெளியிட்டுள்ளனர்.
இவர்களை அடுத்து தமிழ் கவிதைகளில் தனக்கென தனி ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ள யாழன் ஆதியும் தம்மபதம் என்னும் அரியதொரு பொக்கிஷத்தை வெளியிட்டுள்ளார். 180 பக்கமுடைய கையடக்கப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அட்டை படமும், அச்சிட்ட விதமும் மிக அருமை. கவிதைகள் ஆழ்ந்த பொருளை எளிய தமிழில் யாருக்கும் புரியும் வண்ணம் இருக்கின்றன.
கவிதைகள் பிற மொழி சொற்கள் இல்லாமல் எளிய தமிழில் யாருக்கும் புரியும் வகையில் வந்துள்ளது. குழந்தைகளுக்கும் புரியும் விதமாய் உள்ளது.
மனம் முன்னோடி
 மனம் தலைமை
தீயது பேசும்
தீயது செய்யும் மனம்
துன்பத்தால்
தொடரப்படும்
காளையைத் தொடரும்
வண்டியாய் என முதல் கவிதையை துவங்கி கடைசி கவிதையான
அந்த துறவி
தன் பழைய பிறப்புகளை
அறிந்தவர்
மகிழ்வை
துன்பத்தை அறிந்தவர்
பிறப்பின் முடிவை அடிந்தவர்
மேனறிவுடன் இருப்பவர்
முழுமையடைந்தவர்
பற்ற்ற்ற நிலையை அடைந்தவர்
அவரே அறவோர் என்னும் கடைசி கவிதைக்க  வரை, உள்ளங்கை நெல்லிக் கணி போல படிக்கப்  படிக் இன்பம் பயப்பனவாக இருக்கின்றது.
ஒவ்வொரு கவிதையும் சில நேரங்களில் திருக்குறளை புதுக்கவிதையில் வடித்துள்ளோரோ என்னும் உணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை. இது யாழன் ஆதியின் அற்புதமான படைப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஏற்கனவே யாழன் ஆதியின் செம்பறை கவிதைப் புத்தகம், பெரியார் பல்களைக் கழகத்தில் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருப்பது போல இந்த தம்மபதம் நுலும் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பாநுலாகும்.
இறுதியாக புத்தர் தன்னுடைய ஒளியால் மனிதனின் இருள் விலக பேசிய தம்மபதம், இங்கு யாழன் ஆதிகவிதையால் படிப்பவரின் மனத்தில் தம்மபதம் ஆட்சி செய்யவும், ஆளுமை செய்யவும் புத்தராலேயே அருளப்பட்டிருக்கின்றது.

வெளியீடு – புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை – சென்னை கிளை 
விலை – 100 உருவா.



Wednesday, April 3, 2013

ஆயிரம் கால அடிமைகள் - தமிழர்கள்



தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆட்சி நடந்த காலங்களை கணக்கிலெடுத்தால் வரலாற்றில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர்களின் ஆட்சி நடைபெறவில்லை.
மதுரை நாயக்காகளின் ஆட்சி, 300 வருடம்
கிருஷ்ணதேவராயரின் ஆட்சி 180 வருடம்
நவாப்புகளின் ஆட்சி
போர்த்துக்கிசியர்களின் ஆட்சி,
மராத்தியர்களின் ஆட்சி.
பாளையக்காரர்களின் ஆட்சி
வெள்ளையர்களின் ஆட்சி 300 வருடங்கள்
என நடந்த ஆட்சிகள் யாவும் அயலவர்களின் ஆட்சிதான்.

விடுதலை அடைந்து அமைந்த அரசுகளில், அறிஞர் அண்ணா, மற்றும் பச்சைத் தமிழன் காமராசர் ஆகிய இருவர்களின் ஆட்சித் தவிர மற்ற ஆட்சியாளர்களை தமிழர்களின் ஆட்சியாக கருத முடியாது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒர் இனம் தொடர்ந்து அயலவர்களின் ஆட்சியில் இருந்திருக்கின்றது என்றால், அந்த இனத்திற்க்கு விடுதலை வேட்க்கை இல்லை என்றுதானே பொருள்.
இன்றைய வரலாற்றில் நாம் தமிழரின் வீரம் என்று படிப்பவை யாவும்,  தமிழனுக்கும், தமிழனுக்கும் நடந்த பங்காளிகள் சண்டைதானே. ஒற்றுமையாக இருக்கத் தெரியாத ஒரு இனம் தானே தமிழினம்.
வரலாற்றில் 300சேர,சோழ,பாண்டியரின் 300 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடந்த கூட்டாட்சியை கலிங்க மன்ன்ன் காரவேலன் உடைத்தலிருந்து அமைதி நிலவியிருக்கின்றதா?
வெல்லாள தமிழர்கள், 
திராவிடத் தமிழர்கள்,
உயர் சாதி தமிழர்கள்,
என நீங்கள் அணைவரும் சேர்ந்து தலித்துகளுக்கு செய்த தீண்டாமை கொடுமைகள் கொஞ்சமா, அவர்கள்( தலித்துகள்)தமிழர்கள் இல்லையா? வேறு மாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களா?
தமிழர்களால் தனித்து உழைத்து அரும் சாதனைகள் செய்ய முடியும், ஆனால் கூட்டு செயல்பாட்டில் முனைப்பு காட்டுவார்களா? ஏனெனில் அவரிகளிடம் அதிகம் இருப்பது புகழ் போதை, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்த வேண்டும் என்னும் எண்ணம்.
அவர்களால் சேர்ந்து உணவருந்த இயலுமா? தன்சாதி மற்றும் மற்ற சாதிகாரர்களுடன், ஆனால் சேர்ந்து மலம் கழிப்பான் எல்லா சாதிகாரனுடனும். இதுதான் தமிழன் புத்தி.
தமிழினம் என்று பேசுவோர்கள், தங்களுடைய சுய சாதியைத் துறந்து தங்களை தமிழன் என்று அடையாளம் படுத்திக் கொள்ளும் துணிச்சல் உண்டா?
நடிகர்களை தமிழர்கள் என்று நம்பியிருக்கின்றீர்களே. தமிழ் நடிகர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா? தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் என்று தெரியுமா? அவர்களுக்கு எல்லாம் ரசிகர் மன்றம் உண்டா? அவர்களை உச்ச நட்சத்திரம் என்று சொல்ல முடியுமா தமிழ் திரைப்பட ரசிகர்களால்.
உங்களுக்கு எல்லாம் தமிழ் பேசினால் அவர்கள் எல்லாம் தமிழர்கள். மார்வாடி தமிழ் பேசி இந்த நாட்டின் வளத்தை கொள்ளையடித்து குசராத்துக்கு கொண்டு போகின்றான்.
மலையாள நடிகர்கள் தமிழ்பேசி, தமிழர்களின் வருமாணத்தையெல்லாம் திரைப்பட ரசனை வழியாக சுரண்டி அவர்களின் மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றான்.
கன்னட நடிகர்கள் எல்லாம் தமிழ்பேசி, தமிழர்களின் வருமாணத்தையெல்லாம் திரைப்பட ரசனை வழியாக சுரண்டி அவர்களின் மாநிலத்துக்கு சொத்துக்களாக கொண்டு செல்கின்றான்.
ஆட்சியில் இருப்பவர்களும், அரசியல் வாதிகளும், அடுக்கு மொழி பேசினால், தமிழர்கள் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவர்களை ஆசியாவின் மிகப்பெரும் பணக்கார்களாக வளர்த்து விட்டு பிறகு தமிழினத்துக்கு துரோகம் செய்கின்றனர் என கதறுவது.
தமிழில் பேசுவது இழுக்கு என்னும் மனோபாவம், தமிழர்களுக்க்கு மட்டுமே உரியதாகும். தேசத்தந்தை என்று போற்றும் மோகன்தாஸ் கரம்சந் காந்தியார்கூட தனது தாய்மொழியான மரத்தியில்தான் பேசுவாராம். ஆனால் இங்கு பல தமிழின தலைவர்களுக்கு தாய்மொழியே தமிழ் கிடையாது.
இன்றைக்கு ஈழ ஆதரவு போராட்டம் உக்கிரமாய், உச்சபட்சமாய் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், யார் யாரையோ தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அடிமை புத்தியை விட்டு விட்டு . இனத்தை வாழவைக்கும் வழிகளைத் தேடுங்கள். தமிழினத்தின் வரலாற்றை மீள் வாசிப்பு செய்யுங்கள், அப்பொழுதுதான் உங்களால் அம்பேத்கர் சொன்னது போல, வரலாறு தெரிந்தால்தான் வரலாற்றைப் படைக்க முடியும்.
ஒரு இனம் தன்னுடைய பலம் தெரியாமல் பல்லாயிரம் ஆண்டுகள் வாழலாம். ஆனால் தன்னுடைய பலவீனம் தெரியாமல் வாழ கூடாது. தமிழினம் தன்னுடைய பலமவீனம் தெரியாமலே பலநுர்ரு ஆண்டுகள் வாழ்ந்த்து கொண்டிருக்கின்றது. அது
1.   சாதியப் பாகுபாடு
2.   திரைப்பட ரசனை
3.   ஒற்றுமையின்மை
4.   தொலைநோக்கு பார்வையின்மை
5.   பொருளாதார பார்வையின்மை
6.   எல்லோரையும் நம்புவது தலைவனாக ஏற்றுக் கொள்வது.

 பட்டியல் நீளும். அதனால் ஆகப் போகும் பயனில்லை. இதை முகநுலில் படித்து விட்டு பகிரவோ, விரும்பவோ செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்த்தாக நிணைத்து விடுவோம்.

Saturday, March 30, 2013

தள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.


தள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.


இன்று இந்தியாவில் 5 ஒருவராக தலித் மக்கள் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட  மக்கள் தொகை ஆய்வறிக்கை சொல்கின்றது. இந்த மக்கள் அணைவரும், அரசியல், சமுக பொருளியல் கண்ணோட்டத்தில் நலிவுற்றே வாழ்கின்றனர்.
அதிலும் அரசு ஆதிக்க சாதியினரின் மனோபாவத்திலேயே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் அடைந்து  60ஆண்டுகளுககு மேல்  ஆன பின்னும். நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக நீ உரிமை என்றோ, சம பங்கீடு என்றோ பேச கூடாது. இதுதான் அந்த ஆதிக்க சாதியினரின் மனோபாவம். அரசும் இது வரை இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. 
படித்த தலித்து இளைஞர்கள் சுய தொழில் செய்ய வங்கி கடன் விண்ணப்பித்தால், வங்கி கடன் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவதற்க்கும், அதற்கான மான்யத்தைப் பெறுவற்க்கும் அவர் படாதபாடு படுகின்றார்.
அதற்க்கு காரணம், மான்யம் ஒரு துறையிடம் இருந்தும், தாட்கோவில் இருந்தும், கடன் உதவி வங்கியில் இருந்தும் வருவதும் ஒரு காரணம்.  இதை மாற்றி அரசாங்கமே தலித்துகளுக்கு என ஒரு வளர்ச்சி வங்கி துவங்கி அவர்களுக்கான கடன் உதவி மற்றும், மான்யம் என இரண்டையும் ஒரே இடத்தில் கொடுத்தால். தலித் இளைஞர்களுக்கான அலைச்சல் மிச்சமாகும். கடனும் ஒழுங்காய் போய்ச்சேரும்.
தலித்துகள் இன்றைய காலத்தில் அரசியல் அதிகாரம் பெறுவதற்க்கும், அவற்றை தக்க வைப்பதற்க்குமே பொருளாதார அதிகாரம், தேவைப்படுகின்றது. அதற்க்கு அவர்களுக்கான நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
அந்த நிதி நிறுவனங்ள்,
·        குடும்பம் சார்ந்தும் இருக்கலாம்.
·        கிராம அளவிலும் இருக்கலாம்,
·        மாவட்ட அளவிலும் இருக்கலாம். ஆக தனியொரு நபரை முன்னேற்ற முணையாமல், குடும்பம், கிராம்ம், மாவட்டம், மாநிலம் என்ற அளவில் உள்ள தலித்துகளை முன்னேற்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றது.
நிறுவனங்களை உருவாக்காத எந்த சமுகமும் முன்னேற்றம் அடைந்த வரலாறு கிடையாது. தலித்துகள் இன்னும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்க்கு. அவர்களுக்கென நிதி நிறுவனங்கள் கிடையாது. அத்தகைய நிதி நிறுவனங்களை நாம் இதுவரை அரசிடம் கேட்டதும் கிடையாது.
அல்லது நமக்கான நிதி நிறுவனங்களை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். அது வங்கியாகவே, நுன் நிதி நிறுவனமாகவே, மகா சன சங்கமாகவே எதோ ஒரு வடிவத்தில் இருந்து இந்த மக்களை உயர்த்த ஒரு கருவியாக செயல்பட்டால் போதும்.
தலித்துகளுக்கான பொருளாதார மேம்பாடு அடைவதற்கான நிதி நிறுவனம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்.எந்த வகையில் செயல்பட வேண்டும் என்றும்.  உங்களிடம் இருந்து கருத்தும் ஆலோசனையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி. 

Tuesday, March 26, 2013

நல்லுணர்வு


புத்தரின் நான்கு உண்ணத வாய்மைகளான

1.      துக்கம் வாழ்வில் உள்ளது.
2.      துக்கத்திற்கான காரணம் உள்ளது.
3.      துக்கம் ஒழிக்கப்படக்கூடியது.
4.      துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது.
எண்வழி பாதை என்பது நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது என்பதை குறித்து பேசுவது. அவ்வாறு துக்கத்தை ஒழிக்கப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளே எண்வழிப் பாதையாகும். அவை ,
        1. நல்லறிவு

  • 1.    நல்லுணர்வு       
  • 2.     நற் கருத்து   
        2. நல்லொழுக்கம்

  • 3.     .நல் வாய்மை
  • 4.     நற் செயல்
  • 5.    நல் வாழ்க்கை
      3. நற்கருணை

  • 6.      நன் முயற்சி
  • 7.      .நல் மனம்
  • 8.      நல் அமைதி
நல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிற – என்பார்.

தெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.
இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதே ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும் “ மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.

நல்லுணர்வு என்னும் கருத்தை ஒரு சிறிய சென் கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
     ஒரு நாள் அடர்ந்த காட்டிற்க்கு வேட்டைக்குச் சென்ற மன்னர், ஒய்வெடுக்க கருதி அந்த அடர்ந்த காட்டில் யாருடைய தொல்லையும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையிலிருந்த ஒரு சென் மடத்திற்க்குச் சென்றார். அந்த மடத்தின் அமைதியும், துறவிகளின் உபசரிப்பும் அவரை மெய் மறக்கச் செய்தது. ஒரு புத்துணர்வு பெற்று கிளம்பினார். அரசர் சென்ற சில தினங்கள் கழித்து, அரசரின் காவலர்கள், மடத்திற்க்கு ஒரு ஓலையும், பரிசும் கொண்டு வந்து கொடுத்தனர்.
     ஓலையில் மடத்திற்க்கு கொஞ்சம் நிலங்களையும், மாண்யத்தையும் அறிவித்திருந்ததுடன், அந்நாட்டிலுள்ள அனைவரும் அந்த மடத்திற்க்குச் சென்று வந்தால் நாட்டில் அமைதி நிலவும் என்று எழுதி இருந்த்துடன், மடத்திற்க்காக அழகிய பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
அரசர் பரிசு அனுப்பிய செய்தியறிந்து, மக்கள் அவற்றைப் பார்ப்பதற்காக மடத்திற்க்கு வந்து போனார்கள். மடத்திற்க்கு மக்கள் கூட்டம் அரசரின் நிணைவுப் பரிசை பார்ப்பதற்க்கு வந்து போனது, எனவே, கூட்டத்தைக் குறைப்பதற்காக அரசருடைய நிணைவுப் பரிசை பார்க்க வருகின்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம், வசூலிக்க வேண்டும் என்று தலைமை குரு சொன்னதும், அவ்வாறே நுழைவுக் கட்டணம், வசூலித்தனர் மாணவர்களும், ஆனாலும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. மடத்திற்க்கு வருமானமும் அதிகமாக வந்து கொண்டே இருந்த்து. ஒரு நாள்
மடத்திலிருந்த சீடன் ஒருவன் அந்த நினைவுச் சின்னத்தை துடைத்து வைக்கும் போது, கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது. உள்ளே இருந்த தலைமைத் துறவி கேட்டார். என்ன சத்தம் என்று  மாணவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கை கால் நடுக்கத்துடன், பயத்தில் உளறலோடு “ அரசரது நிணைவுச் சின்னம் உடைந்து விட்டது என்று சொன்னான். “ உடைந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு உனது அடுத்த வேலையை பார் என்றார். இதுதான் நல்லுணர்வு என்பது.
மடத்தை பார்வையிட வந்த மக்கள் கூட்டம், துறவியின் கருத்தையோ, அவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வந்த கூட்டம் அல்ல. கட்டணம் வசூலித்த போதும், மடத்திற்க்கு வருமாணம் வந்தாலும், அது நிரந்தரமானதல்ல என்பதும், திடிரென்று வந்த புகழும், வளர்ச்சியும், திடிரெண்று மறையும் என்பதை துறவி உணர்ந்தே இருந்தார். இதுதான் நல்லுணர்வு.
தன்னை உணர்தலும், தனது கடமையை சரியாக செய்தலும், தன்னைச் சுற்றி நடப்பவைகளை உணர்தலுமே நல்லுணர்வு.
நல்லுணர்வை வலியுறுத்தி சில திரைப்படப் பாடல்களும் வந்துள்ளன.
நிணைக்கத் தெரிந்த மனமே உணக்கு மறக்கத் தெரியாதா?
உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள்   இருக்கும்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான் ”   என்ற பாடல்களில் வருகின்ற எல்லாமே நல்லுணர்வு என்னும் கருத்தை வலியுறுத்தி வந்தவைதான்.
யாரோடு இருக்கும் போது நாம் மகிழ்ந்திருக்கின்றோமோ, அவராலே நாம் துன்பத்திற்க்கு உள்ளாவோம்.
யாரை நாம் உயிராக கருதுன்றோமோ? அவராலே நமக்கு உயிர் போகும் அளவுக்கு துன்பம் வரும், என்பதை புரிந்து கொண்டு பழகுவதே நல்லுணர்வு.
இன்று நண்பராக இருப்பவர் நாளை எதிரியாகவும் மாறலாம் என்று புரிந்து கொண்டு பழகுதலே நல்லுணர்வு.


புத்தரின் நாண்கு உண்ணத வாய்மைகளில் நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை அல்லது துன்பத்தை போக்குவதற்க்கு வழியிருக்கின்றது அது தான் எண்வழிப் பாதை, அதை தமிழுக்கு தந்தவர் ஓளவையார். ஔவையாரின் ஆத்திச் சூடி எண்வழி மார்க்தைத்தான் தமிழ் மக்களுக்கு போதிக்கின்றது. அது நல்லுணர்வு என்னும் கருத்தை கீழ்கண்ட பாடல்கள் மூலமாக வலியுறுத்துகின்றது.
நல்லுணர்வு
1.      ஏற்பது இகழ்ச்சி
2.      ஒப்புரவு ஒழுகு
3.      தந்தை தாய் பேண்.
4.      காப்பது விரதம்.
5.      சான்றோரினத்திரு.
6.      தக்கோனெனத்திரு.
7.      நன்மெய் கடை பிடி
8.      தக்கோனெனத்திரு.
9.      நேர்பட ஒழுகு.
10.   பெரியாரைத் துணைக்கொள்
11.   மாற்றானுக்கு இடம் கொடேல்.
12.   மேன்மக்கள் சொற்கேள்.
13.   உத்தமனாய் இரு.


ஆத்திச்சூடியின் உண்மையான பொருளுணர்ந்து அதனை விளக்கியவர் பண்டிதர் அயோத்தி தாசர். மற்றவர்கள் அது பௌத்தம் குறித்து பேசுவதை புரிந்து கொள்ளாமல் விளக்கியுள்ளனர். இரு வேறு வகையான விளக்கங்களையும் உங்களுக்கு கீழே தருகின்றேன். 



ஏற்பது இகழ்ச்சி
nghJ tpsf;fk;:
·        ,we;J tho;tJ ,opthdJ. mjdhy; ahrpf;f $lhJ.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        xUth; nrhy;Yk; thh;j;ijia tprhhpidapd;wp Vw;Wf;nfhs;tJ  ,opitj;jUk;
2. Xg;GuT xOF
 nghJ tpsf;fk;:
·        cyf elj;ijia mwpe;J nfhz;L> mj;NjhL nghUe;JkhW ele;J nfhs;
 mNahj;jpjhrh; tpsf;fk;:
·        kdjpy; mikjpnfhz;L Kfkyh;r;rpNahL tho;jy; Ntz;Lk;
3. je;ij jha; Ngz;
nghJ tpsf;fk;:
·        cd; je;ijiaAk; jhiaAk; mth;fSila KJikf; fhyk; tiu md;Gld; fhg;ghw;W.
mNahj;jpjhrh; tpsf;fk;:
cd; je;ijiaAk; jhiaAk; mth;fSila KJikf; fhyk; tiu md;Gld; fhg;ghw;W
4. fhg;gJ tpujk;.
nghJ tpsf;fk;:
·        jhd; nra;aj; njhlq;fpa jUkj;ij tplhky; nra;tNj tpujkhFk;. (my;yJ)
·        gpw caph;fSf;F Jd;gk; nra;ahky; mtw;iwf; fhg;ghw;WtNj jtk; MFk;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;nyhOf;fq;fis tplhky; fhg;ghNj tpujk;
5. rhd;Nwhhpdj;jpU.
nghJ tpsf;fk;:
o   mwpnthOf;fq;fspy; epiwe;j nghpNahh;fSld; Nrh;e;J ,U.
mNahj;jpjhrh; tpsf;fk;:
         mwpnthOf;fq;fspy; epiwe;j nghpNahh;fSld;
          Nrh;e;J ,U.
6. jf;Nfhnddj;jphp

nghJ tpsf;fk;:
·        nghpNahh;fs; cd;idj; jf;ftd; (Nahf;fpad;> ey;ytd;) vd;W GfOk;gb ele;J nfhs;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        vLj;j nraiy ntw;wpfukhf Kbf;f ty;yth;fSld; Nrh;e;jpU.
7. ed;ik filg;gpb

nghJ tpsf;fk;
·        ey; tpiz nra;jiy vt;tsT ,ilA+W te;jhYk; cWjpahf njhluTk;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;ytd; vd;W nrhy;yj;jFe;j nray;fis tplhky; njhlh;e;J nra;
8. Neh; glnthOF.
nghJ tpsf;fk;:
·        xOf;fq;jtwhky; Neh; topapy; el.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        miztUf;Fk; Neh;ikahdtdha; ele;J nfhs;
9. nghpahiuj; Jizf;nfhs;.
nghJ tpsf;fk;:
·        mwptpNy rpwe;j nghpNahh;fis cdf;Fj; Jizahfg; Ngzpf;nfhs;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        fy;tp> njhopy;><if> mwpT kpFjpahf cs;s Nkd;kf;fis rhh;e;J tho;
10.      khw;whDf;fplq;nfhnly;.
nghJ tpsf;fk;:
·        giftd; cd;id Jd;GWj;jp cd;id nty;tjw;F ,lk; nfhLf;fhNj.

mNahj;jpjhrh; tpsf;fk;:
·        tQ;rfh;fs; ek;ik mDf tha;g;Gfs; juhNj.
11.      Nkd; kf;fs; nrhw;Nfs;.
nghJ tpsf;fk;:
·        ey;nyhOf;fk; cila nghpNahh; nrhy;iyf; Nfl;L el.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;nyhOf;fk; cila nghpNahh; nrhy;iyf; Nfl;L el.
12.      cj;jkdha; ,U.
nghJ tpsf;fk;:
·        cah;e;j Fzq;fs; nfhz;ltdhf thO
mNahj;;jpjhrh; tpsf;fk;:
       midtUk; ey;ytndd;W nrhy;Yk; gb tho;


இத்தகைய உண்மைகளை புரிந்து கொண்டு வாழும் போதுதான் புத்தரின் போதணையான உனக்கு நீயே ஒளி என்ற உண்மை நமக்குப் புரியும். நம்மாலும் அதைப் போல் வாழ இயலும்.

-          நல்லுணர்வு என்னம் தலைப்பில் பௌத்தர்களின் இரண்டாவது பௌர்ணமி குடும்ப விழா, 24.03.13 அன்று வேலுர் மாவட்டம் விருஞ்சிபுரம் கிராமத்தில் தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்புத் ஆசிரியர் திரு. வெங்கடேசன் அவர்களின் இல்லத்தில் நடந்த போது நான் பேசியது. 


இதையும் படியுங்கள்